Quantcast
Channel: லொள்ளும் நக்கலும்
Viewing all 46 articles
Browse latest View live

கவி-Die

$
0
0


அருண்:ஒரு மாலை இலவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம் ஸட்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்


கார்த்திக்:என்னடா பாட்டெல்லாம் பலமா இருக்கு, Dailyum தான் அனுஷாவ பாக்குற.. என்னிக்கும் இல்லமா இன்னிக்கு எதுக்கு Song?

அருண்:
மச்சி.. அனுஷா இன்னிக்கு என்ன பண்ணா கேட்டா நீ Fire-Stationக்கு போன போடுவடா..

கார்த்திக்:
ஏன்டா? நம்ப ரூம கொழுத்த போறாளா?

அருண்:
நா சொன்னது உன்னோட Stomach-Burning அணைக்கடா வெண்கலம்..

கார்த்திக்:
அடத்தூ.. மேட்டர சொல்லு

அருண்:
நா ஃபூட்-பால்க்ரவுண்ட்ல விளையாடிட்டு இருந்தேன்டா

கார்த்திக்:
டேய்.. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்.. உனக்கு ஃபூட்-பால் தெரியுமா?

அருண்:
போன வாரம் நாம மைலோவாங்குனதுக்கு ஃப்ரீயா கொடுத்தாங்களே..

கார்த்திக்:
டேய்.. அது வாலி-பால்டா.. இப்போ தான் புரியுது எப்புடி அந்த பால் மூணு நாள்ல கிழிஞ்சிடுன்னு.. போனா போகட்டும், You Continue..

அருண்:
நா வேடிக்க தான்டா பார்த்தேன்.. ஒரு கால் குறையுது வரியானு ரமேஷ் கேட்டான்.. அதுனால போய் ஆடுனேன்.. எனக்கும் ஃபூட்-பால் தெரியும்டா..

கார்த்திக்:
Chelseaதெரியுமா?

அருண்:
ராபர்ட்டோட ஃபிகருடா.. சப்ப ஃபிகரு, ஆனா அநியாயத்துக்கு சீன போடுவா..

கார்த்திக்:
டேய்.. Gerrardதெரியுமா?

அருண்:
ECE சீனியர்? அவனும் அனுஷாவ ட்ரை பண்றானா? மச்சி நீ தான்டா ஹெல்ப் பண்ணனும்..

கார்த்திக்:
அடத்தூ.. உன்கிட்ட கேட்டேன் பாரு..

அருண்:
மச்சி.. கேளுடா.. அப்போ அனுஷா வந்து என்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு தனியா கூப்டா.. நானும் அவளும் கிறுக்கல் மரத்துக்கு பின்னாடி போனோம்..

கார்த்திக்:
போயி...

அருண்:
அவ சொன்னா எவ்வளவு நேரம் தேடிட்டு இருந்தேன்.. உனக்கு தான் மொதல்ல கொடுக்கணும்னு ரொம்ப நாளா காத்துட்டு இருந்தேன்னு சொல்லி வெக்கத்தோட சிரிச்சா..

கார்த்திக்:
டேய்.. கில்லாடிடா நீ.. தந்தாளா?

அருண்:
ஆமா.. தந்தா..

கார்த்திக்:
எங்க? left or right?

அருண்:
டேய்.. பீசாங்கைல எப்டிடா வாங்குறது? Rightல தான்..

கார்த்திக்:
இத்தன நாள் நா தான் பொண்ணுங்க விஷயத்துல கில்லாடின்னு நினச்சேன்.. ஆனா நீ தான்டா உண்மையான ஜலபுலஜன்க்ஸ்.. இன்னும் ரெண்டு நாளைக்கு அந்த Right Handa கழுவ மாட்ட..

அருண்:
ஏன்டா?

கார்த்திக்:
அவ முத்தம் தந்தால..?

அருண்:
முத்தமா?

கார்த்திக்:
அப்போ இல்லயா?

அருண்:
நா முத்தம் தந்தான்னு சொல்லவே இல்லயே?

கார்த்திக்:
அட நாயே நீ கொடுத்த பில்ட்-அப்க்கு நா என்னமோ imagine பண்ணேனே.. இப்டி பொத்துனு போட்டுட்டியே?

அருண்:
அவ மேரேஜ்- இன்விடேஷன் தந்தாடா..

கார்த்திக்:
என்னது? அதுக்குள்ள கல்யாணமா?

அருண்:
23 வயசு ஆச்சுடா.. சின்ன வயஸா என்ன?

கார்த்திக்:
டேய்.. அப்போ இவ்ளோ நாளு வயஸு பெரிய பொண்ணயா லவ் பண்ணிட்டு இருந்த? எத்தன வருஷம் எந்தெந்த க்லாஸ்ல பேஸ்மெண்ட் போட்டா?             
 

அருண்:ஷப்பா.. எல்லாத்தயும் அரகொறையா கேக்குறதே உனக்கு வேலயா போச்சு.. கல்யாணம் அவ அக்காக்கு..

கார்த்திக்:
ஓ.. அவங்க அக்கா வேற இருக்குறால அவங்கொக்கா..

அருண்:
என்ன Chief-Guestஆ Invite பண்ணிருக்காடா..

கார்த்திக்:
ஆமா.. நீ தான் சீப்பா கிஃப்ட் தருவ.. அதுனால போல..

அருண்:
மொக்க மண்டையா..

கார்த்திக்:
பின்ன இது என்ன 500 பேருக்கு இலவச திருமணமா இல்ல விருது வழங்கும் விழவா Chief-Guestஆ கூப்ட..

அருண்:
ஸாரிடா, டங்க்-ஸ்லிப் ஆகிடிச்சு.. பத்திரிக்கைல முதல் தடவையா பேர பாக்குறேனா.. அதான்..

கார்த்திக்:
கொய்யால.. பெறுநர்ல பேரு வந்ததுக்கே இந்த ஆட்டமா? மாப்பிள்ளையா உன் பேரு வந்தா புடிக்க முடியாது போல.. ஆனா ஒரு ஐடியா..

அருண்:
கல்யாணத்துக்கு என்ன கிஃப்ட் வாங்குறதுன்னா?

கார்த்திக்:
இல்லடா, இப்போ அனுஷா அக்காக்கு கல்யாணம்னா அவளுக்கு ரூட் க்ளியர் ஆகிடிச்சு.. இப்போ அந்த ரூட்ல நாம காதல் வண்டிய ஒட்டணும்டா..

அருண்:
நாமலா? டேய்.. உன் மனசுல இந்த ஆச வேற இருக்கா?

கார்த்திக்:
ஒரு ஃப்லோல சொல்டேன்டா.. கிருஷ்ணர் எப்பிடி அர்ஜுணர்க்கு ஹெல்ப்ஃபுல்லா இருந்தாரோ அது மாதிரி உன் காதலுக்கு நா இருக்கேன்டா..

அருண்:
சரி ஐடியாவ சொல்லு..

கார்த்திக்:
பொண்ணுங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் Snacks, Pizza, நகை, ட்ரெஸ், பொம்ம, Cute Heroesஅப்றோம்.... கவிதை..

அருண்:
ஸோ நாம என்ன பண்ண போறோம்?

கார்த்திக்:
அவளுக்கு கவிதையா ஒரு லவ் லெட்டர் எழுதலாம்டா.. லவ் லெட்டர்..

அருண்:
மச்சி வேணும்னா அந்த முன்னாடி சொன்ன Snacks, Pizza, பொம்ம ட்ரை பண்ணலாம்டா.. நமக்கு எது வருமோ அத ட்ரை பண்றத விட்டுட்டு தெரியாத விஷயங்கள எதுக்கு பண்ணனும்?

கார்த்திக்:
இது தான்டா பெரிய சக்ஸஸ் ஆகும்..

அருண்:
கல்யாண பத்திரிக்கைல பேர் வந்துச்சுன்னு சந்தோசப் பட்டேன்.. ஆன இப்போ நீ கொடுக்குற Ideaல கருமாரி பத்திரிக்கைல பேர் வரும் போல இருக்கே.. அப்றோம் கண்ணீர் அஞ்சலில என் ஃபோட்டோவ நடுவுல போட்டு காலேஜ் ஃபுல்லா ஒட்டுவாங்கடா.. இது வேணாம்..

கார்த்திக்:
டேய் பயந்தவனுக்கு பொக்க ஃபிகர் கூட மடியாதுன்னு வள்ளுவர் சொல்லிருக்கார்டா..


அருண்:
அவர் 1330 சொல்லுவாருடா.. எனக்கு கவிதை எல்லாம் எழுத வராதுடா.. ஸ்கூல்ல நா மனப்பாட பாடல் எழுத சொன்னாலே முழிச்சிட்டு இருப்பேன்.. கவிதைலா?

கார்த்திக்:
நா எதுக்குடா இருக்கேன்..

அருண்:
நீ கவிதை எழுதுவியாடா?

கார்த்திக்:
மச்சி.. எனக்குல்ல ஆயிரம் திறமைகள் ஒழிந்து இருக்குடா..இனிமேல் ஒண்ணு ஒண்ணா உனக்கு காட்ட போறேன்.. 

2 மணி நேரம் கழித்து பார்த்தால் அந்த அறையில் எங்கும் காகித குவியல்கள்.. கார்த்திக் வாயில் பேனாவை வைத்து எதோ யோசித்து கொண்டுருக்க, அருண் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டுருக்கிறான்


கார்த்திக்:
அன்க்க்க்..

அருண்:
என்னடா..

கார்த்திக்:
அது இல்லடா..

அருண்:
டேய்.. இது என்ன எக்ஸாம் பேப்பராடா? இப்டி மறச்சு மறச்சு எழுதுற? என்ன எழுதுறன்னு காட்டுடா..

கார்த்திக்:
மச்சி.. கற்பனை குதிரைல பயனிக்கும் போது லிஃப்ட் கேட்டு Disturb பண்ணாதடா..

அருண்:
டேய்.. டேய்.. நா முத்துக்குமார் மச்சான் மாதிரியே பேசாதடா
 
5 நிமிடங்கள் கழித்து

கார்த்திக்:
முடிச்சிட்டேன்டா..

அருண்:
என்னடா இங்கிலிஷ்ல எழுதிருக்க?

கார்த்திக்:
இப்போல்லா எந்த பொண்ணுடா தமிழ் கவிதை படிக்கிறாங்க?? நீ எப்டி இருக்குனு சொல்லு..
 
Once I dreamt of playing See-saw
And you were with me Anusha
Your childish speech is as sweet as Badushah
To hear this I will drop my jaw
 

அருண்:டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....

கார்த்திக்:
மச்சி கீழ படிடா
 
Anusha you are my heart-beat
I swear I wont cheat
Sooner or later we will meet 
Then I will sweep you off your feet

அருண்:
மச்சான்ன்ன்ன்ன்ன்....


கார்த்திக்:
எப்புடி?
 
I cant wait till Valentine's day
I Love you is what I want to Say
I love you Anusha 
Come let us play See-saw

கார்த்திக்:
ஏன் மச்சா கண் கலங்கிருக்கு? ஓஓ.. நமக்காக இவ்லோ பண்றானேன்னு ஆனந்த கண்ணீரா?

அருண்:
டேய்.. இதலா ஒரு கவிதைன்னு என்ன படிக்க வச்சிட்டியேடா.. சொரி நாயே..

கார்த்திக்:
ஏன்டா புடிக்கலயா.. கவிதைல எதாவது Changes?

அருண்:
டேய்.. இத கவிதைன்னு சொல்றத நிறுத்து.. அசிங்கமா திட்டிட போறேன்.. அவள கரெக்ட் பண்ண ஐடியா தாடான்னு கேட்டேன், இத அவகிட்ட கொடுத்து ரெட் பென்ல கரெக்ட் பண்ண கேக்கல.. யோசிச்சேன்டா.. எனக்குல்ல ஆயிரம் திறமை ஒழிஞ்சு இருக்கு சொல்லும் போதே யோசிச்சேன்.. அது ஒழிஞ்சே இருக்கட்டும், வெளிய காட்டாத..

கார்த்திக்:
மக்சி.. உனக்கு Poem types தெரியுமா? இது Englishல Rareஅ எழுதுற Genreடா.. First ரெண்டு லைன்ல கடசி வார்த்தை கடசி ரெண்டு லைன்ல கடசி வார்தையா வருது பாருடா.. இதெல்லம் எழுத டலென்ட் வேணும்..

அருண்:
டேய்.. ஓடிடு அப்றோம் உனக்கு கண்ணீர் அஞ்சலி அடிக்க வேண்டி இருக்கும், இத கசக்கி..

கார்த்திக்:
மச்சி.. வேணாம்டா..

அருண்:
கசக்கி குப்ப தொட்டில போட மாட்டேன்டா.. அப்டி கசக்கி போட்டா குப்ப தொட்டிக்கே அசிங்கம்..

கார்த்திக்:
மச்சி வேணா Greeting-card?

அருண்:
எனக்கு லவ்வே வேணாம்டா.. 



வருகைக்கு நன்றி!!

ராவணன்- ”டென்”ஷன்

$
0
0
கொஞ்ச நாள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ப்ளாக் பக்கம் வரமுடியல.. இனி உங்க ஆரோக்யம் கெட்டுப்போனா அதுக்கு நான் பொறுப்பு இல்ல..

எப்டி விஜய் படத்த நல்லா இருக்குன்னு சொன்னா குத்தமோ, அது மாதிரி மணிஜி படங்கள குறை சொன்னா நமக்கு சினிமா அறிவு இல்ல, அவரோட படங்கள ரசிக்க ஒரு இது வேணும், ஞானக்கண் இருந்தா தான் ரசிக்க முடியும்ன்னு என்னமோ சினிமாவ கண்டுபிடிச்சவனோட பேரன்-பேத்திகளாட்டும் சண்டைக்கு வருவாங்க.. பிசா, பர்கர் சாப்பிடுறது எப்டி UBER COOLன்னு காட்டிக்றாங்களோ, அது மாதிரி I’m Fan of Mani Sir Moviesசொல்றது ஃபஷனா போச்சு..

ராவணன் படம் எப்டிடான்னு நண்பர்கள் கிட்ட கேட்டா காமரா சூப்பரு, சினிமாடொக்ராபி சீனு, லொக்கேஷன் செம மச்சி, ஒளிப்பதிவு ஒத்தா பின்னிட்டாங்கல, இந்திய சினிமால்ல இது மாதிரி படப்பிடிப்பு இல்ல, லைட்டிங்ல ரகள பண்ணிட்டாங்க மாமா சொல்றாங்க.. இது எல்லாமே ஒரே விஷயம் தான்.. இது கூட தெரியாம மத்தவங்கள குற சொல்வாங்க.. படத்துல நல்லா இருந்ததே இது மட்டும் தான்..

ஏன் எதிர்ப்பார்ப்போட போற? எந்த Expectationsம் இல்லாம படத்த பாக்கணும்ன்னு இன்னும் சில பேரு.. அப்டி பார்த்தா தான் படம் பிடிக்குமாம்.. என்னங்கடா உங்க லாஜிக்.. அப்றோம் என் விஜய் படத்துக்கு மட்டும் குத்துடு, குடையுதுன்னு சொல்றீங்க? அவர் தான் நான் இப்டி நடிப்பேன், என் படம் மொக்கயா தான் இருக்கும்னு ஓப்பனா சொல்றாருல.. அதுக்கும் எதிர்பார்ப்பு இல்லாம போய் பாருங்க..

படத்த பத்தி சொல்லணும்னா, HALF BAKED SCRIPT.ஒழுங்கா இந்தில எடுத்து இருக்கலாம்.. படம் முழுக்க ஒரு செயற்கை தனம்.. தாஜ்மகால்ன்னு ஒரு படம் மணி-பாரதிராஜா எடுத்தாங்களே, அது மாதிரி.. லொக்கேஷன்ஸ் எல்லாமே அந்நியமா தெரிஞ்சது.. படத்தோட ஒன்றி பார்க்க முடியல.. விக்ரம் நல்லா பண்ணிருக்காரு.. ஆனா அவரோட Characterisation சரியா எழுதல.. அவர் சைக்கோவா இல்ல வைகோவான்னு சந்தேகமாவே இருந்துச்சு.. கடசில மணி கூட அவர் வாழ்க்கைல விளையாடிட்டாரு.. ஐசு ஆன்ட்டிக்கு வயசாகிட்டே போகுதே.. லிப்-சிங்க்கும் மிஸ் ஆச்சு.. பல இடத்துல இந்தி உதட்டசைவு.. எடிட்டர் நோட் பண்ணல போல..

இசை, பின்னணில கலக்கிருக்காரு… பாடல்கள் சுமார்.. ஹிந்திக்கு கம்போஸ் பண்ணி அத தமிழுக்கு மொழி பெயர்த்த மாதிரி இருந்துச்சு.. டாக்டர் ராஜசேகரின் உடம்பு எப்புடி இருக்குஞாபகங்கள்.. வசனங்கள்ல எல்லா ஊரு பாசையும் பேசுறாங்க.. நெல்லை, கோவைன்னு வால்வோ பஸ்ல ஊர் ஊரா போற மாதிரி ஒரு ஃபீல்..

இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல.. இந்த காவியத்த சூப்பர், ஆஹோ, தமிழ் சினிமாவ திருப்பி போட்டுச்சு, உலக சினிமாவ பொறட்டி போட்டுச்சு, பலே பேஷ்ஷ்ன்னு சப்போர்ட் பண்ணி நான் புத்திசாலின்னு காட்டிக்கறத விட முட்டாளவே இருந்துடுறேன்..

ஒரு பெரிய ஃபைவ்-ஸ்டார் ஹோட்டலுக்கு போயி, அழகான, மிருதுவான சோபால அமர்ந்து, கலக்கல் டிஷைன் போட்ட தட்ட முன்னால வச்சு, கமகம வாசனையோட உணவ ருசிச்சா உப்பில்ல, சாப்பாட வாயில வைக்க முடில.. அது போல தான் ராவணன்..

ராவணன்- அந்நியன்

வருகைக்கு நன்றி!!

இவர்கள் ஐ.பி.எல் ஆரம்பித்தால்

$
0
0
நம்ப லலித் மோடி பிரச்சன எப்போ ஓயும்னு தெரில.. எட்டு டீம் வச்சதுக்கே எட்டுபட்டில இருந்தும் கேஸ் போட்டாங்க.. இதுல புதுசா வேற ரெண்டு டீம்.. புதுசு புதுசா ரூல்ஸ் வேற.. சரி நம்ப ஆளுங்க டீம் ஆரம்பிச்சா என்னென்ன ரூல்ஸ் வைப்பாங்க? அந்த டீம் எப்டி இருக்கும்? ஒரு கற்பனை



அஜித் குமார்:டீம்ல ஆடறவங்க ஜெர்சி கோட்-சூட்.. வீரர்கள் எல்லாரும் கூலேர்ஸ் போட்டு இருக்கணும்.. நடன மங்கைகள் பிகினில இருக்கணும்.. வருஷத்துக்கு ஒரு மேட்ச் தான் ஆடுவாங்க.. அதுவும் தோக்கணும்.. 'தல' ரொம்ப முக்கியம்.. அதுனால காப்க்கு பதிலா ஹெல்மெட் தான் யூஸ் பண்ணனும்.. ஸ்ட்ரோக் வச்சாலும் 'தல நீ ஆடு தல'ன்னு கோஷம் போடணும்.. ஜால்ரா போட சின்ன நடிகர்கள் எல்லாம் டீம்ல இருக்கணும்.. நடுவுல போர் அடிச்சுடுனா கார் ஓட்ட கிளம்பிடணும்.. டீம்ல எல்லாரும் ரன்க்கு ஓடுவாங்க.. ஆனா இவங்க டீம்ல எல்லாரும் நடையா நடையா நடந்துட்டே இருப்பாங்க..



விஜய்:அப்பா சொல்ற வீரர்கள் தான் டீம்ல இருக்கணும்.. பேரரசு, பாபுசிவன், எஸ்.பி. ராஜ்குமார் இவங்க தான் கோச்.. பாஸ்ட் பௌலிங், ஸ்பின் பௌலிங் எதுவா இருந்தாலும் பால் பேட் கிட்ட வரும் போது, ப்ரீஜ பண்ணி பஞ்ச் டயலாக் சொல்லிட்டு தான் அடிக்கணும்.. முதல் பந்து வீசுறதுக்கு முன்னாடி ஒரு இன்ட்ரோ சாங்.. நடுவுல பறந்து பறந்து அடிக்கணும், ஒரே மாதிரி ஷோட்ஸ் ஆடணும், சில சமயம் பிட்ச்ல ஆடாம நடன மங்கைகள் கூட ஆடணும்.. 2 ரன் தான் அடிசிருக்கணும்.. ஆனாலும் 'வெற்றிகரமான நூறாவது ரன்'னு போஸ்டர் அடிக்கணும்.. ரன் அடிக்க வழி இல்லைனா, டிக்கெட் விலைய குறைக்கணும்.. அப்பயும் பருப்பு வேகலன்னா ரெட் கார்டு கொடுத்தாலும் கமுக்கமா இருக்கணும்.. தெலுகு, மலையாள வீரர்கள் ஆடுறத Observe பண்ணனும்.. எல்லா ஆட்டமும் தோட்ட உடனே அரசியலுக்கு வருவேன்னு பேட்டி கொடுக்கணும்.. மெசேஜ், இ-மெயில்ல 'லைவ் ஸ்கோர்' வரும்.. ஆனா இவங்க டீம் ஆடுனா மட்டும் கலாய் மெசேஜ் இலவசமா வரும், ஸ்கோர்க்கு பதிலா..



சூரியா:ஷாட் அடிச்சாலும் சரி, பௌலிங் பண்ணாலும் சரி.. 'ஜோ திஸ் இஸ் போர் யூ' சொல்லணும்.. 10 வயசு சச்சின்னா மாறி மாயஜாலம் காட்டணும், சிங்கமா மாறி கடுங்கோபத்த காட்டணும்.. அப்போ தான் குழந்தைங்க போன் பண்ணி, 'அங்கிள் அங்கிள் எப்டி அங்கிள் சிங்கமா மாறுனீங்க?' கேக்கும்.. சூல பெரிய ஹீல்ஸ் இருக்கணும்..


டி. ராஜேந்தர்:பேட் இல்ல, ஆனா ரன் அடிப்பேன்.. பால் இல்ல ஆனா விக்கெட் எடுப்பேன்.. கேட்ச் புடிக்கல, ஆனா கத்துவேன்.. நடன மங்கைகள் இல்ல, ஆனாலும் இசை, டான்ஸ் ஆடுவேன்.. எனக்கு வாயும், கையும் இருக்கு சார்.. அப்டியே எல்லாமே பண்ணுவேன்.. ஒரு கையுல பேட்.. சிக்ஸ், பௌண்டரி, டமார் டமார்.. இன்னொரு கையுல பால்.. ஸ்பின், பாஸ்ட், மீடியம், விக்கெட்டு, அவுட்டு.. வாயுல மியூசிக்.. வச்சிருக்கேன் நான் வச்சிருக்கேன் .. உம்மா டும்முக்கு டும்மா, ஆஆஆ அம்மா, டகடக டும் டும், டகடக டும் டும்.. எதிர் டீம் வீரர்களுக்கு எல்லா தங்கச்சிகள கட்டி கொடுத்து மேட்ச்ல தோட்டுடுவாங்க.. கடைசிலே தங்கச்சிகளுக்கு எதாவது ஆச்சுனா பொங்கி எழுந்து எல்லா மாட்ச்சும் ஜெயப்பாங்க.. நடன மங்கைகள தொடாம ஆடுவாங்க.. சிம்பு தான் அவங்க கூட ஆடணும்னு சொல்வாங்க.. ரன் அடிச்சாலும் விக்கெட் எடுத்தாலும் பஞ்ச் டயலாக் பேசிட்டு தான் அடுத்த காரியத்துல இறங்குவாங்க.. "ஜெயபாலு, போட்டே நீ நோ-பாலு" "காளி- இப்போ நீ காலி" "சுகுமாரு- நீ ஆடுற தாறுமாறு" "வாயில போடுறேன் சிக்லேட்டு, பால்ல போடறேன் விக்கெட்டு" இப்டி பாலுக்கு ஒரு வசனம் பேசியே ஆகணும்..

கமல்ஹாசன்:டீம்ல பதினொரு பேரும் ஒருத்தர் தான்.. மேட்ச் ஆரம்பிகற்துக்கு முன்னாடி மேக்-அப் போட ஹாலிவுட்ல இருந்து வருவாங்க.. ஒரு ஒரு வீரருக்கும் மேக்-அப் போடுறதுலேயே நேரம் போயிடும் ஒரு குற்றச்சாட்டு..



மணிரத்னம்:தமிழ் வீரர்கள விட ஹிந்தி வீரர்கள் மேல தான் கண்ணு.. முன்னாடி டீம்ல அர்விந்த் சாமி, மாதவன், ஆனா இப்போ அபிஷேக் பச்சன்.. நார்த்தயே நினச்சு ஆடுறதால தமிழ் வீரர்கள் கோட்ட விட்டுடுறாங்க.. அங்கேயும் தோல்வி, இங்கேயும் தோல்வி.. இவங்க அணி நல்ல ஆடாடியும் நல்ல ஆடுனாங்கன்னு சொல்ல சொல்லி ஒரு கூட்டம் சுத்தும்.. கிரௌண்ட் அழகா இருக்கும், மியூசிக் நல்ல இருக்கும், வீரர்கள் கூட நல்ல ஆடற மாதிரி ஆடுவாங்க, ஆனாலும் டார்கெட் பெருசா இருப்பதால் தோத்துடுவாங்க..



அம்மா டீம்:மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி எல்லாரும் அவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும்.. எங்க மேட்ச் நடக்கும் போதும் இது நடக்குமோன்னு பயந்து அம்மா கொடநாடு பங்களாக்கு ஓய்வெடுக்க போய்டுவாங்க.. கேப்டன் இல்லாம சில சமயம் டீம் திண்டாடும்.. இன்னொரு 'கேப்டன்'ன சேர்த்துக்கலமான்னு மனசு துடிக்கும்.. ஆனா 'நானே ராஜா நானே மந்திரி' கதையா அடுத்த கட்ட தலைவர் யாரும் வளரமாட்டாங்க.. WISE-CAPTAIN இல்ல.. ஆக்ஸ்சன் (ஏலம்) நடக்கும் பொது இந்த அணி நிலைமை பாவம்.. இருக்குறவங்க எல்லாம் வேற அணிக்கு தாவுவாங்க.. எந்த வீரர வாங்குறது, யாரு நம்ப அணிக்கு வருவாங்கன்னு வழி மேல் விழி வைத்து காத்து இருப்பாங்க.. மேட்ச் எப்போவாது தான் ஆடுவாங்க.. அப்டியே ஆடுனாலும் சப்ப மட்டேர்கெல்லாம் சண்டை, ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க.. வைடு போட்டா என் வைடு பால் போட்டாங்கன்னு ஆர்ப்பாட்டம், வைடு போடலனா என் வைடு போடலனன்னு ஆர்ப்பாட்டம்.. சில சமயம் ஸ்டேடியம் விட்டு வெளிநடப்பு செய்யணும்.. அப்றோம் எல்லாரும் மறந்த உடனே திரும்ப ஆர்பாட்டங்கள் நடத்தணும், அறிக்கை விடணும்..



அண்ணன் அழகிரி:மதுரை க்ரௌன்ட்ல மரண அடி அடிப்பாங்க.. 30,000, 50,000 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்ன்னு மேட்ச் ஆரம்பிகற்துக்கு முன்னாடியே சொல்லிடுவாங்க.. டெல்லி கிரௌன்ட்ல ஆசையோட விளையாட போய் பாதி மேட்ச்ல பிடிக்கலன்னு வந்துடுவாங்க.. அப்பா டீமோட கேப்டன் ஆகணும்க்றது தான் நீண்ட நாள் ஆசை..



தலைவர் கருணாநிதி:ஒரு டீம்ல 11 வீரர்கள் இருக்கணும் ரூல்ஸ் இருக்கு... ஆனா இவங்க டீம்ல 11 டீம் இருக்கும்.. எத்தன பேரு Auctionல எடுத்தாலும் குடும்ப கண்மணி, கனிமொழிகளுக்கு தான் முதல் உரிமை.. பிட்ச்க்கு வந்தாலும் சரி, பேட் பிடிச்சாலும் சரி, பால் அடிச்சாலும் சரி, ஓடி வந்தாலும் சரி, பௌலிங் பண்ணாலும் சரி, கேட்ச் புடிச்சாலும் சரி, கேட்ச் விட்டாலும் சரி எல்லாத்துக்கும் பாராட்டு விழா நடத்துவாங்க.. வீரர்கள் எல்லாரும் தலைவருக்கு புதுசா எதாவது ஒரு பட்டம் கொடுப்பாங்க.. 'நான் இன்று ஒரு ரன் அடித்தேன் என்றால் அதன் புகழ் முழுக்க தானை தலைவர், தாய்த் தமிழ் ஈன்றெடுத்த தவப்புதல்வரே, அய்யா கலைஞர் அய்யாவையே சேரும்'ன்னு சொல்லணும்.. இதனால் 20௦-20௦ மேட்ச், டெஸ்ட் மாட்ச மாற வாய்ப்புக்கள் இருக்கு.. மேட்ச் முடிஞ்ச உடனே முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு கடிதம், இலங்கை அணி வீரர்கள் ஆடக்கூடாதுன்னு சோனியா அம்மையாருக்கு கடிதம், கூடவே கதை, வசனம் எழுதி 24 மணி நேரமும் பிஸியாக இருப்பாங்க.. தனக்கு அப்றோம் கேப்டன் பதவி யாருக்குன்னு அய்யாவுக்கே குழப்பம்..


ராமதாஸ் அய்யா:இவரு டீமா இருக்காரா, இல்ல டீம்ல இவர் இருக்காரான்னு சந்தேகம்.. தனியா ஆடுனா ஜெய்க்க முடியாதுன்னு, ஜெய்க்க போற அணி கூட சேர்ந்து ஆடுவாங்க.. ஆனா ஜெயச்ச அப்றோம் எங்களால தான் ஜெய்ச்சீங்கன்னு சொல்லிடுவாங்க.. கோவம் வந்தா எல்லாரையும் கெட்ட வார்த்தையால திட்டுவாங்க.. மேட்ச் ஆடுறட விட மீட்டிங் போட்டு நாம எந்த டீமோட கூட்டணி வச்சு ஆடலாம்னு செயற்குழு தீர்மானத்துல சொல்வாங்க.. 2012ல கப் எங்களுக்கு தான் சொல்லிட்டு இருக்காங்க.. பாக்கலாம்.. ஒரு சீரீஸ்ல ஒரு அணிய பாராட்டி பேசணும், அடுத்த சீரீஸ்ல அவங்கள பச்சை பச்சையா திட்டணும்.. ஏனா அது தான் கூட்டணி தர்மம்..

நித்யானந்தா சுவாமி:மேட்ச் பரபரப்பா போகும்.. பிட்ச்ச பார்த்தா சாமிய காணும்.. பௌண்டரி லைன்ல மாமிய (நடன மங்கைகள்) காணும்.. அணி வீரர்கள் மைதானத்த விட மெத்தைல நல்ல விளையாடுவாங்க.. இவர்கள் ஆடும் ஆட்டத்தை ரகசியமா படம் பிடிக்கணும்.. இல்லன்னா 'அதில் ஆடியது நான் இல்லை.. எனது சுத்தத்தை நிருபிக்க நான் அக்னி குண்டத்தில் இறங்குகிறேன்'னு பிட்ச் நடுவுல நெருப்ப கொழுத்தி இறங்கிடுவாங்க.. எங்கள் அணியில் மகளிர்க்கு இடம் வேண்டும்ன்னு போராடுவாங்க..
 
 
வருகைக்கு நன்றி!!

லொல்லு சொல்லு-2

$
0
0
புனேவில் இருந்து மாற்றலாகி சென்னை வந்து விட்டேன்.. நான் திரும்ப சென்னைக்கே வரமாட்டேன்னு எங்க அப்பா என்னோட கணிப்பொறிய என் மாமாவுக்கு கொடுத்து விட்டார்.. அதுனால பதிவுகளும் போட முடியல..  புனேவில் கிடைத்த அருமையான நண்பர்களை விட்டு வந்ததில் ரொம்ப வருத்தமா இருக்கு.. விரைவில் அவர்களுக்கும் மாற்றலாகி இங்க வருவாங்கன்னு நம்பிக்க இருக்கு..


சென்னை வந்தா சும்மா இருக்க முடியுமா? வழக்கம் போல திரை அரங்கை முற்றுகை செய்ய ஆரம்பிச்சிட்டேன். முதல்ல காதல் சொல்ல வந்தேன்.. தனது வழக்கமான காமெடி பாணியில் காதலை கலந்து முதல் பாதில அரங்கம் அதிர பொளந்து கட்டிருக்காரு.. ஹீரோக்கும் அவர் நண்பராக வரும் குண்டு பையனுக்கும் நல்ல Chemistry.. சிங் ரோல்ல "இவன் நல்லா வருவான்டா"வர பையன் கிங்.. அவரோட சுட்டி டி.வி. நண்பருக்கு கொடுக்கும் பில்ட்-அப் மியூசிக் ஆகட்டும், கடசில புஸ் ஆகும் போது அரங்கமே அதிருது.. ஹீரோயின் யாருப்பா? சின்ன வயசு நயந்தாரா மாதிரி பப்லீயா இருக்காங்க..   கலகலன்னு போற படம் பிற்பாதியில பொலபொலன்னு கண்ணீர் விடுற அழுவாச்சி காவியமா மாறிடுது.. ரொம்ப செயற்கை தனம். ஹீரோக்கு அழ கூட வரல.. பாவம் சார்.. க்ளைமாக்ஸ் ஏதோ பண்றேன்னு சொதப்பிட்டாரு..  மனசுல ஒட்டவே இல்ல.. அதுவும் கடைசி காட்சி சம்பந்தமே இல்ல.. காதல் சொல்ல வந்தேன்- ரெண்டாவது பாதியால் நொந்து வந்தேன்..



நான் மகான் அல்ல..அதே பொறுப்பே இல்லாத ஹீரோ-லூசு ஹீரோயின்.. பார்த்த உடனே லவ்வு.. நாலு சீரழிந்த சின்ன பசங்க.. முதல் சீன்ல பார்த்த உடனே பின்னால இவங்க பெருசா ஏதோ பண்ண போறாங்க தெரியுது.. அதே மாதிரி அப்பாவ போட, கார்த்தி அவங்கள போட, படத்துல The End போடுறாங்க.. சிம்பிள் கதைய கார்த்தி அஸ்சால்டா தனி ஆளா Carry பண்ணிருக்காரு.. ரசிக்கிற மாதிரி இருந்தாலும், சில இடங்களில் அதே தெனாவட்டு நடிப்ப பார்க்க சலிப்பா இருக்கு.. வேலைக்கு சேர்ந்த முதல் நாள் பண்ற அலப்பறை இருக்கே, ரகளை.. "லவ் மேரேஜ் செட் ஆகுதுன்னு அரேங்கேத் மேரேஜ் பேசலாம்னு வந்துருக்கேன் அங்கிள்",அதே மாதிரி ரௌடிய Friend பிடிக்கிற சீன் விசில்.... காஜல் அழகு.. அவ்ளோ தான்.. அப்பாவ வர ஜெயப்ரகாஷ் நல்லா தேர்வு.. Overdo செய்யாம அற்புதமா பண்ணிருக்காரு.. அந்த இளைஞர்கள் செட் கனகச்சிதமான தேர்வு.. படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்சே Character Selection. அப்பா, பையன், நண்பர்கள், தங்கை எல்லாம் நம்பள சுத்தி இருக்குறவங்க மாதிரியே தெரியுது.. படத்துல மிகபெரிய மைனஸ் முதல் பாதிக்கும், ரெண்டாவது பாதிக்கும் சம்பந்தமே இல்லாம இருக்குற மாதிரி ஒரு பீல்.. கமர்சியல் சினிமா பண்ணனுங்கறுதுக்காக செய்த மாதிரி இருக்கு.. அவ்ளோ பெரிய ரௌடிய இவங்க போடுற சீன் ரசிக்குற மாதிரி இருந்தாலும், ஏத்துக்க முடில.. யுவன் பாடல் இசை, பின்னணி இசை இரண்டிலும் பின்னி பெடல் எடுத்துருக்காரு.. அதுவும் கிளைமாக்ஸ்ல அந்த நாலு பசங்களுக்கு வர இசை அந்தர்.. மொத்தத்தில் நான் மகான் அல்ல- ரொம்ப மோசமெல்லாம் இல்ல.. ஒரு முறை பாக்கலாம்..



இந்த Federerkuஎன்ன பிரச்சன தெரில.. அரை இறுதி வரை அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒரு செட் கூட தோக்காம இருந்து, Djokovicகிட்ட தோற்றுட்டாறு.. செம காண்டு ஆகிட்டேன் .. இது வரைக்கும் சூப்பரா ஆடி, நா ரொம்ப Expect பண்ணிட்டேன், தக்காளி எங்க ஆளுக்கு தான் கப்புன்னு.. அதுவும் 2 Match Point இருந்தும், அட விட்டுட்டாரு.. இதுவும் Nadalக்கு எழுதி வச்சாச்சு போல..


சந்தோசமான விஷயத்தோட முடிக்கலாம், என் பிறந்த நாள் அன்றே பிறந்த நாள் கொண்டாடிய தாரணி அக்காவுக்குஎன்னோட வாழ்த்துக்கள்.. 



வருகைக்கு நன்றி!!

முக்கோண காதல்- A Samosa Love Story

$
0
0
தடார்..

அருண் குப்பென்று வேர்த்து பொடரியில் அடித்தது போல் அதிர்ந்து உறைந்து இருக்க, கார்த்திக் நன்றாக தூங்கி கொண்டேருக்கிறான்..

அருண்: மச்சி எழுந்துடுடா..

கார்த்திக்: கிர்ர்ரர்ர்ர்...
 
அருண்: டேய்.. பன்னி.. எழுந்துடுடா..
 
கார்த்திக்: என்னடா வேணும்?
 
அருண்: மணி மெஸ் சாப்பாடு சாப்டு நல்லா தூங்குறியா? எனக்கு இங்க சாவு மணி அடிக்குதுடா..
 
கார்த்திக்: அடச்ச்ச.. நொய் நொய்ன்னு.. என்னடா வேணும்?
 
அருண்: ஏன்டா எனக்கும் அனுஷாக்கும் இப்டி பண்ண?
 
கார்த்திக்: என்னத்த பண்ணேன்?
 
அருண்: ச்ச.. சத்தியமா நீ இப்டி பண்ணுவன்னு எதிர்பாக்கலடா..
 
கார்த்திக்: நான் அவகிட்ட பேசுனது கூட கம்மி தான்டா...
 
அருண்: ஆனாலும் நீ இப்டி பண்ணுவன்னு..
 
கார்த்திக்: ஓத்தா.. பொறம்போக்கு..
 
அருண்: கூல் மாதி.. என் இப்ப திட்ற? என் கனவுல நீ பண்ணது மட்டும் நல்லவா இருக்கு?

கார்த்திக்: உன் கனவுல எனக்கென்ன வேல?
 
அருண்: வேற என்ன கனவுலயும் காதலுக்கு ஹெல்ப் பண்றேன்னு கெடுத்து வச்சிட்டடா..

கார்த்திக்: தெளிவா சொல்லுடா..
 
அருண்: ராணி மெய்யம்மை கல்யாண மண்டபத்துல எனக்கு கல்யாணம்..
 
கார்த்திக்: உனக்கு கல்யாணமா? பெண் குலத்திற்கே அவமானம் மச்சி..
 
அருண்: டேய்.. நீல கலர் பட்டு புடவைல அவ தேவதை மாதிரி வரா..
 
கார்த்திக்: யாரு? அனுஷா தானே?
 
அருண்: ஆமாடா.. உனக்கு எப்டி?
 
கார்த்திக்: டேய்.. உன் கனவுல பின்ன ஐஸ்வர்யா ராயா வருவா? டப்சா மண்டையா.. எத்தன இங்கலீஷ் படம் பார்த்துருக்கேன், பாரதிராஜா படத்துல கூட தேவதை கவுன்ல தான் வரும்.. தேவதை என்னிக்கு புடவை கட்டிருக்குடா புண்ணாக்கு..
 
அருண்: மச்சி மொக்க போடாம கேளுடா.. ஜம்முனு மாப்பிள்ளையா நான் இருக்க..
 
கார்த்திக்: கும்முன்னு அனுஷா இருக்க..
 
அருண்: டேய்.. என் பக்கத்துல நீ..
 
கார்த்திக்: மாப்பிளை தோழன்?
 
அருண்: இல்லடா.. மந்திரம் ஓதுர  அய்யர்..
 
கார்த்திக்: வேற நல்ல கேரக்டர் கிடைக்கலையா மச்சி? சரி மேல சொல்லு..
 
அருண்: தாலி எல்லாருக்கும் காட்டிட்டு என்கிட்டே வருது.. நீ கெட்டிமேளம் கேட்டிமேளம்ன்னு சொல்ற..
 
கார்த்திக்: அப்றோம்..
 
அருண்: அங்கே தான் மச்சி நீ வைக்குற ட்விஸ்ட்டு..  தாலிய நீ என்கைல இருந்து புடுங்கி..
 
கார்த்திக்: டேய்.. நான் அப்டிலா சத்தியமா பண்ணமாட்டேன்டா.. எனக்கு கொஞ்சம் நல்ல Tasteடா..
 
அருண்: த்தூ.. 'இவர் இந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவாரா மாட்டாரா? ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்'ன்னு சொல்லிடுறடா..
கார்த்திக்: நல்ல வேல.. நா என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.. மச்சி.. பெரியவங்க சொல்லிருக்காங்கடா, பகல் கனவு பலிக்காதுன்னு.. அதுனால நீ கவலைபடாதே..  சரி.. அப்டியே போய் தாத்தா கடைல சூடா வாழக்கா பஜ்ஜி, ஒரு மசால் வடை, ஒரு டீ வாங்கிட்டு வாடா..

அருண் சுடசுட பஜ்ஜியுடன் வர, கார்த்தி பஜ்ஜியின் எண்ணையை பிழிய ஒரு பேப்பரை எடுக்கிறான்..
 
அருண்: என்ன Question பேப்பர் மச்சி?

அருண் அதை வெடுகென்று பிடுங்கி பார்க்கிறான்
 
அருண்: UPSC IAS..டேய் என்னடா நடக்குது? நீ எல்லாம் IAS ஆனா இந்த நாடு தாங்குமாடா? இல்ல இந்த நாடு மக்கள் தான் பொறுத்துப்பாங்களா?
 
கார்த்திக்: மச்சி எண்ணெய் பிழிய ஒரு பேப்பர் எடுத்தேன்டா.. ஏதோ புக் கூட ப்ரீயா வந்துருக்கு.. பாரு இலவச இணைப்புன்னு எழுதி இருக்கு..
அருண்: போனா போகட்டும், உன்ன நான் மன்னிச்சு விடுறேன்..

உடனே கார்த்தி மூக்கை பொத்திக்கொண்டே
 
கார்த்திக்: நாயே.. மன்னிச்சு விடுறது இருக்கட்டும். முதல்ல குஸு விடுறத நிறுத்து.. நாத்தம் குடல்ல பொறட்டுது..
 
அருண்: ஹஹாஹா வாயுபகவானை வையாதே..

 
கார்த்திக்: நீ பஜ்ஜி வாங்கிட்டு வர லேட் ஆகும் போதே யோசிச்சேன்டா.. நைசா நாலு, அஞ்சு உன் STACKல Push பண்ணிட்டு இங்க வந்து POP பண்ணிட்ட..
 
அருண்: மச்சி இந்த பஜ்ஜி சாப்டும் போது நேத்து நடந்த மேட்டர் ஞாபகம் வருது!
 
கார்த்திக்: என்னடா ஆச்சு?
 
அருண்: நேத்து ஈவனிங் உன்கிட்ட பத்து ரூபா கடன் வாங்குனேன்ல?  கேன்டீன்ல சமோசா சாப்டேன்..
 
கார்த்திக்: பன்னாட பரதேசி.. போன் ரீ-சார்ஜ் பண்ணனும்னு பொய் சொல்லிட்டு தனியா போய் அமுக்கிகிட்ட..
 
அருண்: ஹிஹி.. மச்சி பசி வந்தால் பத்தும் பறந்து போகும்ன்னு அவ்வையார் இதுக்கு தான் சொன்னாங்க..
 
கார்த்திக்: எனக்கே அவ்வையார், வள்ளுவரா? சரி மேல சொல்லு..
 
அருண்: அப்போ என் முதுக யாரோ தட்டுனாங்க.. பார்த்தா அனுஷா..
 
கார்த்திக்: அப்றோம்?
 
அருண்: என்ன விட்டுட்டு சாப்பிடுறியான்னு நான் எச்ச பண்ணத கூட பொருட்படுத்தாம புட்டு சாப்டாடா.. இப்போ சொல்லுடா.. அவளுக்கு என்ன பிடிச்சிருக்குல? சங்க இலக்கியத்துல கூட புருஷன் எச்சில் பண்ணத சாப்பிடணும்னு பொண்ணுங்க விரும்புவாங்கடா.. எப்போ அவ என்னோட சமோசால பாதி சாப்டாலோ அப்பவே அவ என்னில் பாதி ஆகிட்டாடா...
இதை கேட்டு கொண்டிருந்த கார்த்திக் வாக்க்க்கக்க்க் என்று கத்திக்கொண்டே ஓடுகிறான்.. பதற்றத்தில்  அருண்.. சிறிது நேரம் கழித்து கார்த்திக் வர..
 
அருண்: என்ன மச்சி ஆச்சு? உடம்பு சரி இல்லையா?
 
கார்த்திக்: சும்மா இருடா
 
அருண்: பஜ்ஜி ஒத்துக்கலையா?
 
கார்த்திக்: ஓனர் வரட்டும், வாஷ்-பேசின் கொஞ்சம் பக்கமாவே வைக்க சொல்லணும்..
 
அருண்: எனி ப்ராப்ளம்? பஜ்ஜி சாப்ட நான் நல்லா தானே இருக்கேன்? ஏன்டா வாமிட் பண்ண?
 
கார்த்திக்: நேத்து நீ சாப்ட சமோசாக்கு இன்னிக்கு நா வாமிட் பண்றேன்டா.. உன் லட்டுக்கு நான் பூந்தியா இருக்கும் போது, சமோசாக்கு நான் வாந்தியா இருக்க கூடாதா?    
 
அருண்: புரியல மச்சி..
 
கார்த்திக்: பிச்ச எடுத்தானாம் பெருமாளு.. அத புடுங்கி தின்னாறாம் அனுமாரு..சமோசா சாப்பிட நீயே எடுத்த ஒரு பிச்ச, உன் கிட்ட இருந்து அத புட்டு தின்ன அவ ஒரு எச்ச.. ஏன்டா இது ஒரு மேட்டர்ன்னு என்ன கேக்க வச்சிட்டியே.. அது எப்டி, சங்க இலக்கியம்? பாதி சாப்டதால அவ உன்னோட பாதி.. டேய் உனக்குல்லாம் பேதி ஆனா தான் திருந்துவ..
 
அருண்: என்னடா என் லவ்வ இப்டி அசிங்கப்படுத்திட்ட?
 
கார்த்திக்: எச்சக்கல.. வாங்கி கட்டிக்காத  சொல்லிட்டேன்..  இனிமேல் என் வாழ்க்கைல நான் பஜ்ஜி, சமோசா இத எல்லாம் பார்த்த உன் கத தான்டா  ஞாபகம் வரும்.. அய்யகோ..
 
அருண்: ரொம்ப சூடா இருக்கியா மச்சி? வேணும்னா ஒரு ஐஸ்-கிரீம் வாங்கிட்டு வருவா?
 
கார்த்திக்: வேணாம்டா.. அதுக்கு ஒரு நக்கி கதைய சொல்வ நக்கீரன் பேரா.. இனிமே உன் கிட்ட நா எதுவுமே கேக்கல ராசா...


வருகைக்கு நன்றி!!

விக்ரமாதித்யன் கதைகள்- பேருந்து வேதாளம்

$
0
0
வயிற்றில் படிக்கட்டு (சிக்ஸ்-பேக்) வைக்க வக்கில்லாத இளைஞர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கி ரோமியோக்களாய் அயோக்கியத்தனம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாய் இருக்க, இப்போது பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து, மகளிரை வலப்பக்கத்திற்கு இடமாற்றம் என பல நற்செயல்களை அரங்கேற்றி வருகிறார்கள். நாங்க என்ன வச்சிக்கிட்டேவா வஞ்சனை செய்றோம் என்பது போல, பேருந்தில் தொங்கிக்கொண்டு செல்லும் எல்லாரும் கெட்டவர்கள் இல்லை என்ற மனக்குமுறல் தான் இந்த பதிவு. 


பேருந்து.. விசித்திரம் நிறைந்த பல பயணிகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல ரூட்களையும் சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த பேருந்து ஒன்றும் விசித்திரமானதல்ல... தொங்கி வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமை ஆனவன் அல்ல.. பேருந்து வாழ்க்கை பாதையிலே,  தொங்கிப்  பிழைக்கும் மங்கிகளில் நானும் ஒருவன். .


29Cஇல் தொங்கிக்கொண்டே வந்தேன்
Deluxe பஸ்சிலும் கதவை மூட விடாமல் Footboard அடித்தேன்
ஸ்டெல்லா மேரிஸ் பெண்ணுக்கு நோட் கொடுத்தேன்


குற்றம் சாட்டப்பட்டுருக்கிறேன் இப்படியெல்லாம்..

ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை...

29Cஇல் தொங்கிக்கொண்டே வந்தேன்.. ஏன்??? ஸ்டெல்லா மேரிஸ்பிகரை கரெக்ட் செய்யவா? இல்லை. அடுத்த ஸ்டாப்பில் ஏறும் ஸ்டெல்லா ஆன்ட்டி, மேரி ஆன்ட்டி இவர்கள் எல்லாம் படிக்கட்டில் பரிதாபமாக நிற்க கூடாது என்பதற்க்காக


Deluxe பஸ்சிலும் கதவை மூட விடாமல் Footboard அடித்தேன் ஏன்..?? விஜய் போல ஹீரோயிசம் காட்டி விஜய் பேன் MOP வித்யாவை கரெக்ட் செய்யவா? இல்லை.. உள்ளே போக முடியாமல் தவிக்கும் நான், மூடும் கதவிலே சிக்கி முகமெல்லாம் ரணகளமாய் ஆகி பரலோகம் போக வேண்டாம் என்பதற்காக 


ஸ்டெல்லா மேரிஸ் பெண்ணுக்கு நோட் கொடுத்தேன்.. ஏன்??? பை கொடுத்தால் அவள் கை கொடுப்பாள் என்ற நப்பாசையா? இல்லை குடும்ப பாரத்தை இரக்க வழியின்றி தவிக்கும் நடுத்தர வர்க்கம், தங்கள் முதுகு பாரத்தையாவது இறக்குவதற்காக 


உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..


நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது நலத்திலே பொது நலமும் கலந்து இருக்கிறது, என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்க்கை பாதையோடு, பேருந்து வரும் பாதையையும் சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய இடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, அடிகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...


நான் ஓட்டுனரை பார்த்ததில்லை, ஆனால் அவர் நல்ல ஆயுளோடு இருக்க வேண்டும் என்று வேண்டினேன் 


நான் காலியான பேருந்தில் தொங்கியதில்லை, ஆனால் எல்லாப் பேருந்தும் கூட்ட வெள்ளத்தில் தத்தளித்ததைப் பார்த்து வேறு வழியின்றி சென்றேன்..


கேளுங்கள் என் கதையை, என் மேல் கேஸ், அபராதம் போட்டு என்னை அபாண்டமாக அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..


இந்தியாவிலே, தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், மென்பொருள் துறையின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???


தமிழ்நாட்டில் பிறந்த நான், அலுவலகம் செல்ல பேருந்து நிலையத்திற்கு ஓடோடி வந்தேன், பஸ், நிற்காமல் இஸ்ஸ் என்று வேகமாய் கடந்து சென்றது. 


என் பெயரோ விக்ரமாதித்தன்,ராஜாவுக்கான பெயர். ஆனால் தொங்கும் வேதாளத்தைப் பிடிக்கும் விக்ரமாய் இல்லாமல் அவ்வேதாளமாய் ஆனேன். நான் மட்டும் நினைத்து இருந்தால்ஹீரோ ஹோண்டாபைக் வாங்கி ஹீரோவாய் சென்றிருந்திருக்கலாம், ஷேர் ஆட்டோ, டாட்டா மேக்ஸீ என்று ஏதாவது ஒரு ஊர்தியில் இடுக்கிக்கொண்டு போயிருக்கலாம், இல்லையெனில் அலுவலகம் பக்கத்திலேயே வீடு வாங்கி, நடந்து சென்றே காலத்தை ஓட்டி இருக்கலாம்.


ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த சமுதாயம்.


ஹீரோ ஹோண்டா முடியாது, ஆக்டிவாதான் உனக்கும், சென்னை நெரிசலுக்கும் சரி என்று ஆக்டிங் இல்லாமல் அப்பா சொன்னார். அதுவும் ஒரு வருடம் கழித்தே என்றார்... தொங்கினேன்


ஸ்டாப்பில் நிற்காமல் பேருந்தை நூறடி தள்ளி நிறுத்தினான், தொங்கினேன்


மகளிர்க்கு தனி வரிசை போல ஆண்களுக்கு இல்லாததால், அங்கேயும் பெண்கள் அமர்ந்திருக்க, வேறு வழியின்றி பாவப்பட்ட மற்ற ஆண்களைப் போல நிற்க ஆரம்பித்தே தொங்கினேன்


600 ரூபாய் பாஸில் இஷ்டம் போல செல்லலாம் என்று 3,4 பேருந்துகளைப் பார்த்தால், அதிலும் சின்ன பொடியன் கூட சிங்காரமாய் படிக்கட்டில்.... தொங்கினேன்


23Cஇல் தொங்கினேன், 24Cஇல் தொங்கினேன், 41Dஇல் தொங்கினேன், 27Lஇல் தொங்கினேன், 147Cஇல் தொங்கினேன், 29Cஇல் தொங்கினேன் 



தொங்கினேன் தொங்கினேன்.. சென்னையின் பல பேருந்துகளில் தொங்கினேன். தாத்தா, பாட்டி, பியுட்டி இவர்களெல்லாம் தொங்க திறனி இல்லாதவர்கள் என்பதால் இறங்கி வழியும் விட்டேன்


என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், அலுவலக, கல்லூரி நேரங்களை மாற்றிருக்க வேண்டும், பேருந்தில் இன்னும் 18 படிகள் வைத்திருக்க வேண்டும், டீலக்ஸ் பஸ்ஸிற்கு கதவின்றி தயாரித்திருக்க வேண்டும், நான் செல்லும் ரூட்டில் மகளிர்க்கு மட்டும் சிறப்பு பேருந்து இயக்கிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.


செய்தார்களா? உள்ளே செல்ல விட்டார்களா இந்த விக்ரமனை. 


என்னை தொங்கும் தோட்டமாய் மாற்றியது யார் குற்றம்?? எனது குற்றமா? முதல் படியில் இருந்த என்னை, “தம்பி கொஞ்சம் வழி விடுப்பா” என்று ஒவ்வொரு ஸ்டாப்பிலும் கெஞ்சலாய் கேட்டு கடைசி படிக்கு கொண்டு வந்த ஆண்ட்டிகளின் குற்றமா?


டீலக்ஸ் கதவை மூடப்பார்த்து டீலில் விட நினைத்தது யார் குற்றம்? கதவே கண் கண்ட தெய்வம் என்று அதைப் இறுகப்பிடித்த எனது குற்றமா? காலியாக இருக்கும் போது திறந்து வைத்து கூட்டம் வரும் போது மூட நினைக்கும் கடமை உணர்வு மிக்க ஓட்டுனரின் குற்றமா?


ஸ்டெல்லா மேரிஸ் பிகர் நோட் வாங்கியது யார் குற்றம்? CAN YOU PLEASE HAVE IT?என்று பீட்டர் இங்கிலாந்து ஷர்ட் போட்டு பீட்டர் விட்ட எனது குற்றமா? இல்லை ஸ்மார்ட்டாய் இருக்கும் என்னை சைலண்டாய் ரசிக்க நோட் வாங்கிய அவளின் குற்றமா??


இந்த கூட்டங்கள் எல்லாம் களையப்படும், குறையப்படும் வரையில், என்னை போன்ற விக்ரமாதித்யன்கள் தொங்கிக்கொண்டே தான் இருப்பர்....


டிஸ்கி:சரி, என்ன மேசேஜ் சொல்றன்னு கேக்குறீங்களா? ஏன்டா எல்லாத்துலயும் மேசேஜ்ஜ பாக்குறீங்க? சரி, படியில் பயணம், நொடியில் மரணம், அதனால் வேண்டும் கவனம். எப்பூடி?



வருகைக்கு நன்றி!!

நந்தலாலா - மீண்டும் மிஷ்க்கின்

$
0
0
அவனை நான் என் சித்தி வீட்டிற்கு செல்லும் போது பார்த்திருக்கிறேன்...  எனது ஐந்தாவது வயதில் அறிமுகம்.. அந்த தெருவில் இருக்கும் மத்த குழந்தைகளுக்கு அவன் விளையாட்டு பொம்மை.. அவனை சீண்டுவது, கொக்கா மைனாவில் முட்டிக்கால் போட்டு குனிய வைத்து எகிறுவது, கண்ணாமுச்சி விளையாடும் போது அவன் முதுகுக்கு பின்னால் ஒளிந்தே கத்துவது என அவனை ஒரு காமெடி பீஸ் போல நடத்தினோம்.. ஆனால் அது எதுவும் புரியாமல் அவன் வெள்ளந்தியாக சிரித்து கொண்டிருப்பான்.. மற்ற குழந்தைகளின் அம்மாக்கள் அவனோடு விளையாடுவதை கண்டாலே அலறுவர். “ஹே… இங்க வா… அவன் கூட விளையாடதன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன், அறிவில்ல, கால உடச்சா தான் சரி படுவவீட்டுக்கு வீடு வார்த்தைகள் மாறினாலும், அர்த்தம் ஒன்று தான்… “போடா லூசு பயலே”என்று அவனை ஏசி விட்டால் போதும், முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து உக்கிரமும், அழுகையும் சேர்ந்து கதறுவான்… அவன் அம்மா வந்து சமாதானம் சொன்னாலும் அவளையும் அடிப்பான்.. வெறித்த பார்வை, கலங்கிய கண்கள்.. சில நிமிடங்களில் ‘உன் பேச்சு பளம்’என்று விளையாட வருவான்.. அவனுக்கு வேண்டியது அன்பும், நண்பர்களும்.. அவன் அம்மாவிடம் என் சித்தி ஒரு முறை கேட்டாங்க “இந்த மாதிரி பயன வளக்கற்து கஷ்டமாச்சே, எங்கேயாவது சேக்கலாம்ல?" ஆனா அவங்க அம்மா சொல்வாங்க, “இதெல்லாம் கஷ்டம் பாத்தா நான் என் இவன பத்து மாசம் வயித்துல வச்சு பெத்தேன், எப்டி இருந்தாலும் அவன் என் மவன் தான், என் கூடவே கடசி வரைக்கும் இருப்பான்வயது ஆக ஆக நண்பர்கள் வட்டம் பெருக, அவனை மறந்தே போனோம்.. ஒரு நாள் சித்தி வீட்டிற்கு போகும் போது அவன் வீட்டு கதவில் விற்பனைக்கு என எழுதி இருக்க, ‘என்ன ஆச்சு சித்தி’கேட்டேன்… “ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கிணத்த எட்டி பார்த்து கத்திக்கிட்டே விழுந்துட்டான்பா.. பாவம்.. அவங்க அம்மா அழுதது இன்னும் கண்ணுலேயே இருக்கு.. பையன் இல்லாத இடத்துல எதுக்கு இருக்கணுன்னு சொந்த ஊருக்கே போயிட்டாங்கப்பா”அன்பும் நண்பர்களும் கிடைக்காததால், தனது பிம்பத்தை பார்த்து யாரோ விளையாட அழைக்கிறாங்க நினச்சு குதிச்சிட்டான்னா? அந்த அம்மா எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்…



நந்தலாலா- தாயை தேடி இரண்டு குழந்தைகளின் பயணம்- ஒருவன் உருவத்தால், இன்னொருவன் மனதால்… சின்னவனுக்கு அம்மாவ பார்த்து கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்க ஆச... அதுனால யாரு முத்தம் கொடுக்க வந்தாலும் கன்னத்த காட்டாம ஓடிடுவான்.. பெரியவனுக்கோ அந்த மூளிய இழுத்து வச்சு கன்னத்துல அறைய ஆச.. ரெண்டு பேரும் அவங்க அம்மாவ பார்த்தாங்களா, அவங்க ஆச நெறவேருச்சா இதுதான் கதை.. நமக்குள்ளேயே சந்தோஷத்த தேடுறத காட்டிலும் நம்மள சுத்தி இருக்குற சின்ன சின்ன விஷயத்துல கூட சந்தோஷம் இருக்குங்கறத படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மூலமாக நமக்கு உணர்த்துகிறார் மிஷ்க்கின்…


படத்தின் நாயகன் இளையராஜா… அதிரடி பின்னணி இசை, மனதை வருடும் இசை என்றில்லாமல், மௌனத்தை கூட இசையாய் புகுத்தி நம்மை காட்சியோடு கட்டிப் போடுகிறார்.. எந்த இடத்தில் இசை வேண்டும், எங்கு அமைதியாக விட வேண்டும் என்பதை உணர்ந்து இசை அமைத்துள்ளார்.. ஆரம்பத்தில் ஒரு சில மௌன நொடிகளை கடந்து வரும் அந்த வயலின் பிட்.. சூப்பர் சார்.. இளையராஜா இல்லாம இந்த படம் இல்லைய்யா ராஜான்னு சொல்லலாம்.. 



பாதி ஜீவன் ராஜாவின் இசை என்றால் மீதி ஜீவன் மிஷ்க்கினின் திரைக்கதையும், பாத்திர தேர்வும்… கதையின் நாயகனாக மிஷ்க்கின்.. ட்ரைலர் பார்த்து மொக்கயா பண்ணிருப்பாரோன்னு பயந்தேன்… ஆனா நல்ல நடிச்சிருக்காரு… காசு வேணுன்னு சில்லறைகளை மட்டும் வாங்குவது, தன்னை பைத்தியம் என்று சொன்ன ஆட்டோக்காரனை அடிப்பது, சிறுவன் அவங்க அம்மாவை பாக்கக்கூடாதுன்னு தூக்கிக்கொண்டு ஓடும் காட்சியில் மிஷ்க்கினின் கண்ணில் தெரியும் மிரட்சி- அப்ப்பப்ப்பா… ஆனால் தனது தாயை பார்த்தவுடன் பரித்தவிக்கும் காட்சியில் கோட்டை விட்டுட்டார்.. திரைக்கதை அங்கே பலவீனமாக இருந்ததால், அவரின் நடிப்பும் எடுபடவில்லை.. குட்டிப்பையன் அஷ் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், ரெண்டாவது பாதியில் நம்பளை கவர்கிறான்.. பக்கத்து வீட்டு குழந்தை போல பார்த்த உடனே ‘மாமா’ என்று ஒட்டி கொள்வதாகட்டும், கடைசியில் தனது அம்மாவை பார்த்தவுடன் அவனது கண்கள் (இடைவேளையில் மிஷ்க்கின் என்றால், க்ளைமாக்ஸ்ஸில் இவன்) மட்டுமே பேசுவது- அருமை…



வசனங்களின்றி காட்சிகளை நகர்த்தும் பாணி படத்துக்கு பலமாகவும் அதே சமயம் பலவீனமாகவும் இருக்கிறது.. படத்தில் நிறைய குறியீடுகள் (Symbolisms).. அம்மா எங்கே என கேக்கும் சிறுவனுக்கு நிழலாய் பதில் சொல்வது (நிழல்-பொய்) அவன் ஓடி இறுதியில் கதாநாயகியிடம் முடிவது, சிறுவனின் அம்மா தவறானவள் என தெரிந்தவுடன் அவள் முகத்தை காட்டாது காட்சி அமைத்த பாணி, மிஷ்க்கின் அக்கி அம்மாவுக்காக ஒரு செம்பருத்தி பூவை பறித்து வைத்திருப்பார்.. கடைசி காட்சியில் ஸ்னிகிதா தலையில் செம்பருத்தி பூ.. இப்படி படம் முழுக்க வியாபித்திருக்கும் Symbolisms ஒரு கடைகோடி சினிமா ரசிகனால் (Layman's point of view) புரிந்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம்…



’நீ தானே பாம்பாம்ம எடுக்க சொன்ன’ என்று மிஷ்க்கின் அப்பாவியாய் அழும்போது மனம்மாறும் லாரி ட்ரைவரின் பகுதி ஒரு குட்டிக்கவிதை.. தாய்வாசல், அன்னைவேர்என ஊரின் பெயரிலேயே தாய்மையை புகுத்தியது, மெதுவாக கடக்கும் வண்டியில் அக்கி தனது அம்மாவை அவளின் இன்னொரு குழந்தை மூலம் தெரிந்து கொள்வது (அதற்கு முன்னரே DRIVE SLOWLY-  என எழுதப்பட்டிருக்கும்) என மெனக்கெட்டு திரைக்கதை அமைத்துள்ளார் மிஷ்க்கின்.. பள்ளி மாணவியின் காட்சிகள் மிகையான உறுத்தல்.. அதே போல படத்தின் உயிர்நாடியான காட்சி- தன் அம்மாவை மிஷ்க்கின் பார்த்த உடன் அவருக்கு வரும் பரிதவிப்பு, அதிர்ச்சி எனக்கு வரவில்லை… அதை தொடர்ந்து வந்த காட்சிகளும் மிகவும் செயற்கைத்தனமாக இருந்தது.. சில இடங்களில் மிஷ்க்கின் Cliches.. தலையை குனிந்தபடியே இருப்பது, கால்கள், ஆகாயத்தை மாற்றி மாற்றி காட்டுவது என சித்திரம் பேசுதடி, அஞ்சாதேவில் பார்த்த காட்சிஅமைப்புகள்.. மற்றபடி கேமராவில் குறை சொல்ல ஒண்ணும் இல்லை (அஞ்சாதே நிறய வாட்டி பாத்துருக்க கூடாது)



நாம மத்தவங்களுக்கு எது கொடுத்தாலும் அது நமக்கு திரும்ப வருமாங்கறது சந்தேகம் தான், ஆனா சந்தோஷத்த கொடுத்து பாரு, அது மட்டுந்தான் வட்டியோட வரும்.. இதை களமாக்கி, காட்சியமைத்த விதத்தில் மிஷ்க்கினுக்கு ஒரு சபாஷ்… ஆனாலும் அஞ்சாதே தான் என்னை பொருத்தமட்டில் மிஷ்க்கினின் சிறந்த, முழுமையான படைப்பு




53 பூச்செண்டு தரலாம்

நந்தலாலா- இனிமை


வருகைக்கு நன்றி!! 

வாழ்த்தலாம் வாங்க

$
0
0


மச்சி நீ ஒருபொறிக்கி.. சமுகத்தில் நடக்கும் அக்க்ரமங்களை பொறிக்கி அதை கண்டிப்பதால்


மச்சி நீ ஒரு பொறம்போக்கு..நண்பர்களையும் சரி, மற்றவர்களையும் சரி அவர்கள் இல்லாத நேரத்தில் முதுகின் புறமாய் பேசும் போக்கு இல்லாத நல்ல மனம் உடைய பொறம்போக்கு.. 


மச்சி நீ ஒரு முடிச்சவுக்கி..உலகின் நடக்கும் பல குற்றங்களின் மூலகாரணங்களையும், மர்மமாய் யாருக்கும் புலப்படாத விஷயங்களின் முடுச்சுக்களை அவிழ்க்கும் ஒரு முடிச்சவுக்கி.. 


மச்சி நீ ஒரு கேப்மாரி..நண்பர்களுடன் உரையாடும் பொழுது சிறு கேப் கிடைத்தாலும், யானை காதில் புகுந்த எறும்பு போல விடமால் நோண்டிக்கொண்டே மாறி மாறி கலாய்க்கும் ஒரு கேப்மாரி  


மச்சி நீ ஒரு முள்ளமாரி..உன் காலில் முள் குத்தினாலும் அதை பொருட்படுத்தாது உன் அன்பால் அந்த முள்ளின் குணத்தை கூட மாற்றும் சக்தி கொண்ட முள்ளமாரி.. 


மச்சி நீ ஒரு பரதேசி..ஐந்தாம் வகுப்புலே டேசிபாபா சைட் பார்த்து பல உலக விஷயங்களை அறிந்து, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், ஸ்பெயின் என பல தேசங்களுக்கு பறந்த பறதேசி.. சாரி.. பரதேசி..


மச்சி நீ ஒரு டுபுக்கு..பல புக்குகளை ரெண்டு முறை படித்து அதில் டூ மச்சாக அர்த்தங்களை கண்டுபிடித்த டுபுக்கு..


மச்சி நீ ஒரு கபோதி..கற்றறிந்த சான்றோர்களுக்கே நீ போதி மரமாய் விளங்கும் க-போதி 


மச்சி நீ ஒரு கம்னாட்டி..இளம்பெண்களின் மனதை கவர்ந்து, வாடா நாட்டி பாய் என அழைக்க பதும் கம்னாட்டி..


மச்சி நீ ஒரு சாவுகிராக்கி..மைகேல் ஜாக்சன் அட்டாக் செய்த  ஆட்டக்காரன்..  சாவு வீட்டில் நடனத்துக்கு செம கிராக்கி கொண்ட நீ ஒரு சாவுகிராக்கி..  


சரி மச்சி உன்ன ரொம்ப புகழ்ந்தா உனக்கு பிடிக்காதுன்னு தெரியும்.. 

நீ சொல்வியே ஒரு பஞ்ச டயலாக் 

முகத்துக்கு முன்னாடி முகஸ்துடி போடுறவனையும் பிடிக்காது
முதுகுக்கு முன்னாடி முட்றவனையும் பிடிக்காது 


அதுனால நா இத்தோட ஸ்டாப்பு.. 
இன்னிக்கு உன் பொறந்த நாளுல.. 
அதான் நல்ல நாள் அன்னிக்கு 
நாலு நல்ல வார்த்த சொல்லலாம்ன்னு இந்த போஸ்ட்டு.. (ரைமிங்கா பேசுவோம்ல) 


ஹாப்பி பர்த்டே மச்சி.. ஓஒ.. நீ தமிழ்காரன்ல.. அதுனால தானே கேக் கூட வெட்ட மாட்ட.. 

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..


உனக்கு இந்த போஸ்ட் பிறந்த நாள் பரிசா தர அளவுக்கு நா கஞ்சன் இல்ல.. 
நீ ரொம்ப நாளா கேட்டியே BAJAJ AVENGER பைக்அத தரலாம்னு பார்த்த காசு இல்ல.. ஏதோ என்னால முடிஞ்சுது










நம்ப சாம் அன்டேர்சன்  எப்புடி கார் படம் வரஞ்சு, கார் போஸ்டர் வாங்கி அவர் ஒரு பெரிய தொழில் அதிபர் ஆனாரோ, அது போல இந்த பைக் போஸ்டர் பார்த்தே நாம பைக் வாங்குறோம்.. ஒகே?





முகப்புத்தகத்தில் வாழ்த்தை தெரிவிக்க- அருண்

செத்துப்போன பிளாக்கில் மொய் எழுத- அருண் பிளாக்


டிஸ்கி:அடுத்த மாசம் ஒருத்தரு பொறந்த நாளு இருக்கு.. அவருக்கு இது ஒரு ட்ரைலர்.. இதைப் படித்து டரியல் ஆக வேண்டாம் சகா..


வருகைக்கு நன்றி!! 


வானவில் உங்கள் சாய்ஸ்

$
0
0
வணக்கம் நேயர்களே.. உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. நான் உங்க ஜிப்சி சுமா.. நீங்க பார்த்துட்டு இருக்குற நிகழ்ச்சி வானவில் உங்கள் சாய்ஸ்..இன்னிக்கு நியு இயர் சிறப்பு நிகழ்ச்சிக்கு நம்ப கூட வந்து கலந்துரையாட போகின்ற பிரபலம் யாருன்னா? இவர் சாதாரண ஆள் இல்லேங்க.. பொண்ணுங்க மத்தில இவருக்கு இவருக்கு எவ்ளோ க்ரேஸ் இருக்குன்னு விவரிக்கவே முடியாது..ஸ்கூல் பொண்ணுங்க ஆகட்டும், காலேஜ் பெண்கள் ஆகட்டும், பல்லு முளைக்காத பாப்பபா ஆகட்டும், பல்லு போன ஆயா ஆகட்டும்.. எல்லாரும் இவர பாக்கணும், இவர் கிட்ட பேசணும்னு துடியா துடிக்கிறாங்க..  அந்த அளவுக்கு இவர் ஒரு கண்ணன், காதல் மன்னன், செல்ல பிள்ளை, இவர் இன்றி நான் இல்லைன்னு கூட சொல்லலாம்.. இவர பத்தி இன்னும் சொல்லிட்டே போகலாம்.. ஆனா நீங்க ”பேசுனது போதும், அவர கூப்டு”ன்னு என்ன கோபமா திட்றது கேக்குது.. வாங்க வானவில் கார்த்திக்.. 



(விசில் விசில்.. பெண்களின் கூச்சல் சத்தம்)


ஜிப்சி சுமா: வணக்கம் கார்த்திக்.. நியூ இயர் விஷேஸ்.. 

கார்த்திக்: உங்களுக்கும், நேயர்கள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

ஜிப்சி சுமா: அது என்ன நேயர்கள், உங்க ரசிகர்கள் சொல்லலாமே.. குறிப்பா பெண் ரசிகர்கள்..

கார்த்திக்: எங்க இப்டி கோர்த்து விடுறீங்க?

ஜிப்சி சுமா: ஹஹஅஹஹா.. பெண்களுக்கு உங்க கிட்ட பிடிச்சதே இந்த தன்னடக்கம் தான்..

ட்ரிங் ட்ரிங்

ஜிப்சி சுமா: ஹல்லோ.. யாரு எங்க இருந்து அழைக்கிறீங்க?

ஹலோ.. வானவில் உங்க சாய்ஸ்சா? கார்த்திக் இருக்காரா?

ஜிப்சி சுமா: ம்ம்ம்.. பேசுங்க.. 

ஹல்லோ.. கார்த்திக்?

கார்த்திக்: சொல்லுங்க.. உங்க பேரு?

என் பேரு ஜெஸ்ஸி.. ஐயோ.. என்னால நம்ப முடியவே இல்ல.. 

கார்த்திக்: உங்கள கிள்ளி பார்த்துகோங்க..

ஜெஸ்ஸி: நீங்க வந்து கிள்ளுங்க.. ஹிஹிஹிஹி..

கார்த்திக்: நல்ல ஹியுமர் சென்ஸ்.. 

ஜெஸ்ஸி: நான் உங்களுக்கு ரொம்ப வருஷமா ட்ரை பண்ணிட்டு இருக்கேங்க.. லைன் கிடச்சதுல இருந்து என்ன பேசுறதுன்னே தெரில.. 

ஜிப்சி சுமா: நீங்க மட்டுமா, தமிழ் நாட்டுல பாதி அழகான பெண்கள் இவருக்கு ட்ரை பண்ணிட்டே தான் இருக்காங்க.. 

கார்த்திக்: நீங்க வேற மாட்டி விடறீங்களே.. சரி ஜெஸ்ஸி நீங்க என்ன பண்றீங்க? 

ஜெஸ்ஸி: நா உங்க கூட பேசிட்டு இருக்கேன்.. ஹிஹிஹி..

கார்த்திக்: சரி.. வேற என்ன பண்றீங்க? 

ஜெஸ்ஸி: டிவில லைவ்வா உங்கள பாக்குறேன்.. ஹிஹிஹி

கார்த்திக்: ஜெஸ்ஸி.. நீங்க அண்ணா ஆதர்ஷ் காலேஜ்தானே? 

ஜெஸ்ஸி: ஆமா.. எப்டி கண்டுபிடிச்சீங்க?

கார்த்திக்: உங்க ஹியுமர் சென்ஸ்லேயே தெரியுது நீங்க எந்த காலேஜ்ன்னு

ஜிப்சி சுமா: வாவ்.. சூப்பர் கார்த்திக்.. பேசுறதுலேயே கண்டுபிடிகிறீங்க எந்த காலேஜ்ன்னு.. சான்சே இல்ல..

கார்த்திக்: எல்லாம் அனுபவம் தாங்க.. 

ஜிப்சி சுமா: சரி ஜெஸ்ஸி.. உங்களுக்கு கார்த்திக் கிட்ட எதாவது கேள்விகள் கேக்கணுமா?

ஜெஸ்ஸி: அவரோட ட்ரீம் கேர்ள் எப்படி இருக்கணும்னு ஆசபடுறாரு?

கார்த்திக்: இப்டில்லா கேட்டு எங்க மாட்டி விடுறேங்க?

ஜெஸ்ஸி: ஒருவேள அவரு கண்டுபிடிச்சிட்டாரா கேட்டு சொல்லுங்க..

கார்த்திக்: என் ட்ரீம் கேர்ள் எனக்கு புடிச்ச மாதிரி இருக்கணும்ங்க..

ஜெஸ்ஸி: ஓஓ.. அப்போ உங்களுக்கு புடிச்ச பொண்ணு எப்டி இருக்கணும்?

கார்த்திக்: என் ட்ரீம் கேர்ள் மாதிரி இருக்கணும்க..

ஜெஸ்ஸி: அப்போ ட்ரீம் கேர்ள்?

கார்த்திக்: எனக்கு புடிச்ச மாதிரி இருக்கணும்..

ஜெஸ்ஸி: ஐய்யோ.. கார்த்தி எப்டிங்க? செமயா பேசுறீங்க.. இதுனால தாங்க உங்கள எனக்கு புடிச்சிருக்கு..

ஜிப்சி சுமா: சரி.. நீங்க நல்லா பாடுவீங்க கேள்விப்பட்டோமே.. நம்ப கார்த்திக்காக ஒரு பாட்டு பாடுங்க..

ஜெஸ்ஸி: ஐயோ.. எனக்கு வெக்கமா இருக்குங்க.. ஹிஹிஹி

கார்த்திக்: உங்கள பொண்ணு பாக்கவா வந்தோம்.. சும்மா பாடுங்க..

ஜெஸ்ஸி: கார்த்திக்கோட விண்ணைத்தாண்டி வருவாயாஎனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுல இருந்தே பாடுறேன்..

மன்னிப்பாயா, மன்னிப்பாயா
ஒரு நாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே.. மன்னிப்பாயா.. 

நல்லா இருந்துச்சா?

க்ளாப் க்ளாப்

ஜிப்சி சுமா:  சூப்பரா பாடுனீங்க.. உங்களுக்காக இந்த சாங்கயே நாங்க ப்ளே பண்றோம்..


பாடல் முடிந்தவுடன்


ஜிப்சி சுமா: நெறய பெண்கள் உங்ககிட்ட பேசணும்ன்னு ஆசயோட இருக்காங்க.. அடுத்த நேயர் யார் எங்க இருந்து அழைக்கிறாங்க பாக்கலாம்.. வணக்கம் ஜிப்சி உமா, வானவில் உங்கள் சாய்ஸ்

ஹெல்லோ.. வானவில் கார்த்திக்..

ஜிப்சி சுமா: பெண்ணுக்கு பெண்ணே எதிரின்னு சும்மாவா சொன்னாங்க.. பாருங்க.. இங்க ஒருத்தி நிகழ்ச்சி நடத்துறா, அவகிட்ட பேசணும்ன்னு யாருகாச்சும் தோணுச்சா?

கார்த்திக்: ஹாய்.. உங்க பேரு

கார்த்திக்.. எப்டி இருக்கீங்க.. நான் பிரியா பேசுறேன்

கார்த்திக்: நானும் ப்ரியா தான் பேசுறேன்.. ஏனா இது அவுட்கோயிங்ல.. 

ப்ரியா: ஹாஹாஹா.. இதே மாதிரி தானே நீங்க அன்னிக்கு நாம மீட் பண்ணும் போதும் ஜோக் பண்ணீங்க.. சூப்பர் கார்த்திக்

கார்த்திக்: ஹெல்லோ.. ப்ரியா, நாம முன்னாடி மீட் பண்ணோம்?

ப்ரியா: ஆமா, சென்னை ப்ரியா மறந்துட்டீங்களா?

கார்த்திக்: சென்னைல்ல எந்த காலேஜ்?

ப்ரியா: வுமன்ஸ் காலேஜ்..

கார்த்திக்: எனக்கு நெறய ப்ரியா தெரியுமே.. இன்னும் Details ப்ளீஸ்

ப்ரியா: எத்திராஜ் காலேஜ்

கார்த்திக்: எந்த டிப்பார்ட்மெண்ட்? எனக்கு பிசிக்ஸ், மேத்ஸ், கெமிஸ்ட்ரி, காமர்ஸ், விஸ்காம்ல கூட ப்ரியா தெரியுமே..

ப்ரியா: அடப்பாவி.. கெமிஸ்ட்ரி..

கார்த்திக்: கெமிஸ்ட்ரில எந்த இயர்? எனக்கு எல்லா இயர்லயும் தெரியுமே?

ப்ரியா: ஓ காட்.. செகண்ட் இயர்..

கார்த்திக்: நீங்க R.ப்ரியாவா இல்ல D.ப்ரியாவா இல்ல S.ப்ரியாவா?

ப்ரியா: எங்க க்ளாஸ்ல எல்லாரையும் தெரியுமா? நான் S.ப்ரியா

ஜிப்சி சுமா: அட என்னங்க நீங்க.. தெரிஞ்ச பெண்கள் கையளவு.. இவர அறிந்த பெண்கள் உலகளவு..

ப்ரியா: கார்த்திக்.. அன்னிக்கு நாம கபே காபிடேல்ல மீட் பண்ணும் போது ஒரு லவ் ஸ்டோரி சொன்னீங்க.. சான்ஸே இல்ல.. அதுவும் English  Dialogs.. சில பேரு பீட்டர் விடுறதுக்காக பேசுவாங்க Like பீட்டர் மேனன்.. ஆனா நீங்க அப்டி இல்லாம, எங்க எப்டி பேசணும்ன்னு கரெக்ட்டா இருக்கீங்க.. உங்க எழுத்துக்கும், பேச்சுக்கும் நான் ரசிகை..

கார்த்திக்: ரொம்ப நன்றிங்க..

ப்ரியா: எப்டி உங்களால இப்டி எழுத முடியுது? அதோட ரகசியம் சொல்லுங்களேன்.. அதுவும் உங்க இங்கிலீஷ்.. சிம்ப்ளி சூப்பர்ப்..

கார்த்திக்: ரொம்ப புகழ்றீங்க.. நான் அந்த அளவுக்கு Worth இல்லைங்க..

ஜிப்சி சுமா: அந்த ரகசியம் தெரிஞ்சா நீங்களும் கார்த்திக் ஆகிடுவீங்கல்ல.. So let that be secret..

ப்ரியா: சுமா, நான் கார்த்திக்காக ஒரு கவிதை எழுதிருக்கேன்.. சொல்லவா?

ஜிப்சி சுமா: கண்டிப்பா..

ப்ரியா: 
உலகை ரசிக்க என் அம்மா சொன்னாள்
ஆனால் நான் ரசித்ததோ உன்னை
காரணம் நீ என் உலகம் என்பதால் அல்ல..
நீ பிறந்த அன்று தான் உலகும் பிறந்தது – அதனால்


க்ளாப் க்ளாப் க்ளாப்..

ஜிப்சி சுமா: பின்னிட்டீங்க.. 

கார்த்திக்: ரொம்ப நன்றிங்க.. ஆனா கவிதைய கேட்டா எனக்கு மேவி தான் பொண்ணு வாய்ஸ்ல பேசுறாரோ ஒரு டவுட்..

ப்ரியா: ஹாஹா.. இல்ல கார்த்திக்.. I wish you all success.. நீங்க இன்னும் நெறய எழுதணும்.. பிசிக்ஸ் நோபல் பரிசு வாங்கணும்.. எனக்கு கார்த்திக்கு புடிச்ச பாடலையே போடுங்க..

ஜிப்சி சுமா: அழைத்ததற்கு ரொம்ப நன்றி.. நீங்க கேட்ட மாதிரியே கார்த்திக்கு புடிச்ச பாட்டு வருது.. என்ஜாய் பண்ணுங்க..


பாடல் முடிந்தவுடன்


ஜிப்சி சுமா: ஒரே பெண்களா பேசுறாங்களே கார்த்திக்.. ஹல்லோ

ஹல்லோ வானவில் உங்க சாய்ஸ்.. கப்சி சுமா எப்டி இருக்கீங்க?

ஜிப்சி சுமா: நான் நல்லா இருக்கேன்.. என்னடா பையன் போன் பண்ணலையே யோசிச்சேன்.. கார்த்திக் கிட்ட பேசுறீங்களா?

அவன் கிடக்குறான்.. நாம பேசலாம் சுமா.. எப்டி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?

ஜிப்சி சுமா: எல்லாரும் நலம்.. உங்க பேரு, நீங்க எப்டி இருக்கீங்க?

நான் 27 வயசு தடியன், மனசலவுல பொடியன், பேசுனா கடியன், கோவம் வந்தா வெடியன்

ஜிப்சி சுமா: வாவ்.. நீங்க கண்டிப்பா விஜய் ஃபேன்னா தான் இருப்பீங்க.. இந்த பஞ்ச் டயலாக் கேட்ட உடனே 4 பேரு ஓடிட்டாங்க..

என் பேருகார்க்கி.. எனக்கு தளபதின்னா ரொம்ப பிடிக்கும்ங்க..

ஜிப்சி சுமா: எப்டி இருக்கீங்க?

கார்க்கி: கில்லி மாதிரி இருக்கேன்.. என் ஃப்ரெண்ட் ஷாஜகான், பத்ரி இவங்க எல்லாம் உங்க ஃபேன்.. மதுர, திருப்பாச்சி, சிவகாசி எங்க போனாலும் உங்க நிகழ்ச்சிய தவறாம பாப்பேன்..


ஜிப்சி சுமா: ரொம்ப சந்தோஷமா இருக்கு, எனக்கு இவ்ளோ ஃபேன்ஸ் இருக்காங்கன்னு.. சரி கார்த்திக் கிட்ட பேசுங்க..

கார்த்திக்: ஹாய் கார்க்கி.. தோழி எப்டி இருக்காங்க?

ஜிப்சி சுமா: சச்சின் மாதிரி இப்போ தான் எனக்கு ஒரு 50 அடி போட்டாங்க.. ஹாஹா.. அவங்க வளர்த்த குருவிய, இந்த அழகிய தமிழ்மகன், ஒரு வேட்டைக்காரன் கிட்ட பந்தயம் கட்டி தோத்து போனதுல அவங்க எனக்கொரு புதிய கீதை எழுதி இருக்காங்க.. 

கார்த்திக்: ராசா.. ஒத்துக்றேன்.. அண்ணா வாழ்க.. Me The பாவம்ல.. எதாவது கேள்வி கேக்கணுமா?

கார்க்கி: நீங்க எப்போ மேசேஜ் பண்ணாலும் ட்விட்டர் வாங்க சொல்றீங்க.. ஆனா ட்விட்டர்ல பையன் பேருல வந்தா உங்கள பாலோ பண்ண முடில.. ட்விட்டர் கூட பொண்ணு பேருல வந்தா தான் உங்க Profile-ல Follow பட்டன் காட்டுது.. என்ன கொடும கார்த்திக் இது?

கார்த்திக்: அவ்வ்வ்வ்வ்.. நான் என்னங்க செய்ய முடியும்?

கார்க்கி: உங்க அழகின் ரகசியம் என்ன கார்த்திக்? எப்டி இவ்ளோ கேர்ஸ்ஸ சமாளிக்கிறீங்க? Joe This is for you சொல்லி Girls ஃபேன்ஸ் சேக்குறாங்க.. ஆனா நீங்க அப்டி இல்லாம எப்டி ஈர்க்குறீங்க?

கார்த்திக்: நான் ரொம்ப ஸ்விட்ங்க.. அதான் ஈஈஈஈ-ர்க்குறேன்..

கார்க்கி: அருமை அருமை.. சரி கார்த்திக் நான் உங்களுக்காக தோழி அப்டேட்ஸ் சொல்லவா?

ஜிப்சி சுமா: ஆரம்பிச்சிட்டாரே.. விஜய் இல்லாட்டி தோழி.. ம்ம்ம்ம்.. சொல்லுங்க..

கார்க்கி: தோழி கேட்டாள்.. எப்டிட்டா காதலே வராத என் மனசுக்குள்ள நீ வந்தேன்னு.. நான் சொன்னேன், உன் மனச திறக்குற சாவிஎன்கிட்ட இருக்குல்ல.. என்னடான்னு அவ கேக்க, அதான் கார்க்-கீன்னு நா சொன்னேன்..

கார்த்திக்: சூப்பர் சகா.. 

கார்க்கி: இன்னொன்னு சொல்றேன்.. தோழியுடன் பைக்கில் செல்லும் போது சிக்னலில் மாட்டிக்கொண்டேன்.. நிமிடங்கள் ஓட, நான் தோழியிடம் சொன்னேன், ‘நானும் அந்த சிகப்பு விளக்கும் ஒன்று, உன்னை பாக்க நாங்க எவ்ளோ நேரம் “சிக்னல்” கொடுக்குறோம் பாரு என்றாள்.. 

கார்க்கி: கோபத்தில் தோழி சொன்னாள், போடா இதயமே இல்லாதவன் என்று.. ஆமாம், என் இதயம் அவளிடம் தானே இருக்கிறது..

கார்த்திக்: கலக்குறீங்க.. நான் ஒண்ணு சொல்றேன்,

I'm attracted to you like the Earth is attracted to the Sun - with a large force inversely proportional to the distance squared.

கார்க்கி: வாவ்.. நீங்க நீங்க தான், நாங்க நாங்க தான்.. பிசிக்ஸ் பிசிக்ஸ் தான், பீட்டர் பீட்டர் தான், மொக்க மொக்க தான்.. 

கார்த்திக்: சகா, அப்றோம் எப்ப பாக்குறது?

கார்க்கி: காவலன் வருதுல்ல.. வாங்க கார்த்திக்..

கார்த்திக்: ஹல்லோ.. உங்க டி.வி. வால்யும்ம கம்மி பண்ணுங்க.. ஹல்லோ

ஜிப்சி சுமா: கால் கட் ஆகிடிச்சு.. காவலன் சொன்னா எல்லாமே கட் ஆகிடும் போல.. சரி நம்ப தளபதி ரசிகர் கார்க்கிக்கு ஒரு விஜய் ஸாங்க் போடலாம், பாத்து மகிழுங்க..


பாடல் முடிந்தவுடன்


ஹல்லோ..வானவில் உங்கள் சாய்ஸ்.. நான்மேவி பேசுறேன்..

ஜிப்சி சுமா: பின்னாடி ஒரே சத்தமே இருக்கே..

மேவி: அங்க பாவி பேசுறான்..

ஜிப்சி சுமா: சொல்லுங்க மேவி, என்ன பண்றீங்க?

மேவி: நான் இப்பொ தான் குலித்லிங்கோ போங்கமன்கோன்னு ஒரு படம் பார்த்தேன்… 1950’s ல வந்த படம்..
ஜிப்சி சுமா: கார்த்திக் கிட்ட பேசுறீங்களா?

மேவி: கண்டிப்பா.. கார்த்திக் எப்டி இருக்க? அந்த அண்ணா யுனிவர்சிட்டி மேட்டர் சொல்லவா?

கார்த்திக்: யோவ்வ்.. வேணாம்யா..

ஜிப்சி சுமா: என்னது, சொல்லுங்க, சொல்லுங்க..

மேவி: இவர் அண்ணா யுனிவர்சிட்டில்ல படிக்கிறாருன்னு ஒரு புரளி கிளம்புன அப்றோம், நெறய பொண்ணுங்க Unjoin பண்ணிட்டாங்க, சில பேரு அட்மிஷன் வாங்க கூட வரல..

ஜிப்சி சுமா: என்னது? ஏன் மேவி?

மேவி: இவங்க அண்ணா யுனிவர்சிட்டில்ல சேர்ந்தா, ஊருல இருக்குறவங்க, ‘என்னம்மா, நீயும், கார்த்திக்கும் அண்ணாவாமே’கேக்குறாங்களாம்.. இந்த பழிபாவத்துக்கு ஆள் ஆக வேணாம்னு தான் இப்டி செஞ்சிட்டாங்க.. இப்போ தெரிஞ்சிக்கோங்க இவர் ஏன் லயோலால படிக்கிறாருன்னு.. அவர் கற்புக்கு சேதாரம் இன்றி உத்தரவாதம் கிடைக்க தான்..

ஜிப்சி சுமா: சூப்பர் நியுஸ்ங்க.. சொன்னதுக்கு நன்றி.. உங்க ஃப்ரெண்டுக்கு ஏதாவது கவிதை சொல்லுங்க..

மேவி: அப்பாவின் மீசை
கார்த்தி மேல எல்லாருக்கும் ஆசை

அப்போ சட்டென்று ஃபோனை ஒருத்தர் புடுங்கி..

யோவ் கார்த்தி..

கார்த்திக்: யாரு? மேவி ஃப்ரெண்ட் பாவியா?

ஆமாய்யா.. லொல்லு கார்த்தி என்கிற பாவி..

ஜிப்சி சுமா: வாவ்.. கார்த்திக் காலிங் கார்த்திக்.. சூப்பர்ல..

லொல்லு: யோவ்.. உன்ன இது மாதிரி ஷோல வந்தா தான் புடிக்க முடியுது.. போன் பண்ணா Switch Off, Not Reachable

கார்த்திக்: சாரி பாஸ்.. போன் ரீப்பர் ஆகிட்டே இருக்கு.. 

லொல்லு: இத தான்யா நீ 4 மாசமா சொல்லிட்டு இருக்க.. எனக்கு தெரிஞ்சு உலகத்துல உன் போன் தான் நாலு மாசமா டெய்லியும் ரீப்பேர் ஆகுது.. இத கூட பொறுத்துப்பேன்… ஆனா உனக்கு கால் பண்ணா கூட ஒரு பொண்ணு தான் பேசுது.. அதுவும் இங்கிலீஷ்ல 'The subscriber you are trying to reach is currently switched off' பேசுது.. கம்ப்யூட்டர் ரெக்கார்ட் வாய்ஸ் கூட உனக்கு மயங்குதுய்யா.. சிட்டிசன் அஜித் மாதிரி எரியுதுல்லே.. வவுறு எரியுதுல்லே..

கார்த்திக்: பாஸ்.. நான் என்ன பண்ண முடியும்.. வீட்ல புது போன் வாங்கி தர மாட்டேங்றாங்க..

லொல்லு: அப்டியே உங்க போன் அதிசயமா வேல செஞ்சாலும், User Busy.. கடலை கடலை.. எரியுதுல்லே.. வவுறு எரியுதுல்லே..

கார்த்திக்: பாஸ்.. சத்யமா நான் பசங்க கிட்ட தான் பேசுறேன்.. அவ்வ்வ்வ்.. நம்புங்க.. நாம எப்ப மீட் பண்றது தல?

லொல்லு: தக்காளி.. ஒரு வருஷமா நீ என்கிட்ட பேசுன அதிகமான வார்த்த இதான்.. ஜெமினி-வானவில்போற ஷேர் ஆட்டோல்ல கூட போனேன்யா, அப்போயாச்ச்சும் வானவில்ல உன்ன பாக்கலாம்ன்னு.. நீ அடிக்கடி மீட்ல இருந்து ஜகா வாங்குனதால, சென்னைல மழையும் அவ்ளோவ இல்ல.. ஏன்னு கேக்குறீயா? வானவில் வந்தா தான் மழை வருமாம்…

கார்த்திக்: முடில பாஸ் :(

லொல்லு: மீட் ப்ளான் போட்டா, மெட்ராஸ்ல எல்லாரும் என் மேல ’கண்ணு’ வச்சிட்டாங்க.. அதுனால எனக்கு மெட்ராஸ் ஐ, அப்றோம் எக்ஸாம், ஊருக்கு போறேன்னு எஸ்கேப் ஆகிடுற.. எங்க உளவுத்துறையின் நம்பகத்தகுந்த வட்டாரம் நீங்க அடிக்கடி இ.சி.ஆர்க்கு போறீங்க சொல்லுது.. கற்பத்தையும், காதலையும் ரொம்ப நாள் மறைக்க முடியாது..

கார்த்திக்: தல.. ப்ளிஸ்.. நான் சின்ன பையன்.. இத்தோட விட்டுடுங்க.. :(((((((((((((( கண்டிப்பா புது வருஷம் நாம பாக்கலாம்.. இத்தோட நாம நிறுத்திப்போம்..

………………



பவர்கட்..


பிறந்த நாள் வாழ்த்துக்கள் வானவில் கார்த்திக்.. அவர் ப்ளாக் பார்க்க, சொடுக்குங்க இங்க - கார்த்திக்


டிஸ்கி:வானவில் கார்த்திக் கெஞ்சி கேட்டதால இதோட நான் நிறுத்திக்கிறேன்.. கொலவெறி போஸ்ட் எழுத ரொம்ப நாள் ஆச.. சீக்கிரம் நாம மீட் பண்ணுவோம்.. இல்லாட்டி இருக்கவே இருக்கு ஜனவரி 1, 2012








வருகைக்கு நன்றி!! 


யுத்தம் செய் - மிஷ்க்கின்’ஸ் டச் கம்மி

$
0
0



காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது


இந்த குறளுக்கான விளக்கத்தை தனது பாணியிலே, கொஞ்சம் யதார்த்தம், கொஞ்சம் சினிமாத்தனம், கொஞ்சம் நாடகத்தன்மையோடு கலந்து கொடுத்திருக்கிறார் மிஷ்க்கின் தனது யுத்தம் செய்யில். டாக்டர் புருஷோத்தமன் (ஒய்.ஜீ.மகேந்தரன்)முன்பு செய்த நன்மைக்கு நன்றிக்கடனாக, ஜீடாஸ் (ஜெயப்பிரகாஷ்)செய்தது என்ன? டாக்டரின் மனைவி, தன் தங்கைக்கு செய்த நன்மைக்கு நன்றிக்கடனாக ஜெ.கே (கிருஷ்ணமூர்த்தியாக சேரன்)செய்தது என்ன? இதை ‘Man's Search for Meaning’என்ற ஒரு ஷாட்டில் விவரித்திருப்பது மிஷ்க்கின்’ஸ் டச்.



கதவு க்ரீச்ச் சத்தம், நிழல் உருவம், வாயை மூடிக்கொண்டு ஹீரோயின் ஆஆஆஆஆஆ என்று அலறுவது – த்ரில்லர் படத்திற்கான Default வரைமுறைகள் இல்லாமல், இயல்பாக (கொஞ்சம் பொறுமையாகவும்) கதையை நகர்த்தி செல்கிறார். படத்தின் முக்கிய ப்ளஸ், கதாபாத்திரங்கள். மேன்ஷன் பையன் முதற்கொண்டு கான்ஸ்டெபிள் வரை கனக்கச்சிதம். சேரன் முந்தய படங்களைப் போல சொல்லும்மா என Over-do செய்யாமல் சிறப்பாக நடித்துள்ளார். தன் தங்கையை காப்பாற்ற முடியாத இயலாமையை வெளிப்படுத்தும் காட்சி- சபாஷ். படம் முடிந்தும் ஜெயப்பிரகாஷ் மனதில் நிழலாடுகிறார். ‘The observer is observed’என்று சாதரணமாக இவர் க்ளூ விட்டு செல்லும் வசனம் – ‘ஷார்ப்’ ப்ளாஷ்பேக் விவரிக்கும் காட்சியில் கொஞ்சம் சிவாஜியிஷ்ஷா தெரிந்தாலும், அந்த அத்தியாயம் – Hard-hitting and haunting.





படத்தில் சிறப்பாக தெரிந்த மத்த விஷயங்களில் ஒன்று Realism. படபடக்கவைக்கும் இசையோடு, அதிரடி விசாரணையைப் பார்த்த நமக்கு இதில் தத்ரூபமாக CBCID Officer கண்ணோட்டத்தில் கொண்டு சென்ற பாணி அருமை. சவக்கிடங்கை அதே போல காட்டிருப்பது பார்க்கும் நமக்கே மூக்கை பொத்திக்கொள்ள வைக்கிறது.. கடைசியாக 7Gஇல் பார்த்தது, அதை விட இதில் பன்மடங்கு Impact. பொசுக்கென்று துப்பாக்கி தூக்கி, விறைப்பாய் தெரியும் சினிமா போலிஸாய் இல்லாமல், ஒரு Gun வாங்க என்னென்ன Procedures இருக்கிறது என்று காட்டிருப்பது – நல்ல Research. (படம் முழுவதும் கான்ஸ்டெபிள் துப்பாக்கி வைத்திருக்க மாட்டார் – அட) அதே போல Mortuary காட்சிகளில் எரிந்து போன பிணங்களை எப்படி அடையாளம் காண்கிறார்கள் போன்றவற்றைக் கூட நுணுக்கமாக புரியும்படி விவரிக்கும் காட்சிகள் – சூப்பர் மிஷ்க்கின்



'பணத்தாலும், அதிகாரத்தாலும் எவ்ளோ தான்டா அடிப்பீங்க? நாங்களும் எவ்ளோ தூரம் தான்டா ஓடுறது, இப்போ நாங்க அடிக்கிறோம், நீங்க ஓடுங்க'என்ற வசனத்தில் ஆதங்கத்தின் வீரியம்.. அதே போல ஏன் சார் ரேப்ன்னு எழுதல என்ற கேள்விக்கு ‘எனக்கும் இவ வயசுல ஒரு பொண்ணு இருந்தா, இறந்துட்டா’இது மாதிரி பல செயற்கை பூசப்படாத வசனங்கள் நம்மை கவர்கின்றன.. கேமரா அடேங்கப்பா.. வசனங்கள் இல்லாத இடத்தில் கேமராவை பேச வைத்திருப்பது மிஷ்க்கின் ஸ்டைல். கொஞ்சம் அஞ்சாதே பீல் இருந்தாலும், Aerial, Top Angle shots, Rotational movementsல் இசையோடு கலந்து பேசுகின்றன. Investigation காட்சிகளில் இறந்தகாலத்துடன் நிகழ்காலம் Sync ஆகும் இடத்தில் எடிட்டிங் அருமை.  Pandora Box Theme (பெட்டி கண்டுபிடிக்கப்படும் போது வரும் இசை) misfitting ஆக தெரிந்தாலும், பல இடங்களில் பளிச்.



அழகாக கொண்டுபோய் கடைசியில் ஸ்லிப் ஆகுவது போல த்ருஷ்டி பூசணிக்காய் க்ளைமாக்ஸ். 80களில் வந்த செண்டிமெண்ட் ப்ளஸ் ராஜ்கிரண் ஸ்டைல் உடல் அசைவுஒட்டவே இல்லை.. சுடப்பட்டவுடன் ஜீடாஸ் கொடுக்கும் நம்பகத்தகுந்த விளக்கம், இங்கே மிஸ்ஸிங்.. அதே போல இடைவேளி சண்டை, நன்றாக இருந்தாலும், தேவையா என்று யோசிக்க வைக்கிறது. கொஞ்சம் அஞ்சாதே ஹாஷ்பிட்டல் Effect, கொஞ்சம் கேப்டன் Effect. அதே போல முதல் அரைமணி நேரத்தில் சம்பந்தமே இல்லாத கொலைகள் நம்மை கலங்கடித்தாலும், அதை சேரன் விவரித்து ஒரு புள்ளியில் சேர்க்கும் காட்சி, திரைக்கதையின் சிறப்பு. கொஞ்சம் கவனிக்க தவறினாலும், போச்சு… ஈசனை நினைவு படுத்தினாலும் அதை விட நன்றாகவே செய்துள்ளார் (க்ளைமாக்ஸ், சஷ்பென்ஸ் தவிர)



Realistic படங்களை தந்த மிஷ்க்கின் இங்கே க்ளைமாக்ஸ்ஸில் சொதப்பிவிட்டார். Drama + Thriller Style ஹாலிவுட் பாணியில், நமக்கு புதுசா தெரிந்தாலும், மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என தெரியவில்லை.. அஞ்சாதே அளவுக்கு இல்லை.. ஆனால் மிஷ்க்கின் சோடை போகவில்லை... அடுத்த படத்தில் இந்த குறைகளை நீக்கி, இன்னும் நல்ல படத்தை தருவார் என நம்புகிறேன்...


48 பூச்செண்டு தரலாம்



யுத்தம் செய் – கொஞ்சம் பழைய பாணியில் கொஞ்சம் பழைய மிஷ்க்கின்


வருகைக்கு நன்றி!! 

ஆடுகளம் - 2011 உலக கோப்பை

$
0
0



உசுருக்கு சமமானதுடா கப்பு.. இதுவரைக்கும் பந்தயத்துல ஒரு தடவ கூட ஜெய்ச்சதில்ல.. இந்த கிழவி போறதுக்குள்ளே ஒரு தடவயாச்சும் ஜெயிச்சிடணும்டா






என் மாப்ள சோகமா இருக்க?


இந்த ஐரேன் அம்பயர் புள்ள ‘GO TO YOUR HOME’ சொல்லி அசிங்கப்படிட்டா மச்சான்..










WHAT YOU WANT? WHAT’S YOUR PROBLEM?

ஐ ஆம் ஹாசன்.. ஷகிப்-அல்-ஹாசன் (ஆமா மனசுல கமலஹாசன்னு நினப்பு)






What are you doing?

மீ? ஐ பால் வுட்டிங்.. பால், BIG WHITE BALLS. ONE BALL, அப்றோம் TWO BALLS.








அய்யயயோ சிக்ஸரா பறக்குதடி

ஆகாயம் இப்போ இறங்குதடி

என் வீட்டில் யாரும் பாக்கலடி

மேட்ச்லா கொடுக்குறாங்க மரண அடி







சார், ஏற்கனவே சூதாட்ட புகார்ல உங்க அணி அடிப்பட்டு இருக்கு.. போதாகுறைக்கு கேப்டன் வேற மாத்துறாங்களாம்.. அதுனால கொஞ்சம் பயத்தோட ஆடணும் போல?

ஹெ ஹேய்.. பயமா? எங்களுக்கா? நாங்களா சுனாமிலேயே சிக்ஸ்ர் அடிக்கிறவங்க





ஒத்த ஷாட்டால இவன் மேட்ச்ச இப்போ மாட்டிபுட்டான்



ரெண்டா ஷாட்ல அவுட் ஆனான்டா






இந்தா.. மூணு தடவ ஜெய்ச்சது முக்கியமில்ல. இனிமே ஜெய்க்கறதுல்ல தான் இருக்கு எல்லாமே..











சங்ககாரா சும்மாவா பேர வச்சாங்க? மேட்ச்ல எந்த மூள முடுக்குல பால்ல அடிச்சாலும், ஆட்டம் முடியறதுக்குள்ள அவனுங்க சங்க அறுக்காம விடக்கூடாதுடா மாப்ள..








நம்ப பைய பூரா க்ரவுண்ட்ல இறங்குறோம்.. விக்கெட்டா தூக்குறோம், மல மலையா ரன்ஸ் அடிச்சு அவுங்கள சாய்க்கிறோம்


உத வாங்குற கைப்புள்ளைக்கே இவ்ளோ ஆக்ரோஷம்னா, அப்போ இவனுக்கு  உத கொடுத்தவங்க எப்டி இருப்பாங்க?











யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே


தோத்தே தோத்தே ஊருக்கு போயாச்சே










அண்ணே என் பால் கண்டிப்பா விக்கெட் எடுக்கும்னே.. நம்புண்ணே..



சரி.. நீங்க ஆப்-ப்ரேக் போடுவீங்களா?


நீ வேற மாப்ள.. வேற எந்த கப்ப பார்த்தும் அண்ணன் இப்டி ஆப் ஆனதில்ல









எல்லாம் நல்லா போயிட்டுருக்கு... கெலப்பு கெலப்புடா தம்பி என்சாய்












இறுதியாக.......................


இந்தா பாரு கப்பு மேல கைய்ய கிய்ய வச்சே வையு கொன்னே புடுவேன்



வருகைக்கு நன்றி!! 





கார்த்தியும், நாலஞ்சு பெண்களும் : பகுதி-1

$
0
0

அருண்: மச்சி உன்ன ஏன்டா எந்த பொண்ணும் நம்ப கிளாஸ்ல மதிக்க மாட்டேங்றாங்க?

கார்த்திக்: டேய்.. இத தான் அவ்வையார் அன்னிக்கே சொல்லி வச்சாங்க..  கழுதைக்கு தெரியுமா கார்த்தியோட யோசனைன்னு..

அருண்: அப்றோம் ஏன்டா என்கூட மட்டும் நல்ல பேசுறாங்க?

கார்த்திக்: அத கூட அவ்வையார் சொல்லிருக்காங்கடா.. அஞ்சு பைசா பெருமானமில்லாத சீன அஞ்சு ஊருக்கும் தெரியும்படி அஞ்சு மணீ நேரம் போடுவாங்களாம் அருண வச்சு..

அருண்: கொய்யால.. நான் உன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்றேன்.. ஆனா நீ என்கிட்ட ஒண்ணுத்தையும் சொல்ல மாட்ற..

கார்த்திக்: என்ன மச்சி இப்டி சொல்ட?

அருண்: ரகசியமாவே எல்லா காரியமும் பண்ற.. டேய்.. நீ யாரையோ லவ் பண்றன்னு நினைக்கிறேன்..

கார்த்திக்: மச்சி.. சத்யமா இல்லடா..

அருண்: பொய் சொல்லாதடா.. சத்யபாமா காலேஜ் பிகராட உன்ன சத்யம் தியேட்டர்ல விஷால் படம் சத்யம் பாக்கும் போது, நம்ப இ.சி.இ சத்யமூர்த்தி பார்த்ததா ஒரு நியூஸ் உலா வருது..

கார்த்திக்: பசி, பஞ்சம், பட்டினி உன்ன இப்டி எல்லாம் பேசவைக்குதுடா.. மெஸ்ல சாப்பாடுக்கு டைம் ஆச்சு.. வா போலாம்..

அருண்: எனக்கு இன்னொரு சந்தேகம்.. பரிசோதனை எலி கேள்விபட்டுருக்கியா?

கார்த்திக்: டிச்கவேரி சேனல்ல காட்டுவாங்களே.. அதானே?

அருண்: ஆமாடா.. அதே தான்... அது மாதிரி நீ என்ன யூஸ் பண்ணி, ஐடியா கிளிக் ஆச்சுன்னா, அத நீ உன் காதல்ல யூஸ் பண்ணிக்கலாம்ன்னு இருக்க.. கரெக்ட்?

கார்த்திக்: என்னடா ஆச்சு உனக்கு? இன்னிக்கு உளறிட்டே இருக்க? நா யாரையும் லவ் பண்ணலடா.. நம்புடா..

அருண்: முடியாது.. எனக்கொரு உண்மை தெரிஞ்சு ஆகணும் சாமி..

..........

அருண்: அனுஷா உன்கூட சேராத, அவன் கொஞ்சம் மோசமான பையன்னு சொல்றா..

கார்த்திக்: அசிங்க படுத்திட்டா..

அருண்: கிருத்திகா இவன் கூட எல்லாம் எப்டி நட்பு வச்சிருக்கன்னு கேக்குறா..

கார்த்திக்: கேவல படுத்திட்டா..

அருண்: ஆர்த்தி கிளாஸ்ல எனக்கு பிடிக்காத முதல் பையன் கார்த்தி தான்னு சொல்டா

கார்த்திக்: அவமான படுத்திட்டா..

அருண்: மோனிகா இவன பார்த்தாலே எரிச்சலா இருக்குன்னு சொல்டா..

கார்த்திக்: மதிக்காம போய்டா..

அருண்: வேதிகா இவன் கூட பழகுறதே பாவம்னு சொல்டா

கார்த்திக்: வேடிக்கையா பேசிட்டா..

அருண்: டேய்.. இங்க என்ன எதுகை மோனை பட்டிமன்றமா நடக்குது?

கார்த்திக்: அதான் கிளாஸ்ல இருக்குற ஒட்டுமொத்த பொண்ணுங்களும் பிடிக்கலன்னு சொல்றாங்க.. மொத்தமா Declare பண்றத விட்டுட்டு Individuala declare பண்ணி Memory வேஸ்ட் பண்ற?

அருண்: என் இவங்க இப்டி பேசுறாங்க?

...

அருண்: உனக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சன?

..

அருண்: காலேஜ் ஆரம்பிச்சு 2 Months அப்றோம் தான் நாம பேச ஆரம்பிச்சோம்..

..

அருண்: அதுக்கு முன்னாடி நீ என்ன பண்ணிட்டு இருந்த?


(எக்கோ)

சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க

சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க

சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க..


**********************

கல்லூரி தொடங்கிய முதல் நாள், அனைவரும் Introduction Sessionனில் தங்கள் பெயர், பள்ளி, ஹாபீஸ் என்று மொக்கை தனமாக சொல்கின்றனர்.. நம்ப கார்த்திக்கை ஈர்த்த பெண் இவள்..

கார்த்திக்: வேதிகா வர்மா.. ஹிந்தி பொண்ணா இருக்கும் போல.. வெள்ள வெளேர்னு இருக்கா.. முதல்ல இவள தான் கரெக்ட் பண்ணனும்

பக்கத்தில் இருக்கும் பையனிடம் கார்த்தி பேச்சு கொடுக்க..

கார்த்தி

ரமேஷ்

கார்த்திக்: ஹிந்தி தெரியுமா?

ரமேஷ்: மாலும்.. எதுக்கு?

கார்த்திக்: மச்சி.. உன் பெயர் என்ன? இத ஹிந்தில எப்டி சொல்றது?

ரமேஷ்: ஏன்டா?

கார்த்திக்: அந்த ப்லு சுடிதார் பொண்ண பிடிச்சிருக்கு..  ஹிந்தி பொண்ணா இருக்கும் போல.. அப்டியே கரெக்ட் பண்ணிடலாமேனு..

ரமேஷ்: ஹிந்தில பேசுனா கரெக்ட் ஆகிடுமா?

கார்த்திக்: மச்சி இப்போ ஒரு கூட்டத்துல 20 பேரு இருக்காங்கன்னா, அதுல தமிழ் பேசுற ஆளுங்க கூட தானே நாம ஈர்க்க படுறோம்.. BE A ROMAN WHEN YOU ARE IN ROME சொல்லிருக்காங்கடா.. So, ஹிந்தி பேசுற பையன்னா அவளுக்கு Extra Attraction இருக்கும்..

ரமேஷ்: நண்பா.. இன்னிக்கு சொல்றேன்.. இந்த கிளாஸ்ல மட்டும் இல்ல, இந்த காலேஜ்லேயே நீ பெரிய ஆளா வருவடா.. Genius da.. ஹ்ம்ம்ம்.. சுக்ரியா க்யா கேளு..

கார்த்திக்: அப்டின்னா?

ரமேஷ்: பேரு சொல்லுங்கன்னு அர்த்தம்டா..

மாலை, கல்லூரி பேருந்தில் கார்த்தி, அதே பேருந்தில் வேதிகா..

கார்த்திக்: Confidence மச்சி Confidence


கார்த்திக் வேதிகா அமர்ந்த இடத்தின் பக்கத்தில் அமர்ந்தான்..

மெதுவாக

கார்த்திக்: சுக்ரியா சுக்ரியா?

வேதிகா திரும்பவில்லை..

கொஞ்சம் சத்தமாக

கார்த்திக்: சுக்ரியா சுக்ரியா..

அவள் அவனை ஒரு பார்வை பார்த்து திரும்பி கொள்கிறாள்..

கொஞ்சம் சத்தமாக,

கார்த்திக்: காது கேக்காது போல.. சுக்ரியா சுக்ரியா சுகிர்யாயாயாயாயா..

வேதிகா: டேய்.. லூசா நீ? எனக்கு காது கேக்கும்.. நீ கொஞ்சம் சுருக்குரியா?


**********************

LAB

மோனிகா,கார்த்திக் பக்கத்துக்கு பக்கத்துக்கு இருக்கையில்.. கார்த்திக் மோனிகா என்ன செய்கிறாள் என்று எட்டி பார்க்க, MATRIMONIAL WEB SITE பார்த்து கொண்டுருக்கிறாள்..

கார்த்திக் 2 ரமேஷ்:மோனிகா MATRIMONIAL வெப்-சைட் ஓபன் பண்ணி வச்சிருந்தா..

ரமேஷ் 2 சந்தியா:மோனி MATRI வெப்-சைட்ல பார்த்துட்டு இருந்தாளாம்

சந்தியா 2 வினோத்: மோனி மேட்டர் வெப்-சைட் பார்த்தாளாம்

வினோத் 2 அபிராமி: மோனிக்கு வெப்-சைட்ல ஏதோ பாக்கும் போது மேட்டர் ஆகிடிச்சாம்

அபிராமி 2 திலிப்:மோனி வெப்-சைட் விஷயமா மேட்டர்ல மாட்டிகிட்டாலாம்.. என்னத்த பார்த்தா?

திலிப் 2 ஜெயஸ்ரீ: மோனி மேட்டர் ஒண்ணு வெப்-சைட்ல வந்துடிச்சாம்

ஜெயஸ்ரீ 2 மோனிகா: உனக்கு ஒருத்தன் கூட மேட்டர் ஆகிடிச்சாம்.. யாருடி அவன்?


இறுதியில் மோனிகா, கார்த்திக் தான் இந்த செய்தியை பரப்பி விட்டான் என்று அவனை அசிங்க அசிங்கமா திட்டி ஓய்கிறாள்

கார்த்திக்: இவ MATRIMONIAL வெப்-சைட் பார்த்தா தானே சொன்னேன்.. அதுக்கு எதுக்கு எனக்கு கல்யாணமே ஆகாதுன்னு சாபம் விட்ரா.. ஆனா ஒண்ணுடா .. MATRI-MONY எப்டிடா MATTER-MONInnu திரித்து சொன்னிங்க..உங்க தமிழ் வாத்தியார் பெரும படுவாருடா...


அசிகங்கள் தொடரும்...


வருகைக்கு நன்றி!!

கார்த்தியும், நாலஞ்சு பெண்களும் : பகுதி-2

$
0
0
பகுதி ஒன்று படிக்க, சொடுக்குங்கள் இங்கே - பகுதி-1


ஆர்த்தியும், ஆனந்தும் பிசிக்ஸ் லேப்ல கெமிஸ்டரி வர்க்-அவுட் செய்து கொண்டிருக்க, மேரி-க்யுரி பூஜையில் ஐன்ஸ்டீன் நுழைந்த கதையா கார்த்திக் தெரியாமல் உள்ளே நுழைகிறான்..



கார்த்திக்: மச்சி.. ஸ்பெக்ட்ரோமீட்டர் Experiment Reading 1 ரூபா தலையன் கேக்குறான்டா.. எப்டி திருப்புனாலும் கலரே தெரிய மாட்டேங்குது..

ஆனந்த்: PRISM வச்சியாடா?

கார்த்திக்: டேய்.. கலாய்க்றியா? காலேஜ்லயும் எல்லாமே மொக்கையா இருக்காங்க.. இங்கேயும் கலர் இல்ல.. Spectrometerலயும் கலர் இல்ல.. ஹிஹிஹி..

ஆர்த்தியின் காதில் அது விழ, அவள் அவனை முறைக்கிறாள்..

கார்த்திக் ஆனந்தின் Record பார்த்து Copy அடிக்க, அவர்கள் கடலை தொடர்கிறார்கள்..

ஆனந்த்: ஹே.. நாளைக்கு அப்போ சர்ச்க்கு போவியா?

ஆர்த்தி: Ofcourse man.

கார்த்திக்: நீங்க christian?

ஆர்த்தி: ஆமா..

கார்த்திக்: ஆர்த்தின்னு பேர் இருக்கு..

ஆர்த்தி: அப்பா Christian அம்மா Hindu.. லவ் Marriage.. So, எம்மதமும் சம்மதம்..

கார்த்திக்: அப்போ உங்ககிட்ட கலர் கலரா நெறைய Scandals இருக்கும்ல?

ஆர்த்தி: பொறிக்கி.. Mind Your words. Anand, Is he your friend? Shit. Cheapa பேசுறான் பாரு..

அவள் அங்கிருந்து நகர்கிறாள்..

ஆனந்த்: டேய்.. லூஸ் கூ*.. ஏன்டா இப்டி இருக்க.. ஒரு பொண்ணு கிட்ட இப்டியா பேசுவ? உன்னால என்ன தப்ப நினைச்சிக்க போறா .

கார்த்திக்: மச்சி.. சாரிடா..  Christianல.. நெறைய Candles வச்சிருப்பாங்க.. அத தாண்டா கேக்க வந்தேன்.. நாக்கு சிலிப் ஆகி வார்த்தை Scandala மாறிடிச்சு..

ஆனந்த்: போடா பு**

அப்போது ஆர்த்தி அவள் நோட்டை எடுக்க வர, அதை கவனிக்காத கார்த்திக்

கார்த்திக்: மச்சி.. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத.. Spectrometerla கலர் பிடிக்க தெரிஞ்ச உனக்கு Lifela நல்ல கலரா பிடிக்க தெரியலையே..

திரும்பி பார்த்தால் ஆர்த்தி..

ஆர்த்தி: நீ என்ன பெரிய மன்மதனா? உன் மூஞ்ச பாரு.. ஆனந்த், This guy is disgusting, Lets go!

கார்த்திக்:  கல(ர்)வரம் கல(ர்)வரம்ன்னு இதுனால தான் சொல்றாங்களா? கர்த்தரே...



**********************

கார்த்தி தன்னோட நோக்கியா 1110 போன்ல விளையாடி கொண்டிருக்க..

மச்சி என்னடா புது ஃபோன்?

கார்த்திக்: இல்லடா.. பழசு தான்.. எங்க அப்பா புது ஃபோன் வாங்கி, அவரோட பழச எனக்கு தந்துட்டாரு..

திலிப்: ஹிஹி.. நல்ல அப்பாடா.. மச்சி, புது ஃபோன் கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ...

கார்த்திக்: ஃபோன் திருடிடுவாங்கன்னா? நான் Socksகுள்ள ஒளிச்சு வச்சிக்குவேன் மச்சி..

திலிப்: டேய்.. கருமாந்தரம் புடிச்சவனே.. காலேஜ் ஸ்டார்டிங் டைம்ல.. அவன் அவனுக்கு மனசுக்குள்ள பட்டாம்பூச்சி, க்ரஷ் எல்லாம் இப்போ தான் ஸ்டார்ட் ஆகும்.. இந்த பொண்ண புடிச்சிருக்கு, அந்த பொண்ண புடிச்சிருக்கு, அவ நம்பர் வாங்கணும்ன்னு உளறி தொலைக்காத..

கார்த்திக்: ஏன்டா அவகிட்ட போய் போட்டு கொடுப்பாங்களா?

திலிப்: அத செஞ்சாலும் பரவால.. இவனுங்க புதுசா சிம் கார்ட் வாங்கி, அந்த பொண்ணு பேருல மெசேஜ் பண்றாங்க...போன வாரம் கிருத்திக்காா பேருல்ல பண்ணாங்க, எனக்கு அவ மேல ஒரு இது இருக்குன்னு தெரிஞ்சு.. நானும் அவ தான்னு நினச்சு ஏமாந்துட்டேன்டா.. கடசில கிளாஸ்ல வந்து நான் தான் இதெல்லாம் பண்ணோம்னு அந்த ஜகா கேங் சொல்லிச்சு... செம கடி ஆகிட்டேன்.. உஷாரா இருந்துக்கோ..


அடுத்த நாள் இரவு - நேரம் இரவு 9.15..

கார்த்தி வழக்கம் போல அந்த ஒண்ணுத்துக்கும் உதவாத ஃபோன்ல விளையாடி கொண்டிருக்க..

பீப் பீப்..

1 மெசேஜ் Received

Hi..

Who is this? 

Kiruthika

கார்த்திக்: ஆகா.. வலைய விரிக்குறாங்க.. சிக்குன்னா சேதாரமே இல்லாம சின்னாபின்னம் ஆக்கிடுவாங்க...

ஹாய் டார்லிங்..

டார்லிங்கா?

கார்த்திக்: ஆமா.. என்ன அழகு எத்தனை அழகு.. நீங்க ரொம்ப சுமார் ஃபிகரா இருக்கீங்க..

லூசா நீ? மெசேஜ் தப்பா அனுப்புறியா? Are you trying to flirt?

கார்த்திக்: கோபப்படாதே.. முனிம்மா கோபப்படாதே..

த்தூ.. நீ லவ் Failure கேஸ் eh? அதான் உளறிட்டு இருக்க..

கார்த்திக்: ஆமா.. இவளுக்கு லவ் அப்டியே சக்சஸ் ஆகி தாஜ்மஹால் பக்கத்துல பில்டிங் கட்டி, சென்னைல நினைவு சிலை வச்சிருக்காங்க.. ச்சீ.. பே..

Wow.. Thats a joke.. LMAO..

கார்த்திக்: இஞ்சினியர் பொண்ணுங்க என்றாலே இஞ்சினியர் பொண்ணுங்க தான்.. மொக்க ஜோக் அடிச்சா சிரிக்கிடுங்க.. சுயமா யோசிச்சு நல்ல ஜோக் சொன்னா ரியாக்‌ஷன் கொடுக்கவே மாட்டேங்கிடுங்க..

போடா லூசு..

கார்த்திக்: ஆமா.. உன் மேல் நான் லூசா இருக்கேன்.. காதல் பைத்தியம்.. லூசு பெண்ணே.. லூசு பெண்ணே...

செருப்பு.. போடா கீழ்பாக், டுமாகோலி..

கார்த்திக்: திட்டு செல்லம் ஆச தீர திட்டு

போடா பிச்ச..

கார்த்திக்: ஆமாம்.. உன்னிடம் காதல் யாசிக்க வந்த நான் ஒரு பிச்சைகாரன் தான்..

 டேய்.. நா காலேஜ்ல கம்ப்ளைன் பண்ணுவேன்..

கார்த்திக்: நான் இன்னிக்கு நைட் காம்ப்ளான் பண்ணுவேன்.. வா செல்லம் ரெண்டு பெரும் குடிக்கலாம்..

த்தூ.. இப்போ போறியா இல்ல குச்சி எடுக்கவா?

கார்த்திக்: குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்.. ஹே ஹே

வேற

கார்த்திக்: வேற சாங் வேணுமா? உன்னை ஒன்று கேப்பேன் உண்மை சொல்ல வேண்டும்..

ஒரு பொண்ணு கிட்ட இப்டி கேவலமா நடந்துக்குற.. உனக்கு வெக்கமா இல்ல?

கார்த்திக்: இல்லையே.. என நீ பொண்ணே இல்லையே.. ஹி ஹி.. ஏன்டா / என்டீ இந்த பொழப்பு? வெக்கமே இல்லையா? ஒருத்தன் அழகா இருந்தா போதுமே.. ஒடனே பல் இளிச்சிட்டு மெசேஜ் பண்ண ஆரம்பிசிடுவீங்களே.. என்ன மாதிரி அழகான ஆண்களுக்கு பாதுகாப்பே இல்ல..

Will you please stop this nonsense? சத்யமா Nil Balance இருக்கு.. இல்லைன்னா போன் பண்ணி நாக்க புடுங்குற மாதிரி கேப்பேன் உன்ன..

கார்த்திக்: எப்ப எவன் கிடைப்பான் அலைறது.. ஆமா இவங்க அப்டியே புடிங்கிட்டாலும்... You cant pluck anything.. நாக்கையும் என்............ சரி விடு, அத என் வாயால சொல்லிக்கிட்டு..

Fuck off.. இதுக்கு மேல உங்கிட்ட பேசுனா செருப்பாலையே அடி என்ன..

கார்த்திக்: நாலு இங்கிலீஷ் படம் பார்த்து Fuck Offன்னு.. அடச்சீ.. பே... போய் மும்பைல ஆபரேஷன் பண்ணிக்கோ..



அடுத்த நாள், கார்த்தியை கிருத்திக்கா அடிக்கடி மொறைத்து கொண்டே பார்க்கிறாள்..

திலிப்: மச்சி.. என்னடா இப்டி பண்ணிட்ட?

கார்த்திக்: என்னடா?

திலிப்: கிருத்திக்கா..

கார்த்திக்: ஹஹாஹ்..முந்தாநேத்து நீ சொன்ன மாதிரியே பசங்க விளையாடுனாங்க மச்சி.. நார கலாய் கலாசிட்டேன்.. இனிமே போன் தொடவே அலறுவாங்க..

திலிப்: டேய்..

கார்த்திக்: என்னடா?

திலிப்: நேத்து உனக்கு மேசேஜ் பண்ணது கிருத்திக்கா தான்டா..

டமார்.. டமார்

கார்த்திக்: டேய்.. இது எப்போ?

திலிப்: நேத்து வர்க்‌ஷாப் லேப் Readings நீ தானே எடுத்த.. அத உன்கிட்ட இருந்து வாங்கிக்க உனக்கு மெசேஜ் பண்ணாடா.. பஸ்ல என்கிட்டே தான் நம்பர் வாங்குனா.. என் நம்பர் கூட கேக்கல மச்சி..


கார்த்திக்: இத ஏன்டா என்கிட்டே நேத்தே சொல்லல?

திலிப்: போன்ல சார்ஜ் இல்லடா..  காலைல கிருத்திக்கா வந்து என்ன கேவலமா பேசிட்டா.. இது தான் அவன் நம்பரா? இத தான் என்கிட்டே கொடுத்தியா? அவனெல்லாம் ஒரு மனுஷனா, நீ இதுல அவன் ஃப்ரெண்டு வேறன்னு..

கார்த்திக்: வளக்காப்புக்கு வர சொன்னா, குழந்த காது குத்துக்கு வந்தவன் மாதிரி சொல்றியேடா..

திலிப்: பாவம்டா நீ.. உன் நிலைமை எதிரிக்கு கூட வரக்கூடாது..

கார்த்திக்: உன்ன மாதிரி ஃப்ரெண்ட்ஸ் இல்லன்னா கண்டிப்பா வராது மச்சி.. நோக்கியா Connecting Peopleன்னு தப்பா வச்சிட்டாங்க போல.. எங்கப்பன அடிக்கணும்...





அசிகங்கள் முடிந்தது...


வருகைக்கு நன்றி!!

எங்கேயும் காதல் - எங்கேயும் மொக்கை

$
0
0

எங்கேயும் காதல்– முதல் சாங்கு.. பிரபு தேவா ஆடுறாரு.. பாடல் கேக்க ரம்மியமா இருக்கு.. ஆனா நடன அசைவுகள் சம்பந்தமே இல்லாம இருக்கு.. சரி விடுங்க, பெரிய நடன மாஸ்டர், நளினம், நயனம்எல்லாமே தெரிஞ்சிருக்கும்.. 


இங்கிலீஷ் பாடல்– என்னன்னே புரில.. ஒரே வெள்ளைக்காரியா வந்தாங்க, ஆடுனாங்க, காமிச்சாங்க, போனாங்க.. ஜெயம் ரவி கேரக்டர் Establish பண்றாங்களாமா.. ரைட்டு


தீ இல்லை, புகை இல்லை– படத்தின் மூணாவது பாடல்.. ஹன்சிகா தொப்புள் காட்டுவாங்கன்னு எதிர்பார்த்த என் போன்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. பாடல் தவறான இடத்தில் வேற வருது.. ஹன்சிகாக்கு ஜெயம் ரவி மேல காதல்.. ஆனா பாடலை ஜெயம் ரவி பாடுறாரு.. இது எப்டின்னா 2-Gல்ல சரத்த மாட்ட வச்ச மாதிரி


லோலிட்டா– நாலாவது சாங்க்.. நல்லா எடுத்துருக்காங்க.. ஹே பாட்டு பாட்டுன்னு கத்தும் போது கரெக்ட்டா வந்து என்னை சந்தோஷப்பட வைத்தது.. ரவி செமயா ஆடி இருக்காரு.. சிம்பு, விஜய் கொஞ்சம் இத பார்த்து தெரிஞ்சிக்கோங்க..


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ - மறுபடியும் ஹன்சிகாக்கு ஜெயம் ரவி மேல காதல்.. ஆனா பாடலை ஜெயம் ரவி பாடுறாரு.. இது எப்டின்னா PRESTIGE தோசை கல்லுல சுடுற மாதிரி.. ஒட்டவே ஒட்டல..


நங்கை நிலாவின் தங்கை– ஹன்சிகா தொப்புள்ள கடசியா காட்னாங்க.. சந்தோஷம்.. அழகா, ஹோட்டல் வசந்த பவன்ல சுடுற குழி பனியாரம் மாதிரி இருந்துச்சு.. நடனம் சூப்பர்.. ஆனா விஜய் படம் மாதிரி வரிகளுக்கு சம்பந்தமே இல்லாத ஸ்டெப்ஸ்.. ஜெயம் ரவி ஆட ஆரம்பிச்ச உடனே களை கட்டுச்சு.. அந்த இங்கிலிஷ்காரங்க ஹன்சிகா விட நல்லா லிப்-சிங்க் பண்ணாங்க..


திமு திமு - கடைசி பாட்டு.. அப்பாடா படம் முடிய போகுது.. கரெக்ட்டா இருந்துச்சு.. BEST COMES IN LAST மாதிரி, கரெக்ட்டான இடத்துல வச்சாங்க..


அட வீணா போன விவேக்கானந்தன்னே.. பட விமர்சனம்ல நான் எழுதணும்? படம் பார்த்த மாதிரி ஃபீலே இல்லைங்க.. ஏதோ சன் மியுசிக்ல்ல தொண தொணன்னு பேசுற வீ.ஜே, அதுக்கு நடுவுல பாட்டு, அது மாதிரி இருந்துச்சு.. (பார்த்தது தேவி தியேட்டர்ல, சின்ன ஸ்கிரீன்) படம் நடுவுல பாட்டு வராம, பாட்டு நடுவுல படத்த போட்டுட்டாங்க.. நல்ல வேள, இது 2 மணி நேரம் தான்.. அதுவே பெருசா தெரிஞ்சுது, ஹன்சிகாவ காட்டிலும்..



ஹீரோயின்னை வெறுப்பேத்துற ஹீரோ – முதற்பாதி , ஹீரோவை வெறுப்பேத்துற ஹீரோயின் – ரெண்டாம் பாதி.. பாக்குற நமக்கு இனிமா இல்லாமையே பேதி.. ரெண்டாவது பாதி ஏதோ தேறும்.. ஜெயம் ரவி, சாரி.. ஹன்சிகா, நல்ல உடல், நல்ல உதடு, ஆனா நடிப்பு தான் வரல, ஜெனியிலாக்கு பக்காவா ஃபிட் ஆகுற கேரக்டர்.. சரி ஹன்சிகா கிட்ட நடிப்ப எதிர்பாக்குறது, பெருமாள் கோவில்ல தினமும் புளியோதரை கிடைக்கும்மான்னு ஏங்குற மாதிரி.. கிடச்ச பிரசாதத்த எஞ்சாய் செய்ங்கோ.. ராஜூ சுந்தரம் வந்தாலே சிரிக்கணும், ஏனா அப்போ தான் அடுத்த மொக்க ஜோக் அடிக்க மாட்டாருன்னு.. ஹாலிவுட் B-GRADE FLICKS விட மகா மொக்கை..



படத்துக்கு எங்கேயும் முத்தம்ன்னு வச்சிருக்கலாம்.. மூணு நிமிசத்துக்கு ஒரு கிஸ்ஸு.. ஆனா ஹன்சிகா முத்த சீன் வைக்கல, படத்துக்கு இது ஒரு மிகப்பெரிய குறை.. ஒளிப்பதிவு பிரமாதம், கலை கூட அற்புதமா பண்ணிருக்காங்க.. ஹன்சிகா வீடு, ஜெயம் ரவி ஹோட்டல் ரூம், பாரீஸ் தெருக்கள், கடைகள்ன்னு எல்லாமே கொள்ளை அழகு.. ஆனா இது எல்லாமே விலை போகாத வீட்டுக்கு பெயின்ட் அடிச்ச மாதிரி.. டிடெக்டீவ்வா வர சுமன்ன வச்சு கத எங்க இருக்கு தேட சொன்னாலும் கஷ்டம்.. படத்துல பிரகாஷ் ராஜ் கேரக்டர் ஒண்ணு வரும்.. அதுக்கு சம்பந்தமாவே படம் எடுத்துருக்காங்க.. ‘வாங்க, சுத்தி பாக்கலாம், சும்மா கேமரா வச்சு ஹாலிடே ட்ரிப் எடுக்கலாம், அத படமா போடலாம்ன்னு’ஜெய் நயந்தாராய நமக..


34 பூச்செண்டு தரலாம்


எங்கேயும் காதல் – குப்பைத்தொட்டியில் கிடக்கும் வாசமில்லா அழகிய பிளாஸ்டிக் பூ…


வருகைக்கு நன்றி!! 


அவன் இவன் - உப்பில்லா பண்டம்

$
0
0

வணக்கம் குழந்தைகளா! இன்னிக்கு அங்கிள் உங்க எல்லாருக்கும் ஒரு கத சொல்ல போறேன்.. ஒரு ஊருல ஒரு ஜமிந்தார் இருந்தாராம்.. அவருக்கு குடும்பம், குட்டி எதுவுமே இல்லையாம்.. அதுனால அவரு ரெண்டு பசங்கள புள்ளைங்க மாதிரி ஃப்ரெண்டா பாத்துக்கிட்டாராம்.. இந்த ரெண்டு பசங்க தான் ஹீரோவாம்.. அதுல ஒருத்தன் பெண்மை கலந்த வீரன், இன்னொருத்தன் பயந்தாங்கோலி திருடன்.. எப்பவுமே திருடனுக்கு தானே போலீஸ் ஜோடி, ஆனா இது வித்தியாசத்த எதிர்பாக்குற கிளாஸ் படமாமே.. அதுனால மொத பையனுக்கு போலிஸ் ஜோடி.. ரெண்டாப்புள்ளைக்கு வழக்கம்போல, காலேஜ் போற புள்ள ஜோடி.. ஒரு வித்தியாசத்துக்கு டுட்டோரியல் காலேஜாம்.. ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, லலலலலா’ன்னு ஜாலியா இருந்த ஃபெமிலில்ல வந்தானாம் வில்லன்.. ஜமினு வில்லன் கூட பிரச்சன பண்ண, அடுத்து என்ன ஆகும் குழந்தைகளா? ஆங்ங்ங்ங்ங்.. கரெக்ட்.. வில்லன் ஜமின போட, வில்லன யாரு போடுவா? ஆங்ங்ங்.. சூப்பர்.. ஜமின் தோஸ்துங்க வில்லன போட, ஆப்பரேட்டர் சுபம் போடுறாரு..



எப்பவுமே வித்தியாசமா கதைக்களம்ல படம் பண்ற பாலா இந்த முற அதெல்லாம் ஓரம்கட்டி வச்சிட்டு, கமர்சியல்லா ஒரு காமெடி படம் பண்ணலாம்னு எடுத்தது தான் –’அவன் இவன்’ ஆனா‘வேர்க்கடல நிலக்கடல பொட்டுக்கடல, நீ சொன்ன ஜோக்குக்கு சிரிப்பே வரல’மாதிரி டைமிங் காமெடி நெற இடத்துல மிஸ்ஸு.. லாஜிக்ன்னா என்னன்னு கேக்கற மாதிரி பல சீன்ஸ்.. நம்ம ரசிகர்கள் கிட்ட இருக்குற பிரச்சனையே, யாராச்சும் வித்தியாசமா, புதுசா பண்ணா சில சமயம் அந்த EFFORTகாகவே பாராட்டணும்ன்னு சொல்லிடுவாங்க.. அதோட ஒளிப்பதிவு சூப்பர், ஆக்டிங் தாருமாறு, இசை அடடான்னு கத, திரைக்கத இதெல்லாம் ஓரங்கட்டி வச்சிட்டு கொண்டாடுவாங்க... என்னதான் ஃபோன்ல ஃபிகரோட வாய்ஸ் சூப்ப்ரா இருந்தாலும், நேருல மொக்க ஃபிகரா இருந்தா இருந்தது தான்.. அது மாதிரி தான், பெர்ஃபாமன்ஸ்ஸ வச்சு என்ன செய்ய, கத திரைக்கத உருப்படியா இல்லன்னா..



படத்தோட பெரிய பிளஸ் – விஷால்.. இது பாலா படம் சொல்றத விட விஷால் படம் சொல்லலாம்.. மனுஷன் பாவம் உசுர கொடுத்து நடிச்சிருக்காரு.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல சும்மா இருக்குற பஸ்ஸ பார்ட்-பார்ட்டா பேத்து சண்ட போடுற ஆளுக்குள்ள இப்டி இரு நடிகனா? அதுவும் அந்த ஜமினு இறந்த காட்சில இவரோட நடிப்பு, அட்டகாசம்.. எங்க பிதாமகன் சாயல் வந்துதுமோன்னு யோசிச்சேன்.. அதெல்லாம் இல்ல.. ஆண் குரல்ல பேசிட்டே இருக்கும் போது, அப்டியே பெண் குரலுக்கு மாறி, திரும்ப ஆண் குரலுக்குன்னு மெரட்டி இருக்காரு டப்பிங்ல.. அவரோட அறிமுக காட்சி சூப்பரா இருந்தாலும், அங்க மட்டும் பாடி-லாங்குவேஜ்ல ‘மதுரகாரன் தான்டா’விஷால் வந்துடுறாரு.. கொஞ்சம் பெண்மை, நளினம் நடனத்துல இருந்துருக்கலாம்.. (இதுக்கும் பாலா Intentionala வச்சாருன்னு விளக்கம் கொடுக்காதீங்கபா) ஐ-னஸ் (Highness) ஜமின்னா நடிச்சவரு சிறந்த குணசித்திர நடிகரா வருவாரு... கலக்கிருக்காரு.. ஜமினுக்கே உரிய ஆணவம், கம்பீரம், மிடுக்கு, Subtle humorயோட ரசிக்கும்படி பண்ணிருக்காரு.. அதுவும் அவர ஆர்யா ‘நீ ஒண்டிகட்ட தானே’ன்னு திட்டுன உடனே அவரோட Transformation, க்ளாப்ஸ்.. ஆர்யா கூட வர குண்டு பையன், நேச்சுரல்லா பண்ணிருக்கான், ஒவர்-டூ பண்ணாம.. ரெண்டு அம்மாக்கள்ல அம்பிகா மட்டுமே மனசுல நிக்குற மாதிரி இருந்தாங்க..



ஒளிப்பதிவு படத்துக்கு எது தேவயோ, அத கரெக்டா பண்ணிருந்தாங்க.. க்ளைமாக்ஸ் சண்ட நடக்குற இடம், ஜமின் வீடு, வில்லன் இடம்ன்னு அழகா படம்பிடிச்சு இருக்காரு.. பின்னணி இசை – யுவன், டைட்டில் பி.ஜி.எம், விஷால் அவரு ஜோடி வரும்போது வர இசை எல்லாம் நல்லா இருக்கு.. ஆனா ஹைப் பண்ண அளவுக்கு பெருசா எதுவும் இல்ல.. ஆர்யா நடிப்பும் ரொம்ப சுமாரா தான் இருந்துச்சு... சில இடத்துல தொன தொனன்னு பேசியே ப்ளேட் போட்டாரு.. அதுவும் ஒரு காட்சியில குடிச்சிட்டு, விஷால்ல பாராட்டுறேன்னு சொற்பொழிவு ஆற்ற சீன், யப்பா முடில, கொடுர மொக்க..





மைனஸ்னு பார்த்தா நெறய இருக்கு.. எப்பவுமே பாலா படத்துல ரெண்டு வெவ்வேறு தளங்கள்ள போயிட்டுருக்குற ரெண்டு பேரலல் கதைகள ஒரு பாயிண்ட்ல சேர்த்து திரைக்கதை பண்ணுவாரு.. ஆனா இதுல சொதப்பல்.. ஒரு 8-10 நல்ல காட்சிகள் நம்பகிட்ட இருக்கு, அத வச்சு படம் பண்ணலாம்ன்னு எடுத்த மாதிரி இருக்கு.. காட்சிகளுக்கு ஒரு கோர்வையே இல்ல… ரசிக்கும்படியா காட்சிகள் இருந்தாலும், அதை Connect பண்ண ஒரு திரைக்கதைய அமைக்க மறந்துட்டாரு போல… முதற்பாதி முழுக்க, continuity இல்லாம காட்சிகள் வருது, போதுன்னு disjointஆ இருந்துச்சு… இதுனால எப்பவுமே பாலா படத்துல இருக்குற IMPACT இதுல சுத்தமா மிஸ்ஸிங்.. மேலும், அவர் கதாபாத்திரங்களை நேரம் எடுத்துக்கிட்டு செதுக்குவாரு.. கொஞ்ச நேரம் அந்த கேரக்டர்ஸ்ஸ பில்ட் பண்ணிட்டு, அது செட்டில் ஆன உடனே கதய அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவாரு… இதுல எல்லா கதாபாத்திரமும் Loose-endsசாவே இருந்துச்சு, proper definition கொடுக்கவே இல்ல.. வில்லன் டம்மி-பீஸ் மாதிரி காட்டிட்டாங்க.. முதற்பாதில்ல நெறய மொக்க ஜோக்ஸ் வந்துச்சு, அதெல்லாம் தூக்கிட்டு, அங்க வில்லன அறிமுகப்படுத்தி, அவன பில்ட் பண்ணி, கடசி அரை-மணி நேரத்துல ஸ்டார்ங்கா காட்டிருக்கலாம்.. 



ஹீரோயின்னுக்கு முக்கியத்துவம் கொடுக்குற பாலா, இங்க தல தளபதி படங்கள் ரேஞ்ச்க்கு ரொமான்ஸ் ட்ராக் இருந்துச்சு.. குட்டி கரணம் அடிச்சா லவ் வருதாம்.. இத மூன்றாம் பிறை ஸ்ரீதேவி பார்த்துருந்தா, விஜி-சீனு கூட சேர்ந்துருப்பாங்க… சுறால்ல பேனா வாங்குன்னா லவ்க்கே ரத்தம் கக்க கக்க கலாய்ச்சோம்… தமிழ் சினிமாவுல சில பேருக்கு Bench-mark, yardstick வச்சிருக்கோம், மணி, செல்வா, பாலா போன்றவர்களுக்கு… அதாவது இவங்க மட்டும் தப்பு பண்ணலாம்... எது பண்ணாலும் ஒரு அர்த்தம் இருக்கும்டா.. அதுவும் ஒரு தடவ தானே பண்றாங்க?? என்னமோ மத்தவன்லா ஒழுங்கு மாதிரி’ன்னு self-justification… ஆர்யா ஃபேர் மதுஷாலினி வேஷ்ட்.. விஷால் ஜோடி ஜனனி அய்யர் ஒரே குறை – டயலாக் டெலிவரி.. எங்க நிறுத்தணும், எங்க அழுத்தி பேசணும்ன்னு தெரியாம, பேச்சு போட்டில கலந்துக்கிட்ட குழந்த மாதிரி பேசுனாங்க…



இந்த படம் ஹூமரா வர்க்-அவுட் ஆச்சுன்னா சில இடங்கள்ல சூப்பர், நெறய இடங்கள்ல சொதப்பல்.. பிதாமகன்ல சக்ஸஸ்ஃபுல்லா காமெடில்ல கலக்குன பாலா, அதுல பாதி கூட இந்த படத்துல கொண்டு வர முடியல.. பாலாவோட Weakest படம்னா அது அவன் – இவன் தான்.. இதுவே பாலாவோட முதற்படமா இருந்துருந்தா, விஷால் நடிப்புக்காக ‘முதற்முயற்சி பாராட்டலாம்’சொல்லிருப்போம், இல்ல தல-தளபதி பண்ணிருந்தா ‘தலவலிடா’ன்னு முத்திரை குத்திருப்போம்.. பாலா ரசிகர்களுக்கே இது ஒரு கசப்பான மருந்துன்னு தான் சொல்லணும்.. விஷால் என்கிற மனுஷனுக்காகவும், அவரோட உழைப்புக்காகவும் ஒரு முறை கஷ்டப்பட்டு பாக்கலாம்.. அது இல்லாட்டி மொக்க படம் பாஸ்



39 பூச்செண்டு தரலாம்


அவன் இவன் – அதுக்குல்லா சரிப்பட்டு வர மாட்டான்  



வருகைக்கு நன்றி!! 


டிஸ்கி:விமர்சனத்துல காமெடி இல்லையேன்னு கொற சொல்றவங்களுக்கு, படத்துலேயே காமெடி இல்லன்னு ஞாபகம் வச்சிக்கணும்.. 

”ஆடி” மாச மங்காத்தா - இசை விமர்சனம்

$
0
0

வாடா பின்லேடா –கல்லூரியில் படிக்கும் போது, சிம்போசியம் போனா, அங்கே அடப்டிவ் ரவுண்ட்ன்னு (Adaptive Round) ஒண்ணு வைப்பாங்க.. அதாவது பாடல் மாறிக்கொண்டே இருக்க, அதற்கு ஏற்ப நாம் நடனத்த மாத்தி ஆடணும்.. குத்துல ஆரம்பிக்கும், திடீர்ன்னு மெலடி வரும், அப்றோம் ஃபோக், திரும்ப குத்துன்னு.. அதே மாதிரி ஃபீல் இந்த பாடல்ல இருக்கு.. க்லாசிக்கல்ல (Classical) சுசித்ரா குரல் ஆரம்பிச்சு, அப்டியே வெர்ஸ்டன்ல (Western) மாறி, சரணம் இடையில் மெல்லிய குத்து (பன்றி காய்ச்சல் மாதிரி, பருவ காய்ச்சல் தானடி) ட்ரை பண்ணிருக்கார் யுவன்.. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.. அழகன்படத்துலதத்தித்தோம்என்ற பாடலும் இதே தர்மாவதி ராகம் தான்.. ரெண்டயும் கேட்டு பாருங்க.. ரஹமான் கூடஒட்டகத்த கட்டிக்கோன்னு ஜெண்டில்மேன் படத்துல போட்டுருப்பாரு 


குழல் – 5/5



மச்சி ஓப்பன் பாட்டில்யுவன்’ஸ் டிப்பிக்கல் குத்து..சரோஜா சாமான் நிக்காலோ + வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல + தமிழ் என்ற நான் ஒரு தமிழன்டாசாயல் இருந்தாலும், சிங்கர்ஸ் தேர்வு டாப்-க்ளாஸ்.. ரெண்டாவது சரணத்துல இருந்து வரும் மனோவோட வாய்ஸ் பாடலுக்கு ஹைலைட்.. அதே போல எல்லாரும் சேர்ந்து பாடும்‘ஓடாம ஜெயிச்சோமடா, நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா’இடத்துல செம குத்து


குழல் – 4/5





மங்காத்தா தீம் மியுசிக் –தாருமாறு தக்காளி சோரு.. ஆக்க்ஷன் படத்துக்கு ஏத்த மாதிரி பக்காவா கம்போஸ் பண்ணிருக்காரு.. இது படத்தில் எப்படி வரும்ன்னு எதிர்ப்பார்ப்பு கூடிருக்கு.. அவன் இவன் மாதிரி டைட்டில்ல முடிச்சிடுவாங்களோ?


குழல் – 4/5



விளையாடு மங்காத்தா (ரீ-மிக்ஸ்) –செம பார்ட்டி மிக்ஸ்.. கண்டிப்பா இந்த வருஷம் Pub dance floors எல்லாம் இந்த பாடல் ஒலிக்கும்.. குறிப்பா அந்த சிரிப்பு, பாடல் முடிந்தும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கு.. அது கூட அப்டியே குழந்தையின் சிரிப்பை சேர்த்தது சூப்பர்..


குழல் – 4/5


நீ நான் –ஆரம்பம்‘நிமிர்ந்து நில்’மாதிரி ஆரம்பிச்சாலும், இங்கே ஹாரிஸ்ஸாய் மாறி இருக்கிறார் யுவன்..‘ஏனோ ஏனோ பனித்துளி + காதல் கொஞ்சம்’ கலந்த மெலடி.. நான் மகான் அல்ல படத்தில்‘ஒரு மாலை நேரம், இறகை போலே’பாடல்கள் நடுவே ஒலிக்கும் அந்த இதமான சொடுக்கு இசை, இங்கேயும் பின்னணியில்.. சரண் அஸால்ட்டாக பாட, பவதாரிணி குரல் மட்டும் இங்கு திருஷ்டி.. வேற பெண் பின்னணி பாடகி குரல் தந்து இருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்..


குழல் – 3.5/5


என் நண்பனே மேற்கே மேற்கேமாதிரி மெல்லிய பாத்தோஸ் (Pathos) பாடல்.. மதுஸ்ரீ குரலும், யுவன் குரலும் ரொம்ப unique... தொண்டை கட்டுன மாதிரி, வித்தியாசமான தமிழ் உச்சரிப்பு, Nasal singing… இங்கே ரெண்டும் சேரும் போது இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்.. ‘காதல் என்பது கனவு மாளிகை’ன்னு யுவன் பாடும் போது கொஞ்சம் எரிச்சலாத்தான் இருக்கு.. Jig-Saw மாதிரி clumsy orchestration இருந்தாலும், மதுஸ்ரீ காப்பாதிட்டார் இந்த பாடலை..‘வலைக்கையைப் பிடித்து வலைக்கையில் விழுந்தேன். வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்’இடத்தில் ஃபீல் நல்லா இருந்தாலும், தமிழ் உச்சரிப்பை கொஞ்சம் பார்த்துக்கோங்க அம்மணி..

குழல் – 3/5




பல்லேலக்கா –சுத்தமா புடிக்கல.. ஒரு மாதிரி Black Eyed Peasபோடும் ஹிப்-ஹாப் ஸ்டைல்ல ட்ரை பண்ணிருக்காரு.. ஆனா எம்.ஜி.ஆர் பாட்டு ‘பூ மழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது’ஃபீல் தருது.. மொக்கைக்கும் சுமாருக்கும் நடுவுல


குழல் – 2/5


ஏகன், அசல் விட நல்லா பல மடங்கு இருக்கு.. ஆனா பில்லா விட ஒரு படி கீழ்


மங்காத்தா - மோசமில்லை


வருகைக்கு நன்றி!! 

மங்கத்தா - தலயின் ஆட்டம்

$
0
0

  • அஜித் படமா? செம கடியா இருக்குமே – ரைட்டு
  • அஜித்துக்கு டான்ஸ்ஸே வராதே, பாட்டெல்லாம் செம மொக்கையா இருக்கும் – ரைட்டு
  • எனர்ஜித்(திக்) இல்லாத அஜித் – ரைட்டு
  • அஜித்துக்கு டயலாக்ஸ் எல்லாம் ஒழுங்கா பேசவே வராதே – ரைட்டு
  • அஜித் வாய்ஸ் மாடுலேசன் தான் அவர் படத்துல இருக்குற ஒரே காமெடி – ரைட்டு


வெங்கட் பிரபு– ராங்கு, பாத்து பண்ணலாம், ராங்கு, ராங்கு, ராங்கு


ஒவ்வொரு முறை அஜித் படத்தைப் பார்க்க திரையரங்கு செல்லும் போது, எமாற்றமே மிஞ்சும்… ‘என்னடா இந்த ஆளு, இப்படி மொக்க படமா நடிச்சிட்டு இருக்காரு, படமும் Entertaininga இல்ல, அப்றோம் ஏன் இவரு ஃபேன்ஸ் இந்த ஆட்டம் ஆடுறாங்க.. Does he really deserve this?’என்ற எண்ணம் எப்போதும் ஓடும்… நான் அஜித் படங்கள் பார்க்க ஆரம்பித்தது வேறு காலகட்டமாக இருந்த பட்சத்தில், (ஆஞ்சனேயாவில் ஆரம்பித்தது) அவரின் படங்கள் ஒன்று கூட எனக்கு பிடிக்கவில்லை, அவரையும் பிடிக்கவில்லை… குறிப்பாக அவரின் சில ரசிகர்கள் பண்ணும் அலப்பறை – They go overboard for things that doesn’t deserve much of hype.அவரின் ரசிகர்கள் பெரிதும் கொண்டாடிய வரலாறு, பில்லா கூட எனக்கு மொக்கையாக தான் தெரிந்தது.. வரலாறு படத்தில் ஃப்ளாஸ்ஃபேக்கில் வரும் அஜித்தின் நடிப்பு, வில்லன் மகன் அஜித்தின் நடிப்பைத் தவிர இப்படம் பெரிதாய் என்னை ஈர்க்கவில்லை… பில்லாவோ ஸ்டைல்லை தவிர்த்து பார்த்தால் மந்தமாகப் போகும்.. முன்னரே சொன்னது போல செம Bore.




இதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மங்காத்தா படத்துக்கு சென்றேன்.. முதற்முறையாக, ரசிகர்களின் கொண்டாட்டம், ஒரு வருட காத்திருப்பு, Hype, இது அனைத்தும் Deserving ஆக தோன்றியது இந்த படத்திற்கு மட்டும் தான்.. வெங்கட் பிரபு, தான் முன்னதே சொன்னது போல ’ஒரு அஜித் ரசிகனாக இருந்து இந்த படத்தை எடுத்துருக்கேன்’ என்று சொன்ன சொல்லை காப்பாற்றி இருக்கிறார்… ஒவ்வொரு Frameலும் ரசித்து, அஜித்தை ஆராதித்து எடுத்துள்ளார்... அஜித் என்ற நடிகனுக்கும், அவரின் ரசிகர்களுக்கும் செம தீனி, நீண்ட நாட்கள் கழித்து.. அவரின் மைனஸ் எது என்று சொல்லிக்கொண்டு கலாய்த்தோமோ அது அனைத்தையும் இந்த படத்தில் பாதிக்கு மேல் பல இடங்களில் சரி கட்டி உள்ளார்..  அஜித்தை க்ளாஸ்ஸா காட்டுவதா மாஸ்ஸா காட்டுவதா என்று குழம்பி உட்டாலக்கடி அடித்த கிரிடம், எவ்ளோ க்ளாஸ் காட்டுவது, எவ்ளோ மாஸ் காட்டுவது என்பதில் குழம்பிய பில்ட்-அப் பில்லா, இதில் இருந்த தவறை எல்லாம் களைந்து, சரியான விகிதத்தில் அஜித்தின் மாஸ், தனது ட்ரேட்மார்க் Entertainment, நெடி அடிக்காத மசாலா என கலந்து 50வது படத்தை தந்து இருக்கிறார் வெங்கட் பிரபு




படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் அஜித்.. உம்மன்னா மூஞ்சு, Somber screen-presence இதை எல்லாம் இந்த படத்தில் உடைந்தெறிந்து விட்டார்.. முதற்பாதியில் டல் அடித்தாலும், இடைவேளி பதினைந்து நிமிடங்கள் முன்னால் இருந்து, படம் முடியும் வரை, அஜித்’s Show... எந்திரனின் மிகப்பெரிய ப்ளஸ்ஸே கடைசி இருபது நிமிடங்கள் வரும் வில்ல ரஜினியின் நடிப்பு.. அதோட Extended Versionஆ மங்காத்தாவில் ரகளை பண்ணிருக்கிறார் அஜித்… நீண்ட நாட்கள் கழித்து, அந்த வில்லச்சிரிப்பில் ஒரு Energy and Life இருந்தது (கண்ணு மட்டும் பார்த்துக்கோங்க, eye-bag சில காட்சிகளில் டய்ர்ட் ஆனவர் மாதிரி காட்டுது) இடைவேளி முன்பு காட்டும் Chess சீனில் ஆரம்பிக்கும் Subtle வில்லத்தனம், பணம் போன உடனே வெறியாக மாறுவதும், அர்ஜுனுடன் உரையாடும் காட்சிகள் எல்லாம் சரவெடி.. ’தல தல, ஏற்றி விட யாரும் இல்லை, தனி ஆளா வந்தவன்’ போன்ற மொக்கை வசனங்கள் பேசி, கைதட்டல், விசில் வாங்காமல் இருந்தது ஆறுதல்… One Man Show ஆக படத்தை தாங்கியுள்ளார் என்றே சொல்லலாம்...


ஒரே ஒரு ஹிட்டு கொடுக்க நான் படுற அவஸ்த இருக்கே.. அய்யய்யயயோ..























அர்ஜூன் அந்த கேரக்டருக்கு கரெக்டா பொறுந்திருக்கிறார்… எங்கேயும் over-do பண்ணாமல், இயல்பாக செய்திருக்கிறார்… த்ரிஷா, அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளேன் அய்யா கோஷ்டிகள்.. லஷ்மிராய்க்கு பழய காலத்து படங்களில் வரும் ஜெயமாலினி, அனுராதா மாதிரியான ரோல்… வழக்கம் போல காட்டுகிறார்… வெங்கட் பிரபு படத்துக்கே உரிய 4 பேரு கோஷ்டி இங்கேயும்... அதில் தேறுவது போலிஸ் அதிகாரி அஷ்வின் மற்றும் வைபவ்… நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் அஷ்வின் ஒரு ரவுண்ட் வரலாம்… Has a good body language… வேட்டைக்காரன் விஜய்யை கலாய்த்து, எப்போதும் போல ஒரு பழைய பாடல் ரீ-மிக்ஸ் என காமெடி பேர்விழி ப்ரேம்ஜி… எந்திரன் ரஜினியை நக்கலடிக்கும் காட்சியில் மட்டும் சிரிப்பை வரவழைக்கிறார்… இறுதியாக ரெடிய தளபதி மகத்… அருமையான நடிப்பு.. அடுத்தசாம் ஆண்டர்சன்ஆக வாழ்த்துக்கள்… (படத்தில் ஒரு வசனம், நீ ஒரு சாம் ஆண்டர்சன்டா.. விரைவில், நீ ஒரு மகத்டா என்று வசனம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, அவ்ளோ அபாரமான நடிப்புத்திறைமையை தன்னுள் ஒளித்து வைத்துள்ளார்)



படத்தோடு நம்மை ஒன்ற வைக்கும் மற்ற அம்சங்கள் – ஒளிப்பதிவு, இசை… ப்ளு டோன், வைட் டோன்என்று நம்மை படுத்தாமல் ஆக்சன் படத்துக்கு ஏற்றாற் போன்ற படமாக்கிய விதம்… விளையாடு மங்கத்தா, ஓப்பன் பாட்டில் பாடல்களிலும் கலர் சூப்பர்… அஜித்தை முழுமைப்படுத்தியே வைத்த Anglesக்கு ரொம்ப மெனக்கெட்டு இருப்பார்கள் போல… பெண்டுலம் போல ஒரே ஷாட்டில் கேமரா நகர, பல அஜித் தோன்றும் அந்த காட்சி சபாஷ்… பின்னணி இசையில் யுவன் மீண்டும் தான் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்று காட்டியுள்ளார்… தீம் மியூசிக், சண்டை-சேஷ் காட்சிகளில் அதிர வைக்கிறார்… 



Slow ஆன முதற்பாதி, ஆனால் அதில் ரேண்டமாக வரும் காட்சிகள் பிற்பாதியில் க்ளூவாக மாற்றுவது நல்லா இருந்தாலும், இதெல்லாம்அயன், கோ, சரோஜால பார்த்தாச்சு பாஸூ… ஆடியோவில் ரசித்த பாடல்கள் விஷுவலாய் பார்க்கும் போது ஏமாற்றம்… அதுவும் படத்தோடு ஒட்டாமல், திணிக்கப்பட்டதைப் போன்ற ஃபீல்... அஜித் டீசண்டாக நடனம் ஆடியுள்ளார்… பெரிதும் கவர்ந்த வாடா பின்லேடா விஷூவலாக சூப்பரா இருந்தாலும், தேவையே இல்லைன்னு தோன்றியது – திரும்பவும் கே.வி. ஆனந்த் எஃபெக்ட்… படத்தை சீரியசாக கொண்டு செல்வதா இல்லை காமெடியாக கொண்டு செல்வதா என்ற குழப்பம், அலைபாயும் திரைக்கதையில் வெட்ட வெளிச்சம்… Chess சீனில் காட்டிய புத்திசாலித்தனமான இயக்கத்தை, கொள்ளை அடிக்கும் காட்சியிலும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் - ரொம்ப சல்பி Execution… பணம் போன உடனே வரும் Follow-up காட்சியில் ஜெயப்பிரகாஷ்ஷின் body-language எதுவும் நடக்காதது போல இருப்பது, ரொம்ப செயற்கை..


படம் perfect இல்லை.. ஆனால் அஜித்தின் முந்தைய குப்பைகளைக் காட்டிலும் பல miles ahead… வெங்கட் பிரபு படங்களுக்கே உரித்தான Trademark ஸ்டைல், லாஜிக் சொதப்பல், திரைக்கதை ஓட்டை இப்படி மைனஸ்கள் இருந்தாலும், அஜித்தின் நடிப்பு, பின்னணி இசை, Commercial Entertainerக்கு முக்கியமான விறுவிறு பிற்பாதி எல்லாத்தையும் மறைத்து விடுகிறது… கண்டிப்பாக ஒருமுறை பாக்கலாம்…  


நீ அங்க என்ன சுட்டியோ, அதே தான் நானும் சுட்டேன்.. 


44 பூச்செண்டு தரலாம்


மங்காத்தா – வில்லனின் அட்டகாசம்


வருகைக்கு நன்றி!! 


வெடி - பத்து வருஷத்துக்கு முன்னாடி வாங்குனது

$
0
0

பாலாவின் கையில் ‘அவன் இவன்’ ஆக குட்டுப்பட்டு, கஷ்டப்பட்டு ‘நானும் நடிகன் தான்’என்று காட்டிய விஷால், இப்போ ‘நானும் மாஸ் ஹீரோ தான்’ன்னு படம் பாக்க வந்த நம்பள போட்டு காட்டு காட்டுன்னு பொறட்டி போடுறாரு வெடில (புரட்சி தளபதின்னு டைட்டில் வேற).. சண்டைக்கோழி வெற்றிக்கு காரணமே மாஸ் இல்லாத நம்பள்ள ஒருத்தன், மாஸ் ஹீரோ ஆகறது தான்... ஆனா அந்த வெற்றி மெதப்புல நாம இன்னும் மாஸ் ஹீரோன்னு நெனச்சிட்டு த-மாஸு பண்ணிட்டு இருக்காரு விஷால்… வராத மாஸ வா வான்னா எப்படி சார் வரும்? அமுதனின் ’தமிழ்படம்’ காட்டிலும் இந்த படம் SPOOF MOVIEல சிறப்பா பண்ணிருக்காங்க…



அதரப்பழசு ’எவன் வந்தாலும் அடிப்பேன் ஹீரோ’ கூட ‘எதையும் காட்டும் ஹீரோயின்’ சேர்த்து ‘இவனைப்போல அண்ணன்’ செண்டிமெண்ட் கலந்து ’வெட்டுங்கடா அவன’ன்னு படம் பாக்க வந்தவங்கள ‘கிழிங்கடா ஸ்க்ரீன’ன்னு கொல்றாங்க… விஷால் பாக்க மேன்லியா இருக்காரு… (சமீராவும் அவர விட மேன்லியா இருக்காங்க – அது வேற விஷயம்) எப்பவுமே தனது மசாலா படங்கள்ல விஜய்ய இமிடேட் பண்ணும் பாடி-லாங்குவேஜ் இப்படத்தில் மிஸ்ஸிங் என்பது பெரிய ஆறுதல்… கேரக்டருக்கு எது தேவையோ அத நல்லா பண்ணிருக்காரு… மத்தபடி சொல்றதுக்கு எதுவும் இல்ல… படத்துல பாடல்கள் நல்லா எடுத்துருக்காங்க, பின்னணி இசை சில இடங்களில் பளிச்… ஒரு சீன் வந்தாலும் ஊர்வசி விவேக்கை காட்டிலும் சிரிப்பு வரவழைக்குறாங்க… விவேக் சார் – இன்னும் எத்தன படத்துல தான் இதே டெம்ப்ளேட்?





இந்த குழந்தைகளும் நம்ம படத்த பாத்து மூஞ்ச திருப்பிக்கிறாங்களே??





ரீமேக் பண்ண வேற நல்ல படமே கிடைக்கலையா? திரைக்கதையில் பிரபுதேவா சில பட்டி டிங்கரிங் செய்திருந்தாலும், எதுவுமே ஒட்டவே இல்லை… டெலுங்கு படத்த தமிழ்ல எடுப்பாங்க, இவங்க டெலுங்கு படத்த எடுத்து டெலுங்கு படமாவே கொடுத்துருக்காங்க… விஷால் ரொம்ப கொடுத்து வச்சவர்.. ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க’போன்ற குடும்பம்… இவர்கள் இருக்கும் வரை விஷால் மேலும் நமக்கு மசாலா வெடிகளை கொடுத்து, தமிழ் சினிமாவை சிறப்புற செய்வார்…     



வெடி – செம கடி


படத்துல பெருசா எதுவும் இல்ல… அதுனால விமர்சனமும் பெருசா இல்ல..


வருகைக்கு நன்றி!! 

வேலாயுதம் - அவன் வருவான்டா, கொல்வான்டா

$
0
0

ஒரு ஊருல ஒரு கிராமமாம், அந்த கிராமத்துல ஹீரோவாம், அவன் அண்ணனாம், அந்த அண்ணனுக்கு ஒரே ஒரு தங்கச்சியாம், ஊருலேயே அவன் மட்டும் தான் அழகாம், அதுனால ஒரே ஒரு அத்த பொண்ணு அட்ட மாதிரி ஒட்டிக்குமாம்..


அப்றோம் ஒரு ஊருல ஒரு நகரமாம், அந்த நகரத்துல வில்லனாம், அவன் அரசியல்வாதியாம், அவனுக்கு பாகிஸ்தான் டெரரிஸ்ட் நண்பர்களாம், அவங்க நகரத்த அழிக்கணுமாம், அத தெரிஞ்சிகிட்ட இன்னொரு பொண்ணு செகண்ட் ஹீரோயினாம்..‘அநியாயத்த தட்டி கேக்க ஒருத்தன் வருவான்டா’ன்னு எம்.ஜி.ஆர் காலத்துல கத்துன இளைஞன் இப்போ தாத்தா ஆகி அதயே கத்திட்டு இருக்கானாம்... கட் பண்ணா ஹீரோ நகரத்து வராராம்… சந்தர்ப்ப சூழ்நிலையால இத தட்டி கேக்க முடிவு பண்றாராம்.. அப்றோம் என்னமாம்? மேசேஜாம், சுபமாம்..



திருப்பாச்சியில் ஆரம்பிச்சது விஜய் படம் முதற்முறை தியேட்டரில் பார்த்த அனுபவம்… அப்பொதெல்லாம் விஜய் படம் என்றாலே க்ரேஸ்… பொறியியல் நுழைவுத்தேர்வுக்கு படிக்காமல் சச்சின் படம் பாக்க போனதுன்னு.. பெருசா பண்ணதுன்னா, போக்கிரிக்கு சென்னைல டிக்கெட் கிடைக்கலன்னு முன்னாடி நாளே பாண்டிச்சேரிக்கு கிளம்பி போனது, மாமாவோ ‘என்னடா வராம வந்துருக்க’ன்னு கேக்க ‘போக்கிரி பாக்கணும் மாமா’ன்னு நான் உண்மைய உடைக்க அவர் முகம் போன போக்கு – சக்கரைப்பொங்கல்ல எவன்டா மொலகா வச்சதுமாதிரி ரியாக்ஷன்… விஜய்யிடம் ஈர்த்ததே அவரோட ஸ்கிரின் பிரசன்ஸ்... பெருசா மெனக்கெடாமல் தனக்கு எது வருமோ அதை செய்வது… பாட்டு, நடனம், சண்டை இவற்றில் குறை வைத்ததில்லை… ஆனால் போகப் போக, கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்த உடனோ, அல்லது நல்ல சினிமாவை ரசிக்க ஆரம்பித்த உடனோ அதெல்லாம் Monotonous ஆக தெரிந்தது… இருந்தாலும், அந்த attraction, முதற்காதலைப் போல, fatal attraction.. மொக்கைன்னு தெரிஞ்சும், விஜய்யை திரையில் பார்க்க வேண்டும் என்கின்ற அந்த ஆர்வம் போனதில்லை, இன்னும் போகவில்லை (ஏனோ அஜித் பிடிக்காமல் போனதுக்கு அவரோட Energy இல்லாத screen-presence சொல்லலாம்)



என்னது ஒன்ஸ்-மோர் பாக்கணுமா? ஆள வுடுங்கடா


வேலாயுதம், இனி

  • விஜய் வழக்கம் போல வஞ்சனை இல்லாமல் பண்ணிருக்காரு… ஹீரோயிசம் கொஞ்சம் Tolerable ஆக இருந்தது, முந்தைய மசாலா படங்களை காட்டிலும்... அதிகமா பஞ்ச் பேசாம, கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், முழு திருப்தி இல்லை…

  • இன்னொரு ஹீரோ சந்தானம், சிறுத்தை அடுத்து மிகவும் ரசித்து பார்த்த காமெடி காட்சிகள்… ஏ.டி.எம்மில் மிஸ் ஆன கெமிஸ்ட்ரி இதுல நல்லா வர்க் ஆகியிருக்கு… விஜய்யும் சந்தானத்தை டாமினேட் பண்ணாமல், டீசன்ட்டான பாடி-லாங்குவேஜ்ஜில் (கரெண்ட் ஷாக் அடிக்கும் போது கைல கற்பூரத்த வச்ச மாதிரி ஆடிட்டே இல்ல) கம்பெனி தந்திருக்கிறார்…

  • ஓப்பனிங் சாங் சூப்பர், போக்கிரி அப்றோம் கலக்கலா எடுத்துருக்காங்க, ஆடாம இருக்க முடியல, செம மாஸ் அப்பீல்

  • ஹன்சிகா ஹாட்வானி, காட்டு காட்டுன்னு காட்டிருக்காங்க.. வெளிய பெஞ்ச மழைல நனையாதது எல்லாம் சில்லாக்ஸ் பாட்டு பார்த்த உடனே நனஞ்சு போச்சு

  • ஜெனிலியா, சுமாரா நடிச்சிருக்காங்க, சில இடங்களில் லிப்-சிங்க் ஆகவே இல்ல, நடிக்க பெருசா ஸ்கோப் இல்லை, காட்டவும் ஒண்ணும் இல்லை (நான் திறமைய தான் சொன்னேன்)

  • டெடரிஸ்ட் வில்லன் டப்சா காமெடி பீஸ்.. ‘ஹே வேலாயுதம், நான் தான் இப்ராகிம்’ன்னு பயோ-டேட்டா வாசிக்கிறாரு, கேப்டன் பட ஃபீல் – ‘ஹே நொரசிம்மா, ஹே வாஞ்சிநாதன்ன்’இவனுக்கு மேல அரசியல்வாதியா வர இன்னொரு வில்லன்… அவன் பேசுறப்பலாம் டப்பிங் படம் பாக்குற மாதிரி இருக்கு… போக்கிரி தாண்டி இன்னும் ஒரு நல்ல வில்லன் விஜய் படத்துக்கு மிஸ்ஸிங்..

  • படத்துல வர நண்டு சிண்டெல்லாம் ‘அவரு வருவாருடா’ ‘எங்க அண்ணன் கொல்வாருடா’ ‘வந்துட்டாருடா’, ‘அநியாயம் பண்ணா அடிப்பாருடா’ன்னு பேசியே சாவடிக்கிறாங்க, இவங்கள இதே டயலாக்க வில்லன் கிட்ட பத்து தடவ சொல்ல சொன்னா அவன் பாகிஸ்தானுக்கே ஒடிருப்பான்.. அதுலயும் ராகவ் கொடுக்குற எக்ஸ்பிரஷன்ஸ் ஷப்பா… நல்லவேள அவர சீக்கரம் கொன்னாங்க...

  • க்ளைமாக்ஸ்ல வில்லன அடிக்க சொன்னா, ஒடிப்போய் விஜய் முகத்த ரங்கோலி கோலம் மாதிரி போட லைன்னா நிக்கறது, மாஸா இருந்தாலும், வெளியே வரும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை…

  • வசனம் பல இடங்களில் பளிச், குறிப்பா இடைவேளை முன்பு விஜய்-ஜெனிலியா உரையாடல், ஷாயாஜி சிண்டேவின் கசாப் வசனம்… சில இடங்களில் புளிச், அதுவும் ராகவ் பேச ஆரம்பிச்ச உடனே ஆப்ப கரண்டிய எடுத்து வாயில வச்சிருக்கணும்… ’நம்ம கிராமமே இந்த பாம்மால வெடிச்சிருக்கும்’ன்னு நாட்டாமை அலற ‘அடேய், வீட்டு செவரு கூட ஓழுங்கா உடையல பாம் வெடிச்சு, இதுல கிராமமே வெடியுமா’ன்னு கேக்காம இருக்க முடியல…

  • ட்ரெயின் ஸ்டண்ட் எல்லாம் கொடுத்த பில்ட்-அப்புக்கு வர்த் இல்லை… இதெல்லாம் கேப்டன் பண்ணிருந்தா கலாசி இருப்பாங்க… மொத ஃபைட் சம்பந்தமே இல்லாம வருது, அதை தொடர்ந்து மாயம் செய்தாயோ பாடல் – உச்சக்கட்ட கொடுமை… 


படத்துல அங்கங்கே ரசிக்கிற மாதிரி சுவாரசியமாக பண்ணிருந்தாலும், புதுசா ஒண்ணும் இல்லை… சரியான இடங்களில் காமெடி, சென்டிமெண்ட் வைத்து திரைக்கதை தோய்வில்லாமல் கொண்டு சென்றது ப்ளஸ்… பிற்பாதில கலாய்க்க பல இடங்கள் இருப்பது மைனஸ்.. ஆனாலும் சிங்கிள்ளாக படத்தை ஒரளவுக்கு ரசிக்க வைக்கும் விஜய்யின் எனர்ஜி, ஸ்க்ரின் பிரசன்ஸ்காக பல வேட்டைக்காரன், சுறாக்களை தாங்கலாம், வலிக்காத மாதிரியே நடித்துக்கொண்டு… விஜய்க்கு இன்னொரு பாஷ்ஷா, கில்லின்னு என்று சில்லி தனமாக சொல்வது வேடிக்கை… மொக்க காலேஜ்ல சுமாரிலும் சுமார் ஃபிகர் மேல் வரும் ஈர்ப்பு தான் வேலாயுதம்… 


வேலாயுதம்: லவ்வர் இல்லாத பையன் - ஸ்ட்ரிக்ட்லி ஒன்ஸ்…

வருகைக்கு நன்றி!! 

மயக்கம் என்ன - வை தீஸ் கொலவெறி கொலவெறி செல்வா :(

$
0
0

மயக்கம் என்ன - என்ன சொல்றது தெரில.. சரி நானும் தனுஷ் மாதிரி போட்டோ-க்ராபிக்ஸர் ஆயிட்டேன்

1. Right Click செய்து Open Image in New Tab தேர்ந்தெடுக்கவும்

2. பின் இதை ZOOM செய்யவும்






மயக்கம் என்ன - மயக்கல என்(னை)ன




வருகைக்கு நன்றி!! 




Viewing all 46 articles
Browse latest View live