Quantcast
Channel: லொள்ளும் நக்கலும்
Viewing all 46 articles
Browse latest View live

ராஜபாட்டை - விக்ரம் விட்ட கோட்டை

$
0
0

விக்ரமோட நடிப்புல எப்பவுமே ஒரு ‘நடிப்பு’ இருக்கும்… ரொம்ப மெனக்கெட்டு, நானும் நடிக்கிறேன் பாருன்னு மெனக்கெடுறது தெரியும்.. தெய்வதிருமகனில் சில இடங்களில் இஸ்து இஸ்து பேஸ்றேன்னு‘கொடுத்த காசுக்கு மேல நடிக்காதடா’ன்னு கத்த தோணுச்சு… விக்ரம் நல்ல நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை… சேது, தில், தூள், சாமி எல்லாம் ரசித்தவன் நான்… ஆனா காலப்போக்கில் அரிதாரத்தில் செயற்கைமூலாமும் கலந்துவிட்டது…


போன வருசம் நான் ரசிச்சு பார்த்த படம்‘நான் மகான் அல்ல’. சுசீந்தரனின் வெண்ணிலா கபடி குழு நெகட்டிவ் க்ளைமாக்ஸ்ஸால பிடிக்காம போனது… ஆனா நான் மகான் அல்ல மூன்று முறை தியேட்டரில் பார்த்தேன்.. காதல், ஆக்ஷன், அப்பா செண்டிமெண்ட், கதையோடு கலந்த நகைச்சுவை, த்ரில் எல்லாம் சரிவிகிதத்தில் கலந்துகட்டி கொடுத்திருப்பார்… இந்த வருடம் வந்த அழகர்சாமியின் குதிரை கூட அருமையாக பண்ணிருந்தார்… இப்படி மூன்று வெவ்வேறு தளத்தில் படம் கொடுத்து, முதற்தடவை கொஞ்சம் பெரிய ஹீரோ விக்ரமோட மாஸ்-மசாலா படம் பண்றேன்னு கொடுத்தது தான்ராஜபாட்டை…


படத்துல ப்ளஸ் மதியோட ஒளிப்பதிவு… ஒரே ப்ளஸ் இதான்… மத்தபடி ஏனோதானோன்னு எடுத்துருக்காங்க… பொண்ணுக்கு வயசாயிட்டே போகுது, சட்டுபுட்டுன்னு கல்யாணத்த பண்ணுங்கன்னு சொல்ற மாதிரி, விக்ரமுக்கு வயசாகுது, அதுக்குள்ள கால்ஷீட் இருக்கு, எடுத்துக்கலாம்ன்னு ஷூட் போயிட்டாங்க… திரைக்கத ஒழுங்கா எழுதாம திருமங்கலம் டூ அண்ணாநகர் திருப்பி விட்ட ரூட் மாதிரி இஷ்டத்துக்கு போகுது. எடிட்டர் டைலரிங் வேல பாக்க போயிட்டாரோ என்னவோ, இல்ல அவருக்கே சீன எங்க வைக்கணும்ன்னு தெரில போல



விக்ரம்ம இத விட அசிங்கமா காட்ட முடியாது… ஏற்கனவே முகத்துல சுருக்கங்கள், இதுல இவர் பண்ற சேஷ்டைகள பாக்குற நம்ப முகமும் சுருங்கி போகுது… ஜிம்-பாய்ன்னு வரவன் எல்லாரையும் அடிச்சிட்டே இருக்காரு… பாக்குற நமக்கே ட்யர்ட்டாகி ரெஸ்ட் கொடுங்கடா சாமின்னு கத்தாத குற… மாஸ் காட்றேன், பஞ்ச் பேசுறேன்னு (குறிப்பா இடைவேளை முன் – இடைவேளை பின் வர காட்சிகள்) பாடி-லாங்குவேஜ் பார்த்து ஸ்க்ரீன கிழிச்சிட்டு தூக்கு மாட்டிக்கலாம் போல இருந்துச்சு… தசவதாரத்தை தூக்கி சாப்டணும்ன்னு நம்ப டவுசர கழட்டாத குறையா கெட்-அப் போட்டு இம்ச வேற பண்றாரு



ஹீரோயின் போஸ்டர்ல வந்த அளவுக்கு கூட படத்துல இல்ல… வில்லியா ‘அக்கா’ன்னு ஒருத்தங்க… தில் சொர்ணாக்கா எஃபெக்ட் கொடுக்க பார்த்தாங்க... ஆய் உய்ய் ஏய்ய்ன்னு கத்தி, புடவய தூக்கி க்ளாமரா உதைக்கறது இல்லாம, சீரியல் வில்லி மாதிரி கண்ண உருட்டி மெறட்ட மெனக்கெடுறாங்க… கும்முன்னு இருந்த இவங்களையே ஹீரோயின்னா போட்டுருக்கலாம்… யாரடி நீ மோகினி தாத்தா, சந்தானம் மாதிரி காமெடி பண்றேன்னு சில இடங்களில் சிரிக்க வச்சாரு… இவருக்கு என்ன கஷ்டமோ, இந்த கூட்டத்துல வந்து சிக்கிக்கிட்டாரு…. வாப்பா வாப்பான்னு பில்ட்-அப் கொடுத்து கடசில போப்பான்னு அவரையும் சப்பையா முடிச்சிட்டாங்க… பர்மா பஜார் போனா, ‘வாங்க சார்’ன்னு கைய புடிச்சு இழுக்காத கொறயா வரவன் போறவன் எல்லாம் நடிக்க வச்சிருக்காங்க காசு இருக்கேன்னு… 



நம்ம கேரியருக்கு ‘கட்டம்’ கட்டிட்டானே :(


இசை யுவன் சங்கர் ராஜான்னு டைட்டில்ல மட்டும் தான் பளிச்சிடுது… சரி பின்னணி இசை நல்லா இருந்தாவாச்சும் காட்சிகளுக்கு சுவாரசியம்ன்னு பார்த்தா அது பாட்டுக்கும் மேல… ராப் எல்லாம் வச்சு அலறவுடுறாரு… ஆரம்ப ஸ்டண்ட்டே நீள்ள்ள்ள்ளமா இருக்கறதால் அடுத்து வரர்து ஒட்டவே இல்ல..  படத்துல இது ஏன் நடக்குதுன்னு லாஜிக் பாக்க முடியாத அளவுக்கு ஓசோன் படலத்த விட பெரிய ஓட்ட… ராம்ஜி – பாஸ்கர்சக்தி – யுவன் என்கின்ற நல்ல டீம அநியாயத்துக்கு வீணாக்கிருக்காங்க…. படம் முடியும் போது ‘லட்டே லட்டே’ன்னு பாடல் வச்ச இயக்குனரின் அசாத்திய திறமய பாராட்டியே ஆகணும்… ஆனா அத நின்னு கேக்க கூட படம் பாக்க வந்தவங்களுக்கு ஆர்வமில்ல போல, உட்டாச்சுடான்னு ஓட்டம் தான்... படத்தோட கத ‘நில மோசடி’யாம்… அநேகமா படத்தோட தயாரிப்பாளர் வீடு, நிலம் எல்லாம் வித்து தான் படம் எடுத்துருப்பாரு, ரிசல்ட் அப்றோம் இதுக்காக ‘நில மோசடி’ வழக்கு இந்த டீம் மேல போடலாம்.



ராஜபாட்டை - ராஜகொறட்டை

வருகைக்கு நன்றி!! 


நண்பன் - விஜய் ட்ரெண்ட மாத்தி வச்சான்

$
0
0



  • விஜய் படத்துல பஞ்ச் டயலாக் இல்லை
  • விஜய் படத்துல வில்லன பழிவாங்குற காட்சிகள் இல்லை
  • விஜய் படத்துல அனாமத்தா அடி வாங்குற அடியாளுங்களோட மூணு ஃபைட் இல்லை
  • அட, விஜய் படத்துல பல்லு மொளைக்காத பாப்பால இருந்து, பல்லும் போன பாட்டி வரைக்கும் கட்டி புடிச்சு ஆடுற இண்ட்ரோ பாடல் இல்லை

டேய்… இத டைப் பண்ணும் போது உன் கீபோர்ட்டே சிரிச்சிருக்கும்டான்னு நீங்க நினைக்கலாம்..  இது சிரிக்க வைக்குற படம் தான், ஆனா வேற விதத்தில்... ஆங்கிலத்துல PARADOXன்னு ஒரு வார்த்தை இருக்கு.. அதாவது ஒரு கருத்து அதையே Contradict செய்தாலும்,  அது உண்மையே.. அதுபோல இது விஜய் படம், அனால் விஜய் elements இல்லாத விஜய் படம்.. 



கதை, திரைக்கதை எல்லாம் அப்டியே 3 Idiots இந்தி படத்தோட தழுவல் தான்.. கொச்சையா சொல்லனும்ன்னா Xerox Copy.. வசனம் கூட பல இடங்களில் Translate செய்து சேர்த்திருக்கிறார்கள்... அட இத செய்ய எதுக்குடா சங்கர்ன்னு யோசனகபால்லா இருந்தாலும், 'குரங்கு கைல இருக்குற பூமாலை’க்கும் ‘அழகான மணமகன் கைல இருக்குற பூமாலை’க்கும் வித்தியாசம் இருக்குல்லே... அத சங்கர் கரெக்டா பண்ணிருக்காரு... ஒரு நல்ல படத்தை ரீ-மேக் செய்யும் போது, அந்த Originalஇன் Essence கொஞ்சம் கூட கெடாமல், Improvise பண்றேன்னு சொதப்பாம, 3Idiots தந்த Impact இந்த படத்துல கொண்டு வந்துருக்காரு சங்கர்... ஏற்கனவே படிச்ச நாவல் தான்,  ஆனா நமக்கு புடிச்ச புத்தகத்த திரும்ப படிக்கும் போது அது தர உணர்வு, சுவாரசியம்,  மகிழ்ச்சி, அதோடு சேர்ந்து நாம இன்னொரு முறை செல்லும் பயணம், எப்டி அலுக்காம இருக்குமோ, அதே தான் நண்பன்.. 



இது மாதிரி ஒரு விஜய் பாக்க தானே இத்தன நாள் காத்து கெடந்தோம்?? ஆரம்ப 30 நிமிசங்கள்ல ஆமிர்கான இமிடேட் பண்றதா இல்ல நம்ப ஸ்டைல்லேயே நடிக்கற்தான்னு குழம்பி, கொஞ்சம் Hesitation அங்க இங்க இருந்தாலும், அதுக்கு அப்றோம் மனுஷன் பின்னிருக்காரு... ஜீவா ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆன காட்சியில் தொடங்கும் பாடலில் இருந்து சரி, ஜீவாவுக்கு நினைவு திரும்பிய உடன் ‘ஹ செம ரெஷ்பான்ஸ்டா’என்று சந்தோஷத்தில் துள்ளும் இடத்திலும் சரி, க்ளைமாக்ஸ் முன், குழந்தை எட்டி உதைத்த உடன் கொடுக்கும் Expression ஆகட்டும், ஆமிரை விட சிறப்பாக பண்ணிருந்தார் என்றே எனக்கு தோன்றியது (அந்த இரண்டு காட்சிகளில் மட்டுமே)... ஹேர்-ஸ்டைல் மட்டும் சில இடங்களில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை... புவி-ஈர்ப்பு விசைக்கு எதிராக அண்ணன் பறந்து பறந்து ‘குருவி குருவி அடிச்சா’ன்னு இல்லாம, ஜீவா, ஸ்ரீகாந்த், அனுயா, சத்யராஜ்ன்னு எல்லார் கிட்டயும் அடிவாங்குறாரு... செய்த தவறுகளுக்கு பாவமன்னிப்போ? இதுவரை விஜய்யின் மொக்க பன்ச்-டயலாக்ஸ்க்கு எல்லாம் சில சமயம் சீரியசாவும், பல சமயங்களில் காமெடிக்காகவும் விசில் அடிச்சு, கை தட்டி‘ஒத்தா மெர்சல் தலைவாவாவா’ன்னு கதறிய ‘சம்பவாமியுகே யுகே’ரசிகன்களில் ஒருவனாக இருந்து, நண்பனில் மட்டும் தான் பல காட்சிகளுக்கு மனதாற ரசித்து, சிரித்து கை தட்டினேன்... மொக்க ஃபிகர் இருக்குற காலேஜ்ல, சூப்பர் ஃபிகர் ஒண்ணு இருந்தா, அதுக்கு அந்த மொக்க ஃபிகர்களுக்கு நன்றி செலுத்துற மாதிரி, விஜய் இதில் நன்றாக தெரிய பிரபுதேவா, எஸ்.பி.ராஜ்குமார், பாபுசிவன் போன்றோருக்கும் நன்றி சொல்ல வேண்டும்... 



மொக்க கதைக்கு பின்னாடி போகாத, உனக்கு செட் ஆகுற கதய தேர்ந்தெடு...
அதுல உன்னால நல்லா பெர்ஃபார்ம் பண்ண முடியும்... வெற்றி உன் பின்னாடி தானா வரும்



சங்கரின் அடுத்த பெரிய வெற்றி - Casting.. வசந்த் விஜய் (வசந்த்ப்பா) என்கிற அந்த ஒத்தை தலைவலி தவிர (நல்லவேள, சீக்கிரம் கொன்னுட்டாய்ங்க), எல்லாரும் நல்லா/ஓரளவு நல்லா பண்ணிருக்காங்க.செட்டே ஆகமாட்டாருன்னு நினச்ச சத்யன் அதகளம் பண்ணிருக்காரு... மேடை பேச்சாகட்டும், ‘ஹே தோத்தாங்கோலிஸ், மை பிஸ்கட்’ன்னு தங்கலீஷ்ல பேசுறதாகட்டும், விஜய்க்கு அப்றோம் படத்துல இவர் தான் தெரியுறாரு... விஜய் Shine ஆக முக்கிய காரணம், Supporting cast - ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா... வழக்கமான, சைட்-டான்ஸ் ஆடுற, லவ்வுக்கும் ஹெல்ப் பண்ற/ஹெல்ப் கேக்குற,‘ஹே... அவரு யாருங்க்ற?? அவர் யாரு தெரியுமா??’ன்னு உச்சஸ்தானியில் கதறுகிற நண்பர்களா இல்லாம, படத்துக்கு செம ஒத்துழைப்பு தந்துருக்காங்க... குடித்துவிட்டு உளறும் காட்சியில் இருக்கும் குறும்பிலும்,‘புழுக ஒரு அளவில்லையா?’என்று கண்ணின் ஓரத்தில் கசியும் நீரிலும், நேர்முகத்தேர்வில் பேசும் முதிர்ச்சியிலும் ஜீவா ஷர்மன் ஜோஷியை விடவே சிறப்பாக செய்திருக்கிறார்... ஸ்ரீகாந்த் சில காட்சிகளில் என்ன ரியாக்ட் செய்வதென தெரியாமல் ங்ங்கே என தத்தி போல காட்சி அளித்தாலும், அப்பாவோடு பேசும் காட்சியில் அள்ளுகிறார் (Professional Camera எவ்ளோ இருக்கும்ன்னு கேக்குற காட்சியில் சிலிர்ப்பு) ரொம்ப எதிர்பார்த்த சத்யராஜ், இலியானா மட்டுமே ஏமாற்றம்... சத்யராஜ் Calibreக்கு இத விட சிறப்பாவே செஞ்சிருக்கலாம்... ஆனா போமன் இரானிய இமிடேட் பண்றதா, இல்ல நம்ப ஸ்டைல்ல லொல்லா லந்து பண்றதா இல்ல ஜேப்பியார் மாதிரி பேசறதா தெரியாமா கன்ஃபியுஸ் ஆகிருக்காரு சில காட்சிகள்ல... இலியானா இடுப்பு மட்டும் நல்லா இருக்கு, முகமெல்லாம் செரமிக் டைல்ஸ் மாதிரி லைட்டா சொறி.... மேக்-அப் மேன் கவுத்திட்டியேப்பா... நடிப்பு அவங்க உடல் மாதிரி சொல்ற அளவு ‘பெருசா’ இல்ல..



ஒளிப்பதிவு ரொம்ப ஃப்ரெஷ்... சில ஷாட்ஸ் ஒரிஜினல்ல இருந்த மாதிரி வச்சாலும், மனோஜ் கலர்ஸ் மூலமா படத்துக்கு பாசிட்டிவ் வைப் சேர்த்துருக்காரு... கண்ணுல ஒத்திக்கலாம், குறிப்பா ஏரியல்-ஷாட்ஸ்... டெக்னிக்கல் வசனங்களி சுஜாதா சாயல் கார்க்கி -‘Principal பொண்ணு நீங்க தான் Profit'பளிச். எப்டி ஏற்கனவே பாத்த படமா இருந்தாலும் ரசிக்குற மாதிரி இருந்துச்சோ, அதே போல ஹாரிஸ் ஜெயராஜ் இசை.. ஏற்கனவே கேட்ட மாதிரி இருந்தாலும் பாடல்கள் எல்லாம் விஷுவல்ஸ் உடன் நல்லா இருக்கு... பிண்ணனி இசையும் கொற சொல்ற மாதிரி இல்ல, ஏழாம் அறிவுல சொதப்புனாலும் இதுல, Comfort zoneல ஸ்லிப் ஆகி Settle ஆயிட்டாரு (ரசூல் பூக்குட்டின்னு நன்றி சொல்லணுமோ Sound Quality) குசேலன், க்ரிடம் படங்களை எடுத்து மாத்துறேன்னு சொதப்பியது போல் இல்லாமல், ரெண்டு வரி திருக்குறள மொழிபெயர்க்கும் போது, அதோட அர்தத்த கெடுக்காம, recreating magicன்னு சொல்ற மாதிரி, ஷங்கர் சூப்பர் டீம வீணாக்காம சக்‌ஷஸ் ஃபார்முலா போட்டுருக்காரு... வேறு இயக்குனரா இருந்தா விஜய்யோட மாஸ் இமேஜ்க்கு சூட் ஆகணும்ன்னு ஸ்க்ரிப்ட மாத்திருக்கலாம், ஆனா அப்டி பண்ணாம, இதான் உண்மையான மாஸ்ன்னு ஷங்கர் விஜய்ய மாத்திருக்குற இடத்துல ஜெயிச்சிருக்காரு... டைட்டில் கார்ட்ல இருந்து (பளப்பள ஜிகின்னா, காதை அடைக்கும் இசை, ‘இளைய தளபதி’ன்னு இல்லாம) கடைசி க்ரெடிட்ஸ் வரைக்கும் ஃப்ரேம்-பை-ஃப்ரேம் ரசிக்க வச்சிருக்காரு... குறிப்பா இருக்கானா இலியானா குத்து டைப் சாங்க்ல கூட விஜய்ய டீசண்டா காட்ட முடியும்ன்னு நிருபிச்சிருக்காரு..‘உச்சி மண்ட, சில்லாக்ஸ்’வகையறா டைரக்டர்ஸ் கவனிக்க.... 



நண்பன் - விஜய்க்கு தகுதியான வெற்றி (பேண்ட்டை இறக்கி) ‘தலைவாவாவா... You ARE GREAT'


வருகைக்கு நன்றி!! 




அப்பா கதைகள்

$
0
0


வில்லன் அப்பா


அப்பா: டேய், பாஸ்போர்ட் அப்ளை பண்ண சொல்லி…

பையன்: இந்த சனிக்கிழம காலேஜ் லீவ்ப்பா… அப்ளிகேஷன் வாங்கிடுறேன்

அப்பா:இத தான் ஒரு மாசமா சொல்லிட்டு இருக்க, நானே வாங்கிட்டேன்… இந்தா ஃபில் பண்ணு, அடுத்த வாரம் போய் கொடுத்துறலாம்


அடுத்த வாரம்

அப்பா:டேய், அப்ளிகேஷன் வாங்கிட்டு வந்தேனே, அத கொஞ்சமாச்சும் படிச்சியா?

பையன்:காலேஜ்ல டெஸ்ட்ப்பா, அதான் பாக்கல…

அப்பா:எடுக்கற்து என்னமோ 15, 25 தான்… அதுக்கு ஏன்டா நடிக்கிற?? நான் ஜெராக்ஸ் எடுத்து, அதுல பென்சில்ல ஃபில் பண்ணிட்டேன்… நீ அதே மாதிரி ஒரிஜினல்ல எழுதிக்கோ… காபி அடிக்கறதாச்சும் ஒழுங்கா செய்டா


மூன்று நாட்கள் கழித்து

அப்பா:டேய், முடிச்சியா?

பையன்:எங்கப்பா வச்ச, அப்ளிகேஷன்ன? மூணு நாளா தேடுறேன்

அப்பா:தெரியும்டா உன்னபத்தி, உன் டேபிள் மேலேயே தான் இருந்துச்சு, கம்யூட்டர்ல பைத்தியக்காரன் மாதிரி சாட் ஆடிட்டு இருக்க, க்ரவுண்ட்ல போய் ஆடுறான்னா, இங்க பந்து விளையாடிட்டு இருக்க.. அத ஒரு நாளாச்சும் பாத்தியா??

பையன்:சரி சரி, இப்போ நான் ஃப்ரீ தான், 10 நிமிஷ வேலப்பா, முடிச்சிடுறேன்

அப்பா:நானே எழுதிட்டேன்டா… உன் சைன் மட்டும் போடு, இல்ல அதுவும்

பையன்:ங்கேகேகேகேகேகே


அடுத்த வாரம்

பக்கத்து வீட்டு பெண்: அண்ணா இருக்காங்களா? 

அப்பா:ரூம்ல கேம்ஸ் விளையாடிட்டு இருக்கான்மா…

(பையன் அதற்குள் வெளியே வர)

பக்கத்து வீட்டு பெண்: அண்ணா, +1 சேரணும்.. அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபில் பண்ணனும்… சிலது தெரில, ஹெல்ப் பண்றீங்களா?

அப்பா:நல்லா கேட்ட போ… (விஷமச்சிரிப்பு)





ஹீரோ அப்பா


பையன்:அப்பா, அண்ணா யூனிவர்சிட்டி போறேன் நாளைக்கு, சிம்போசியம் இருக்கு

அப்பா:சிம்போசியம்ன்னா என்னடா?

பையன்:ஆங்ங், கிளி ஜோசியம் மாதிரி சீட்டு எடுத்து, வேலைக்கு செலக்ட் பண்வாங்கப்பா

அப்பா:டேய், அத கேம்பஸ் இண்டர்வியு தானே சொல்வாங்க…

பையன்:சும்மாப்பா, அதுவும் படிப்பு விஷயமா தான், படிப்பு சம்பந்தமா கேள்வி கேப்பாங்க..

அப்பா:சரி, எப்டி போகணும் தெரியும்ல? நம்ப டெப்போல இருந்து M147A ஏறிக்கோ, தி.நகர்ல எறங்கிக்கோ, கடசி ஸ்டாப்… எதிர்தாப்புல டெப்போ தெரியும், அங்க இருந்து அடயாறுன்னு போட்டுருக்குற பஸ்ல ஏறு… 

பையன்:யப்பா… எனக்கு தெரியும், 47D இருக்கு, தி.நகர்ல இருந்து கேட்டு போய்க்கிறேன்

அப்பா:கண்டக்டர்கிட்ட கேட்டுக்கோடா எந்த ஸ்டாப்புன்னு, சிலதுல்லா நிக்காது…

பையன்:நான் பாத்துக்கிறேன்

அப்பா:(நூறு ரூபாயோடு சில 10 ரூபாய் தாள்களை தந்து) ஷேர்-ஆட்டோ தி.நகர் வந்தா ஏறிக்கோ… பஸ் வந்துச்சுன்னா 50 ரூபா பாஸ் எடுத்துக்கோ…. ஒரு நாள் ஃபுல்லா போலாம் அத வச்சு, எந்த பஸ் வந்தாலும் ஏறிக்கோ

பையன்:(மனசுக்குள்) என்னமோ நான் அண்ணா யுனிவர்சிட்டி தனியா போனதே இல்ல மாதிரி

அடுத்த நாள்


அப்பா காலிங்

பையன்:சொல்லுப்பா, இப்போ தான் பஸ் வந்துச்சு

அப்பா:தெரியும்ல? லாஸ்ட் ஸ்டாப்… 

பையன்:ஷப்ப்ப்ப்ப்பா யப்பா, நான் தி.நகர் வந்துட்டு கால் பண்றேன்


30 நிமிடங்கள் கழித்து

அப்பா காலிங்

பையன்:இன்னாப்பா?

அப்பா:எங்கடா இருக்க?

பையன்:லயோலா காலேஜ் வர போறேன்…

அப்பா:ஆபிஸ்ல கிண்டில ஒரு பில் வாங்கிட்டு வர சொல்லிருக்காங்க, நீ என்ன பண்ணு, தி.நகர்ல எறங்கிட்டு கால் பண்ணு, நான் இப்போ வள்ளுவர் கோட்டம் தாண்டிட்டேன், உன்ன அண்ணா யுனிவர்சிட்டில விட்டுறேன்

தி.நகரில் இறங்கியவுடன், அப்பா கைதட்டி மகனை கூப்பிடுகிறார்

அப்பா:எவ்ளோ நேரம்டா லயோலால இருந்து இங்க வர?

பையன்:அப்போ நீ வந்து பஸ்ஸு ஓட்டேன், இவ்ளோ பேசுற

அப்பா:டயர்ட்டா? ஜூஸ் குடிக்லாமா?

பையனுக்கு புரிந்தது, அப்பாவுக்கு கிண்டியில் வேலை இல்லை என்று


வருகைக்கு நன்றி!! 



பில்லா 2 விமர்சனம்: தலடா நாளைக்கு வரேன்டா

$
0
0




கவுண்டமணி: கிருஷ்ணா, கிருஷ்ணா

ரஜினி: ஆஅங்க்... import package, log பார்த்தா Null Pointer Exception


கவுண்டமணி: அட வாப்பா... நாளைக்கு நாம ரெண்டு பேரும் லீவ் போட்டு, சினிமாவுக்கு போக போறோம்...



ரஜினி:  சினிமாவா? போயா... Next week release இருக்கு... 

கவுண்டமணி: அட இருப்பா... நம்ப ஊருல, ஆல்பர்ட் தியேட்டர்ல பில்லா-2 ரீலிஸ் ஆகுதாம்ப்பா


ரஜினி:  அட ஆமா, நம்ப தல படம்...


கவுண்டமணி: ஆமாப்பா... First day ஷோ எப்டி இருக்கும் தெரியும்ல? பால் அபிஷேகம் என்ன, பீர் அபிஷேகம் என்ன, டான்ஸு என்ன, சவுண்ட் என்னன்னு என்னென்ன...


ரஜினி:  யாருப்பா PM கிட்ட போய் லீவ் கேக்கற்து?


கவுண்டமணி: யோவ்... அவரு படமே ஒரு வருஷத்துக்கு ஒண்ணு தான் வருது... அதுவும் ஹிட் படம்ன்னா மூணு வருஷத்துக்கு ஒண்ணு தான்... ஒரு மாசம் பூரா கிடைக்காத எண்டர்டெயின்மெண்ட்ட, இந்த ஆளு ஒரே நாளுல, அதுவும் ரெண்ட்ர மணி நேரத்துல தராங்க்றான்... அத எவனாவது விடுவானா?


தியேட்டர் வெளியே


ரஜினி: பாத்தியா கூட்டத்த?? தலன்னா சும்மாவா? கிங் ஆஃப் ஒப்பனிங்... இப்போ டிக்கெட் என்ன பண்றது?


கவுண்டமணி: இது மாதிரில்லா நடக்கும் தெரிஞ்சு தான் நான் ஆன்-லைன்ல புக் பண்டேன் மாப்ள... ஸ்னாக்ஸ் கூட சீட்டுக்கே வந்து தருவாங்க... வாங்குறோம்


கவுண்டமணி: (கூட்டத்தில் புகுந்து) தல தல... தலடா.... போட்றா போட்றா.... (ரஜினியை பார்த்து) மச்சி, இங்கவா இங்கவா...

டிக்கெட் வாங்கியவுடன்


ரஜினி: ஆஆஆங்ங்... பில்ல்ல்ல்ல்ல்ல்லா...

கவுண்டமணி: டேவிட் பில்ல்ல்ல்ல்ல்ல்லா.... யோவ் எங்கய்யா உன் ஒரு கண்ண காணோம்?

ரஜினி: அட போனா போகுது... தல தான் படத்துல போட்டுருக்காரே... ஒண்ண கொடுப்பாரு...

(தியேட்டர் உள்ளே நுழைந்தவுடன்)


(கூட்டத்தோடு) தல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லலலலலலலல....

கவுண்டமணி: யப்பா... மூஞ்சு துடக்கற்துக்கு காஞ்ச டவல் எதாச்சும் வச்சிருக்கியா?


ரஜினி: நீ வேற... தலய பாக்கணும்ன்னு நானே காஞ்சு போய் இருக்கேன்... கைகுட்டல இருந்து எல்லாமே நனஞ்சு போச்சு.. நீ வேற காஞ்ச துணிய கேக்குற


கவுண்டமணி: அப்போ உடு ஒழிவிட்டு போட்டும்

ரஜினி: ஆமா... தலதலன்னு நாமளும் கத்துறோம்... இந்த படம் நல்லா இல்லன்னா என்னப்பா பண்றது?


கவுண்டமணி: நல்லா இல்லனாலும், தலக்காகவே பாக்கலாம், என்னா ஸ்டைல்லும்மா, ஹண்ட்சம் தலன்னு சொல்லிட வேண்டியது தான்...


ரஜினி: ஏன்?


கவுண்டமணி: அட அதன் ஏன்ப்பா மொக்கன்னு சொல்லணும்? விஜய் ஃபேன்ஸ் கிட்டல்லா அசிங்கமா நக்கல் வாங்கிட்டு...

ஆஸ்கார் ரவிசந்திரன் வழங்கும்

கவுண்டமணி: அட எவன்டா அவன்??


ரஜினி: Distributorபா... வேலாயுதம் படத்த தயாரிச்சவர்


கவுண்டமணி: த்ச்ச, சீக்கிரம் படத்த போடுங்கடா... மாப்ள, அடடா.. நாட்ல இந்த Distributor தொல்ல தாங்கல முடியலப்பா... த்ரிஷ்டி பொம்மய வச்சு படம் எடுத்தவன்லா Distributorஆம்...

(அஜித் இண்ட்ரோ)





விண்ணை கிழிக்கும் சவுண்ட்டு
தல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லலலலலலலலல....
வாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவா (விசில் விசில் விசில்)

(அரை மணி நேரம் கழித்து)


கவுண்டமணி: மாப்ள, சத்தியமா முடிலடா


ரஜினி: ஆமாடா... ஆழ்வார் மாதிரி ஆயிடும்ம்மா?


கவுண்டமணி: அந்த தீஞ்சு போன நூடுல்ஸ் மண்டயன் சாக்பீஸ் டொலிடி நம்பள கவுட்டுட்டானே...

இருவரும் நெளிந்து நெளிந்து, சீட்டுக்கு அடியில் செட்டில் ஆகிறார்கள்

ரஜினி: நான் வேண்டாம் சொன்னேன், கேட்டியா? இப்டி மாட்டி வுட்டுட்டியே?


கவுண்டமணி: வெளியே ஓடிப்போகலாம்ன்ன கதவ வேற சாத்தி வுட்டுட்டாங்கப்பா... 


ரஜினி: இப்போ என்ன பண்றது? அய்யோயோ... முடிலயே

(முதற்பாதி முடிந்தவுடன்)


கவுண்டமணி: ஹே... ஆனது ஆகிப்போச்சு, வுடு... எப்டியோ செகண்ட்-ஹாப் நல்லா இருக்கும்... துணிஞ்சு பாக்கலாம்..


ரஜினி: அய்யோ... நான் வரமாட்டேன், நான் வரமாட்டேன்...


கவுண்டமணி: செகண்ட்-ஷோக்கு வேற டிக்கெட் இருக்குய்யா... Back-to-Back ஷோஸ்


ரஜினி: அய்ய்ய்ய்ய்யோ... என்ன விட்ரு... நான் வரல...

கவுண்டர் நேராக ரெஸ்ட்-ரூம் சொல்ல

ரஜினி: அண்ணே... இந்த பக்கம்...


கவுண்டமணி: இல்ல நான் கதவு இந்த பக்கம் நெனச்சிகிட்டேன்...

(ரெண்டாம் பாதி துவங்கியவுடன்)


ரஜினி: (தனியாக) தலல்ல்ல


கவுண்டமணி: ஆஹன், இது வேற ஆக்கும்... இருக்குற உசுரே போய்டும் போல இருக்கு... இதுல கை வேற, தல வேறன்னு...

(பாடல் வர)


கவுண்டமணி: ஓஓஓஓஓஓஓஒ... இதுல டான்ஸ் வேற ஆட சொல்லுவாங்க போலருக்குப்போவ்...

(கொஞ்ச நேரம் கழித்து)


கவுண்டமணி: எதுக்கு என்ன தட்ன?


ரஜினி: இல்ல.. தூங்கிட்டீங்களோன்னு


கவுண்டமணி: இருந்தாலும் நீ ரொம்ப தைரியசாலிப்பா.. இந்த ஓட்ட கண்ணாடிய போட்டுடு எப்டிதான் இந்த படத்த துணிஞ்சு பாக்குறியோ...

(பஃப்ஸ் பாஸ் பண்ண)


கவுண்டமணி: அத நீங்கள வச்சிகோங்க, எங்கள தயவு செஞ்சு வெளிய மட்டும் விட்ருங்ககவ்வ்வ்வ்வ்வ் :(



என் படத்துல ஒவ்வொரு சீனும், ஒவ்வொரு பாடும், ஏன் ஒவ்வொரு ஃப்ரெமும் மொக்கையா செதுக்குனதுடா


ஒரு வழியாக படம் முடிந்து வெளியே விமர்சனம் கேக்க


கவுண்டமணி: நாங்களாச்சும் படம் மொக்கன்னு தெரியாம வந்தோம்... ஆனா நீங்க தெரிஞ்சே வந்து, எங்ககிட்ட விமர்சனம் வேற கேக்குறீங்க... நீங்கல்லா இங்க வருவீங்க சொல்லிருந்தா, நாங்க இந்த பக்கம் வந்துருக்கவே மாட்டோம்

விமர்சன குழு: நீங்க இப்டி சொன்னா, நாங்க விமர்சனத்த போட மாட்டோம்... மூஞ்ச சிரிச்ச மாதிரி வச்சிட்டு சொல்லுங்க...

ரஜினி: (சிரித்து கொண்டே) தல தக்கரு டோய்ய்ய்ய்ய்...  (கவுண்டரிடம்) வாப்பா போலாம்

கவுண்டமணி:  என்னப்பா உன் வேல முடிஞ்ச உடனே போலாங்க்ற... (காமரா பார்த்து) தல படத்த பாக்க தகுதி வேணாம், ஆனா தல படத்த
விமர்சனம் பண்ண தகுதி வேணும் (ரஜினியிடம்) இப்டி தான் படம் நல்லா இல்லனாலும் அத பத்தி பேசாம தலய பத்தி புராணம் பாடி அப்பீட் ஆயிடணும்... ஆனா சக்கரகட்டி சக்ரி மண்டய, நீ மட்டும் கைல கெடச்ச....




பில்லா 2 - இல்ல நல்லா த்தூ




வருகைக்கு நன்றி!! 

திருத்தணி விமர்சனம் – ஓம் பேரரசாயா நமக

$
0
0

இந்தியாவில் இருக்கும் போதே என்னை பெரிதும் கவர்ந்த ட்ரைலர், பிட்சாபடகுழுவினரால் வெளியிடப்பட்டது. எப்படியாச்சும் இந்த படத்த பாத்தே ஆகணுங்க்ற எதிர்ப்பார்ப்பு. ஆனா என் கெட்ட நேரம், அதுக்குள்ள அமெரிக்காவுக்கு வந்துட்டேன். வலைத்தள குழுக்கள் மூலம் போன வாரம் படம் ரீலிஸ் ஆனது தெரிஞ்சு, தியேட்டரில் பாக்கலாம்ன்னா இங்கே மாற்றான், தாண்டவம் தான் ஓடிட்டு இருக்கு. தெரிஞ்சவன் எல்லாம் *த்தா பிச்சிட்டான்டா, *ம்மால கொன்னுட்டான்டா, மெர்சல் ஆஃப் த மெல்கிப்சன் பண்ணிட்டான்டான்னு நோட்டீஸ் அடிக்க, நமக்கோ எதிர்ப்பார்ப்புகள் ஷகிலாவை கண்ட கங்கா மாதிரி ஏறிப்போக, ஆன்லைன்ல பாத்திரலாம்டான்னு முடிவு பண்ணி, லிங்க அடிச்சா – வந்தான் பாருய்யா திருத்தணி. ஹாலிவுட் இயக்குனர்களுக்கே சவால் விடும் ஸ்டீவன் நோலன் பேரரசுவின் இயக்கத்தில், ரொம்ப நாளா ஆட்டம் காட்டி கடசியா ரீலிஸ் ஆயிடுச்சுங்கற சந்தோசம். கண்ணுக்குள்ள தலைவரோட முதல் ஷோ கொண்டாட்டம் தேங்கி நிக்க, பிட்சா கெடக்குதுன்னு திருத்தணிய ஓட வுட்டேன்…


ஒரு ஊருல பல ரவுடிங்க. அதுல பாதி பேர விஜய் திருப்பாச்சிலேயே போட்டுத் தள்ள, மீதி இருக்குற மிச்சத்தி சொச்சத்தி ரவுடிகள பரத் எப்டி போட்டு தள்ளுறாருங்க்ற கத தான் திருத்தணி. 


எடுத்த உடனே, எம்.ஜி.ஆர் பாட்டு பேக்ரவுண்டல ஓட, அவரோட மாண்டேஜ் விடியோஸ் காட்சிகளாக தெரிய, உள்ளுக்குள்ள சந்தேகம், ‘ஒரு வேள ஜெயா டீ.வி. போட்டுட்டேன்னா?’ன்னு. கதை திரைக்கதை பேரரசுன்னு வரலையேன்னு தயக்கத்தோட பாத்துட்டே இருக்கும் போது, ஒரு ரவுடி கூட்டம் தெரண்டு வர, இது தலைவர் படம் தான்டான்னு நிமிர்ந்து உக்காந்தேன். ஃபோட்டோ ஃப்ரேம்ல இருக்குற ஆளு செத்து போனதால, தீபாவளி கொண்டாட கூடாதுன்னு ஒரு தெருவையே அடிச்சு நொறுக்க, ஒரு வீட்ல மட்டும் ‘பட்டாசு வெடிச்சா தானே சத்தம் வரும்? நாம கம்பி மத்தாப்பு கொளுத்தலாம்’ன்னு ’என்னயும் நடிக்க வைங்க’ பாண்டியராஜன் ஐன்ஸ்ட்டீன் கணக்கா ஐடியா கொடுத்து, கொண்டாடும் போது புஸ்வானம் வெடிச்சு ரவுடிங்க காதுல விழ, அவங்க வழக்கம் போல அந்த வீட்ல இருக்குற ஒரு கன்னிப்பெண்ண தரதரன்னு இழுத்துட்டு வரும் போது, ஒரு அடி இல்ல இடி. என்னன்னு பார்த்தா இளைய தளபதி விஜய். இப்போ தானேய்யா நண்பன்ல நடிச்சு நல்ல பேரு வாங்குனியே தலைவா, திரும்பவும் மொதல்லருந்தான்னு ஜெர்க்காகி யோசிக்கும் போதே, அது சிவகாசி படத்துல இருந்து வெட்டப்பட்ட காட்சின்னு தெரிஞ்சு நிம்மதி பெருமூச்சு. (இதுக்கு தான் கெட்-அப் மாத்தி நடிக்கணும்ங்றது) அடுத்த ரெண்டாவது அடில்ல ஒஸ்தி சிம்பு ஒடம்போட பரத் வெரப்பா நிக்க, வழக்கம்போல அடி, ஒத, குத்து, பன்ச்சு, முருகன வேண்டிட்டு இண்ட்ரோ சாங்கு. 


தலைவர் படம்னாலே தொப்பி நமக்குதான்



ஹீரோ அறிமுக பாட்டு முடிஞ்சா அடுத்து என்னங்கற  ஃபார்முலாக்கு விதிவிலக்கில்லாம, ஹீரோயின் எண்ட்ரி. சுனைனா அழகா இருக்காங்க, நல்லாவும் நடிக்கிறாங்க. ட்ரேயின்ங் யாரு, ‘பாரதிராஜா + பாலசந்தர்’ கலவை பேரரசுஅல்லவா. வழக்கம் போல பொய் சொல்லி ஹீரோவ எமாத்த (சிவகாசி + திருத்தணி), பொது அறிவு இல்லாத ஹீரோ மம்தா பேனர்ஜி ஹீரோயினோட சொந்தக்காரங்க நெனச்சு எமாற, அப்டியே ராஜ்தானி எக்ஸ்ப்ரெஸ்ஸ காமெடி ட்ராக்ல ஓட்றாரு பேரரசு. அடக்கமுடியாத சிரிப்பு. அடுத்த மூணாவது ரீல்லேயே பித்தலாட்டத்த பரத் கண்டுபிடிச்சு, ஆதரவற்றோர் இல்லத்துல வளர்ந்த சுனைனா, கூட்டுக்குடும்பத்துல தான் வாக்கப்படுவேன்னு சொல்றத தெரிஞ்சிக்கிறாரு. பூனம்பாண்டே மாதிரி ரசிகர்கள ஆச காட்டி மோசம் பண்ணாம, ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரியே பரத்தோட குடும்பத்துல ஐக்கியம் ஆயிடுறாங்க, ரொமாண்ட்டிக் பாட்டயும் போட்டுடுறாங்க.



அடுத்து பெரிய ட்விஸ்ட்டா, வேறு பல எடங்களில் அநியாயம், அக்கிரமம் நடக்கும்போது, அங்கே பரத் இருந்தும் தட்டி கேக்க மாட்டேங்க்றாரு. அதே இடத்துல ‘அடிடா அவன, ஒடடா அவன’ன்னு நரம்ப முறுக்கிட்டு முதல் ஃபைட்ல வேடிக்க பார்த்த ‘நட்புக்காக’ ராஜ்கிரணும் அட்டெண்ட்டன்ஸ் போட, என்னடா இவன் கோககோலா பாட்டில் மாதிரி பொங்குவான்னு பாத்தா, ஸ்லைஸ் மாதிரி சாந்தமா போறான்னேன்னு கடுப்பாகுறாரு. இதுக்கு கண்டிப்பா ஒரு ஃப்ளாஸ்-பேக் இருக்குமேன்னு நாம யோசிக்கறுக்குள்ளேயே, நெஞ்ச வேரோடு புடுங்கி போடுற மாதிரி, கல் மனசையும் கரைய வைக்குற ஒரு ப்ளாஸ்-பேக்க போட்டு நம்பள நிலைகுலைய செய்றாரு பேரரசு. கொஞ்ச நேரத்துல பரத் விபத்துல சிக்க, ‘வெற்றி விழா’ படம் மாதிரி ஆயிடுமோன்னு திங்க் பண்ணும்போதே ’ தெய்வத்துக்கு சோதிக்க ஆளில்லையா?’ன்னு சோக பாட்ட போட்டு நம்பள இன்னும் தாக்குறாரு. படம் பாக்குறவங்க நமக்கே எழுதுன மாதிரி இருக்கேன்னு ஃபீல் பண்ணும் போதே, இன்னொரு ட்விஸ்ட்ட தந்து (அத நான் சொல்ல மாட்டேனே), ராஜ்கிரண் பரத்த கூட்டிட்டு போய் அர்ஜூனனுக்கு கீதா உபதேசம் செஞ்ச கிருஷ்ணன் மாதிரி, விவேக்கானந்தர், பகத்சிங், பாரதியார் இப்படி பலபேரோட வாழ்க்கை வரலாற்ற பாடமா எடுத்து ‘சாதிக்காம செத்தா தோளுல தூக்கிட்டு போவாங்க, சாதிச்சிட்டு செத்தா பூ..பூ… பூமால தூவி தூக்கிட்டு போவாங்க’ன்னு நரம்பு புடைக்கும் தத்துவத்த சொல்லி, பாலுவா இருக்குற பரத்த திருத்தணியா மாத்துறாரு. 



அதுக்காப்பாலிக்கா, திருத்தணி எப்படி வில்லன் கூடாரத்த அழிச்சான்னு தன்னோட டிப்பிக்கல் கமர்சியல் பஞ்சாமிர்தத்துல பேரிச்சம்பழ அரசியல்வாதி வில்லன், வாழப்பழ கரப்ட் போலீஸ், கற்கண்டு காமெடி போலீஸ், நெய் புத்திசாலி ஹீரோன்னு கலந்து கட்டிருக்காரு. கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்த தலைவரோட தரிசனம் ரெண்டாவது பாதில கிடைக்க, அரங்கமே அதிரும் கரகோஷத்த மனசுக்குள்ள இசச்சிகிட்டே ரசிச்சு பார்த்தேன். அதுவும் தலைவர் ‘திருத்தணி எல்லாம் தனி கார்டு, நீ அவன போய் தேடு’ன்னு வசனம் பேசும் போது *த்தா தலைவாவாவாவான்னு விசில் அடிச்சிட்டே, ரைமிங்கா எவனாச்சும் தலைவர திட்டிற கூடாதுன்னு பண்ணாத பிராத்தனை இல்லை. ‘டி.ஆர் சிம்புக்கு அப்பன்னா, நான் வம்புக்கு அப்பன்’ன்னு சொல்லிட்டு அவர் சிரிப்பாரே ஒரு சிரி, ச்ச. எல்லாமே எல்லாருக்கும் அமஞ்சிறாது. சிலதெல்லாம் தானா அமையணும். PROUD TO BE A PERARASUIST.



பரத்த பத்தி பெருசா சொல்ல ஒண்ணுமில்ல. என்னோட முழு கவனமும் பேரரசுவோட இசை, வசனங்கள், திரைக்கதை இதுலேயே இருந்துச்சு. அமெரிக்காவுக்கே சவால் விடும் அளவுக்கு ’ என்னடா பில்லு பில்லு நீ என்ன பெரிய பில் க்ளின்டனா?’ங்ற வசனம் மூலமா பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு தலைவருக்கு கெடச்சா ஆச்சிரியப்படுவதற்கில்லை. ’ கண்ணகி மதுரைய தான் எரிப்பா, நாங்க நெனச்சா கண்ணகியே எரிப்போம்’என்ற வசனத்தால் சிலப்பதிகாரத்தை கரைத்து குடித்த வாழும் இளங்கோ அடிகளாக கண்ணுக்கு தெரிந்தார். இசை சொல்லவே வேணாம், முதற்படம் என்று சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. ரோஜா ஏ.ஆர்.ரகுமான், மின்னலே ஹாரிஸ் ஜெயராஜ், மூணு அனிருத் வரிசையில் பேரரசுவுக்கு திருத்தணி. ஆண்ட்ரியா உதட்டை கடிக்காமல், இசையில் கவனம் செலுத்துங்க தலைவா. குத்து, மெலடி, ராக், ஹிப்-ஹாப், சோகம்ன்னு வைரட்டியாக வாத்தியம் வாசித்து இருக்கிறார்.


கடைசி காட்சியில் பரத் ஒரு ஊரு பேரை சொல்ல, ‘தலைவரோட அடுத்த படத்துக்கு டைட்டில் கெடச்சாச்சு’ங்ற ரெட்டிப்பு சந்தோசத்தோட படத்த ரெண்டாவது தடவையா பாத்து முடிச்சேன். இனிமேலும் படையப்பா நீலாம்பரி மாதிரி பாத்துட்டே இருப்பேன். ஏனா IT’s A CLASSIC. தலைவா, இனிமேல் பரத், விஜய், அஜித்ன்னு லுச்சா பசங்க கூட படம் பண்ணாத, அடுத்த படத்துல நீ தான் ஹீரோவா நடிக்கணும், இது அனைத்துலக ஸ்டீவன் பேரரசு ரசிகர் மன்றம், அமெரிக்கா கிளை சார்ப்பா லட்சோப லட்சம் ரசிகர்களின் வேண்டுகோள்.

திருத்தணி – பாக்கலன்னா செத்துரு நீ


பூந்தோட்டத்துக்கே பூச்செண்டா? போங்க பாஸ்


வருகைக்கு நன்றி!! 

Diary காதல் - தைரியமான காதல் : பக்கம் 1

$
0
0

Series சுருக்கம் - ரெண்டு நண்பர்கள் : கார்த்திக்- அருண்… ஹாஸ்டல்ல தங்கி இஞ்சினியரிங் கோர்ஸ் படிக்கிறாங்க (கடைசி வார்த்தை அருணுக்கு மட்டும்)… இவங்க போடுற மொக்க, கடலை, தத்துவம் இது தான் இந்த சீரிஸ். அருண் சின்சியரா லவ் பண்ற பொண்ணு பேரு அனுஷா.. இதுக்கு கார்த்திக் கொடுக்குற ஐடியாஸ்லா என்ன? அவங்க லவ் சக்ஸஸ் ஆச்சா? அதான் சில்லற பசங்க உங்களுக்காக..


அருண்: மச்சி, மெட்டர் தெரியுமா?

கார்த்தி: தெரியும் மச்சி…

அருண்: ச்ச… அப்போ எனக்கு தான் லேட்டா தெரிஞ்சிதா? ரூம்லேயே இருந்துட்டு எப்டிடா இதெல்லாம்?

கார்த்தி: நெத்து நைட்டு தான்டா தெரிஞ்சிது…

அருண்: டேய்.. அப்போவே என்கிட்ட சொல்லிருக்கலாம்ல?

கார்த்தி: சொல்லலாம்ன்னு வந்தேன்… ஆனா பரதேசி சத்யம் தியேட்டர் டால்பி 5.1 டிஜிட்டல் சவுண்ட் மாதிரி கொரட்ட விட்டு தூங்கிட்டு இருந்த…

அருண்: எதிர்பாக்கவே இல்லல?

கார்த்தி: ஆமாடா… நேத்து தாத்தா கடைல இருந்து வரும் போது தான் தெரிஞ்சுது… சம அல்லு… 500 ரூபா கொடு பாத்துக்கலாம்ன்னு சொன்னா…

அருண்: டேய்… என்னடா ஒளரிட்டு இருக்க?

கார்த்தி: நாயே.. நேத்து ஒரு மெட்டர பாத்தேன்டா.. அத பத்தி தானே நீ கேட்டுட்டு இருக்க?

அருண்: முருகாகாகா… இவன வச்சிட்டு !! நான் சொல்றது தினேஷ் லவ் மெட்டர்டா…

கார்த்தி: அதுக்கு்ள்ள மேட்டர் ஆயிருச்சா?

அருண்: செருப்பால அடிப்பேன்.. எல்லாத்துக்கும் அந்த மேட்டரையே நினச்சிட்டு இரு.. நம்ப தினேஷ் இருக்கான்ல.. அவன் இ.சி.இ பிரியாங்கவ கரெக்ட் பண்டான்டா…

கார்த்தி: யாரு, அந்த பானி பூரி மேல தயிர் ஊத்துன பப்டி சாட் மாதிரி இருப்பாளே, அந்த சேட்டு பொண்ணு பிரியங்காவா?

அருண்: ஆமாடா… இன்னிக்கு காபிடே போயிருந்தேன்…  ரெண்டு பேரும் கைய பிடிக்கற்தென்ன, அடிச்சிக்கற்தென்ன, பாத்து பாத்து சிரிச்சிக்கற்தென்ன…

கார்த்தி: டேய் ஆதிவாசி… இதெல்லாம் பண்ணா லவ்வா? இப்போல்லா பொண்ணுங்க ரொம்ப சகஜமா பழக ஆரம்பிச்சிட்டாங்கடா… இதயெல்லாம் லவ்ன்னு நெனச்சிட்டு பசங்க ஏமாந்து போறீங்க… அப்றோம் அவள திட்டி ஷார்ட்-ஃபிலிம் எடுத்து ஃபேமஸ் ஆகிடுறீங்க… பொண்ணுங்கள புரிஞ்சிக்கணும்டா… 

அருண்: மூடு… சொல்ல வந்தத முழுசா கேளு… லவ் க்ரீட்டிங் கார்ட் அவ கொடுக்க, ஹார்ட் போட்ட காஃபி இவன் வாங்கி கொடுக்க, கண்ணுல காதல் பொங்கி வழிஞ்சு ஓடுச்சுடா…

கார்த்தி: அப்டியே அந்த பொங்குன லவ்ல நீ கொஞ்சம் காஃபி அடிச்சிருப்பியே… ச்ச குடிச்சிருப்பியே…

அருண்: இதுல கொடும என்னன்னா நம்ப க்ளாஸ் குண்டு லீலா கூட வேற ஒரு ட்ராக்க ஓட்டிட்டு இருக்கான்டா

கார்த்தி: ஒண்ணு Fate-ஆள் Attraction, இன்னொன்னு FAT-ஆள் Attraction போல

அருண்: ஆனா ஒண்ணுடா.. அன்னிக்கு பானி பூரி சாப்டும் போது, அவன் எக்ஸ்ட்ரா ’ஆலு’ கேக்கும் போதே டவுட் வந்துச்சு…

கார்த்தி: விடு மச்சி காரசேவுக்கு சட்ட போட்டவனுக்கெல்லாம் ரெண்டு லட்டு கிடைக்கும் போது, காண்டாமிருகத்துக்கு சட்ட போட்ட மாதிரி இருக்குற உனக்கு ரெண்டு இல்ல, ஒரு அட்டு ஆச்சும் கெடைக்கும்டா…

அருண்: த்தா… இதான் சாக்குனு என் அனுஷாவ அட்டுன்னு சொல்டல?

கார்த்தி: இல்ல மச்சி, ரைமிங்ஙா இருக்கணுமேன்னு… உன் ஆள நான் எப்டிடா தப்பா சொல்வேன்?? தாத்தாவோட காஃபி கடேலெயே அக்கவுண்ட் வச்சிருக்குற டாக்கு, நீ ஏன் காஃபி டே போன? உன்னால நேத்து எனக்கு பஜ்ஜி கூட கொடுக்கமாட்டேன்னு சொல்டாருடா…

அருண்: டேய்.. அனுஷா கூப்டா.. அவ பர்த்தே ட்ரீட்க்குடா…

கார்த்தி: அது முடிஞ்சு போய் நாலு மாசம் ஆச்சேடா… கல்யாணத்துக்கு சாப்பாடு போட சொன்னா, காதுகுத்துல வாழஇலைய போட்டுருக்கா அவ…

அருண்: நீ தானடா பர்த்தே அப்போவே ட்ரீட் கேட்டா கவுரவம் கொரஞ்சிடும்ன்னு சொன்ன… அத நம்பி நானும் கேக்காம இருந்தேன்டா.. முந்தாநேத்து ஏதேச்சையா பேசிட்டு இருக்கும் போது, ‘என் ஃப்ரெண்ட்ஸ்ல நீ மட்டும் தான் ட்ரீட் கேக்கல, ஏன்டா இப்டி இருக்கன்னு’ கேட்டுட்டா… மனசே கஷ்டமாயிடுச்சு… அதான் அவ ஃபீல் பண்ண கூடாதுன்னு ட்ரீட்க்கு போனேன்…

கார்த்தி: அவ அசிங்கப்படுத்துனது கூட உனக்கு வருத்தமில்ல… அவ ஜஸ்ட் ஃப்ரெண்டுன்னு சொன்னது கூட கவலயில்ல… அது எப்டி சார்? அவ ஃபீல் பண்வாளா? நாயே எப்போ அவ கூப்டுவா, எப்போ சுத்தலாம்ன்னு வயித்துல ஈர துணிய கட்டிட்டு சுத்துறியேடா…. நமக்காக ஒரு ஜீவன், நம்ப ஆருயிர் நண்பன் சாப்டாம இருக்கானேன்னு கொஞ்சமாச்சும் ஃபீல் பண்ணியாடா?

அருண்: இல்ல

கார்த்தி: என்னடா சட்டுன்னு இப்டி சொல்ட?


சிறிது நேரம் அமைதி


கார்த்தி தன்னுடைய மொபைலில் ‘என் இதயம் உடைத்தாய்’ பாடலை போட

அருண்: மச்சி… சிட்டுவேஷன் சாங்க்கா? ப்ளீஸ்டா, ஆஃப் பண்ணு…

கார்த்தி: என்னடா ஆச்சு?

அருண்: காபிடேல… She burst my heart 

கார்த்தி: வாட்? வை? ஏன்? எப்படி? என்னாச்சி?

அருண்: டேய் பேஜார் சுந்தராஜன்... அவ அப்டி பண்ண அப்றோம் செம ஃபீல் ஆயிடுச்சு

கார்த்தி: ப்ரோபோஸ் பண்ணிட்டியா?

அருண்: கேக்காதடா அந்த கதய…. பண்லாம்ன்னு பக்காவா ப்ளான் பண்ணி வச்சிருந்தேன்டா… ஒரே செகண்ட்ல எல்லாத்தையும்….

கார்த்தி: கேக்குற எனக்கே கஷ்டமா இருக்குடா… ஃப்ரெண்ட்டா இருக்கலாம்ன்னு சொல்டாலா? அப்டி சொன்னா கூட இன்னொரு சான்ஸ் இருக்கு மச்சி…

அருண்: அதுல்லா சொல்லலடா…

கார்த்தி: டேய் என்ன தான்டா நடந்துச்சு?

அருண்: நம்ம கிட்ட கிஃப்ட் வாங்க காசு இல்லன்னு, ஹார்ட்ல ஒரு பலூன் வாங்கிட்டு போனேன்டா

கார்த்தி: ஓஓ.. சிம்பாலிக்கா லவ்வ எக்ஸ்ப்ரெஷ் பண்றாராம்…. அப்றோம்?

அருண்: அவ வந்த உடனே, திஸ் இஸ் ஃபார் யூன்னு ஒரு ஸ்மைலோட கொடுத்தேன்…

கார்த்தி: அவ அத வாங்கிட்டு ஓஓமைகாட்ட்ட்ட்ட்.. ச்ச்ச்ச்ச்ச்ச்சோசுவிய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட்ட் சொல்லிருப்பாளே?

அருண்: எப்டிடா பக்கத்துல இருந்து பாத்த மாதிரியே சொல்ற?

கார்த்தி: அன்னிக்கு கிளி ஜோசியன் சொன்னானேடா, உன்ன பைத்தியமா ஒருத்தி காதலிப்பான்னு… அதிர்ஷ்டசாலிடா நீ… மேல சொல்லு

அருண்: சுவிய்ட்ட்ட்ட்ன்னு சொல்லி அழுத்துனா பாரு, பலூன் வெடிச்சிருச்சுடா

கார்த்தி: உச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுசு

அருண்: அப்டியே என் நெஞ்சும் தான்டா… அதுல இருந்தது காத்து இல்ல… என்

கார்த்தி: ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுசு

அருண்: டேய் ரைமிங்க்கு பொறந்த ரைனா.. என் காதல்ன்னு சொல்ல வந்தேன்…. 

கார்த்தி: சத்யமா சொல்றேன்டா… இந்த ஜென்மத்துல அவ உனக்கு கெடைக்க மாட்டா… நெஞ்ச ஒடச்சாலாம்…. நைட்டு என் பக்கத்துல படுக்காத சொல்லிட்டேன், அவ நெஞ்ச தான் ஒடப்பா, நான் கு……

அருண்: மச்ச்ச்சீ

கார்த்தி: மூடு…. 

அருண்: லவ் ப்ரோபோஸ் பண்ண நீயாச்சும் ஐடியா தாயேன்டா…

கார்த்தி: அந்த டைரி மேட்டர வர்க்-கவுட் பண்ணியா?


பொறுக்குவார்கள்..


வருகைக்கு நன்றி!!

அலெக்ஸ் பாண்டியன், விஸ்வரூபம், கடல் - 3 in 1 விமர்சனம்

$
0
0

அலெக்ஸ் பாண்டியன் –என்னடா சாவுக்கு வர சொன்னா, பதினாறாம் நாள் காரியத்துக்கு வந்து துக்கம் விசாரிக்கிற மாதிரி விமர்சனம் தரானேன்னு யோசிக்க வேணாம்… ஏற்கனவே கைப்புள்ளய விட பலபேரு அடிச்சு, துவச்சு காயப்போட்ட படம் தான்… பருத்தி வீரன், நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன்னு பாக்குற மாதிரி படங்கள கொடுத்துட்டு இருந்தாரு… யாரு கண்ணு பட்டுச்சுன்னு தெரில, இல்ல கமர்சியல் மசாலா சிறுத்தை ஹிட் ஆச்சே, அதுனால என்ன கருமத்த பண்ணாலும் மக்கள் பாப்பாங்கன்னு மெதப்புல இருக்காரு போல ஹீரோ… சென்னைல்ல ஃபோர் போட்டா கூட தண்ணி கெடச்சிரும், ஆனா இந்த படத்த தோண்டுன்னா ஒரு நாலு நல்ல சீன் கூட கெடக்காது… அதுவும் ஆரம்பத்துல ஒடியே ட்ரெயின்ன புடிக்கிற சாகசம் ஆகட்டும், அப்பப்பப்பப்பப்பப்ப்ப்ப்ப்ப்ப்பாபாபாப்பா, இவர் பின்னாடி உக்காந்தா அஞ்சு மணி நேரத்துலேயே டெல்லி போய்ரலாம்… ப்ரிட்ஜ்ல இருந்து ட்ரெயின்ல குதிக்கிறாரு, காரு கேப்ல பறந்து வந்து அடிக்கிறாரு…ங்ங்ங்கொய்யால வீடியோ கேம்ல கூட இப்டிலா பண்ணமாட்டாங்கடா…. ஹீரோ சாரு அவர நொக்கிவர ஹெலிகாப்டர புடிச்சு ஒடைக்காதது தான் மிச்சம்… பட்ஜெட் ப்ராப்ளமோ? சந்தானம் காமெடி – காம ’நெடி’… இதெல்லாம் பழய கே.எஸ்.ரவிகுமார் படத்துலேயே பாத்தாச்சு பாஸூ… அனுஷ்கா நானும் இருக்கேன்னு அப்பப்போ வந்து போறாங்க… இசை – சரிகமபதநிச பின்னணி இசை சநிதபமகரிச…. அண்ணனும் தம்பியும் காப்டன் ரிட்டயர் ஆயிட்டாருன்னு இந்தியாவ காப்பாத்துறேன்னு கெளம்பி நம்ப உசுர வாங்குறாங்க… மொதல்ல இவனுங்க கிட்ட இருந்து தமிழ் சினிமாவ காப்பாத்தணும்… ஆனா ஒண்ணு, சூரியாகிட்ட இல்லாத இயல்பான ஸ்கிரின் ப்ரெசன்ஸ் கார்த்தி கிட்ட கொட்டி கெடக்கு… அத இது மாதிரி படத்துல நடிச்சு வீணாக்கிக்க வேண்டாம்…

மொத்தத்துல அலெக்ஸ் பாண்டியன் - 7 அனாசின், 8 விக்ஸ் ஆக்‌ஷன் 500


இந்த படத்துல நடிச்சதுக்கு என்ன நானே சுட்டுக்கணும்

விஸ்வரூபம் – அமெரிக்கால இருக்குற என்ன, ஃப்ரெண்ட்ஸ்லா வெறுப்பேத்துவாங்க, எனக்கு முன்னாடியே படத்த பாத்துட்டேன்னு… படம் பாக்கலாம்ன்னு ஆச தான்… ஆனா எவன் 15$ செலவழிச்சு, ரெண்டு மணி நேரம் ட்ராவல் பண்ணி பாக்கணும்? ரீலிஸ் டேட் சொன்னாலே ‘வாங்குடா தடை, போடுடா கேஸூ’ன்னு கமல வச்சு தமிழகத்துல கும்மாங்குத்து குத்தாடத்த போட, கமலும் ‘ஓடஓடஓட தூரம் கொறயல’ன்னு பாட, அப்டி என்னதான்டா படத்துல இருக்குன்னு பாக்கலாம்ன்னு போனேன்… கமல் படத்துல பிரச்சன என்னன்னா அவரு தான் புத்திசாலின்னு காட்டிக்கவே படம் எடுக்குற மாதிரி ஒரு ஃபீல் தோணும்… அதவுட பிரச்சன, படம் புரியல, அதுனால புடிக்கலன்னு சொன்னா, சிலபல கமல் பக்தர்கள் ‘போடா ஃபூல் (English Word) அறிவிருந்தா தான் படம் புரியும்’ன்னு திட்டிபுடுவாங்க… கமர்சியல்ரீதியா கமல் ஒரு இயக்குநரா மிகப்பெரிய வெற்றிய பெறலன்னு தான் சொல்ல முடியும்… அப்டியே கெடச்சாலும் (டைரக்டர் மட்டும் வேற பேரு), அந்த படம் சுமாருக்கும் கீழ தான் இருக்கும்… ஆனா கமல் ஒரு சூரன், இதான் உண்ம.. அத செவிட்டுல அறஞ்சா மாதிரி சொல்ற படம் தான் விஸ்வரூபம்… காலத்துக்கு ஏத்தா மாதிரி மாறி (Adapting to the continual changing trend), ரசிக்கும்படியாகவும், புத்திசாலிதனமாகவும், கமர்சியல் ஐட்டங்கள் கலந்துகட்டி எல்லாம் ஒருசேர விஸ்வருபத்த கொடுத்திருக்காரு… பாராட்ட நெறய விஷயங்கள் இருக்கு… திரைக்கதை, Dark Humor வசனங்கள், ஆஃப்கான் காட்சிகள், Attention to the detailsன்னு... ஊருக்குள்ள பலபசங்க ஸ்டைலிஷ் படம்ன்னு சொல்லி மொக்க பீஸா கொடுத்து ஏமாத்திட்டு இருக்க, கமல் ‘டாய்… த்தா சின்ன பசங்களா’ன்னு திரைக்கதை கூட ஸ்டைல சேத்து ஒரு பாடமே எடுத்துருக்காரு… விஷ்ணுவர்தன் & கோ கவனிக்க… ரெண்டாம் பாதி ஓவர் கமர்சியலிசம், FBI காமெடின்னு ஜவ்வடிச்சாலும், பார்ட்-2க்கு சூப்பரா அஸ்திவாரம் போட்டுருக்காரு… இதுக்கு ஒரு முழு விமர்சனம், பார்ட்-2 வந்தா தான் கொடுக்க முடியும்… ’I’m waiting’

மொத்ததுல விஸ்வரூபம் - வித்தகரூபம்

பேசாம அடுத்த படத்துக்கு ‘தடை’ன்னு பேர் வச்சிரலாமா?
‘தடை மேல தடை’ ஹெட்லைன்


கடல் – ஊருக்குள்ள ஒரு ஹீரோ இருந்தாராம், நாம என்ன படம் கொடுத்தாலும் அத பாக்க கூட்டம் வரும்ன்னு ஆணவத்துல இருந்தாராம்… தல மேலேய அடிச்சு உக்கார வச்ச அப்றோம் தான் ஷங்கர், முருகதாஸ்ன்னு ரூட்ட மாத்துனாரு… அதுமாதிரி மணிரத்னம் சார் நெனசிட்டாரு போல, எத எடுத்தாலும் க்ளாஸி, ரேஞ்சுன்னு சொல்ல கூட்டம் இருக்கும்ன்னு… ‘இது மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்குற வரைக்கும் உங்கள அசசிக்க முடியாது’ சுஜாதா மறைவு கதை திரைக்கதைல அப்பட்டமா தெரியுது… கடசி படங்கள்ல இருந்த பாலிவுட் மோகம், இதுல இல்லாத்த நெனச்சு சந்தோஷப்பட்டாலும், ‘கடல், கிராமம்’ன்னு தனக்கு செட் ஆகாத Platform எடுத்து சொதப்பிருக்காரு…. படம் மொக்கயா இருந்தாலும் பாட்டெல்லாம் சூப்பராவாச்சும் எடுத்துருப்பாரு (உப: திருடா திருடா), கடல்ல அது கூட இல்ல… மானாட மயிலாட டான்ஸ் மாதிரி அடியே சாங்கு…. கதாபாத்திரம் எதுவும் மனசுல ஒட்டவே இல்ல, ‘அதே டெய்லர், அதே அந்நிய காட்சியமைப்பு’எல்லாரும் சொல்ற மாதிரி ஒளிப்பதிவு சூப்பர், கண்ல எடுத்து ஒத்திக்கலாம் தான்… ஆனா கதைக்கு சுத்தமா செட் ஆகாத கலர்-டோன்… மணிசார் படம்ன்னா வசனம் கம்மிங்கறத மாத்தணும்ன்னு எல்லாரும் வசனமா பேசி இம்ச கொடுக்குறாங்க… கவுதம் நல்ல அறிமுகம், துளசிக்கு நல்ல ‘முகம்’… அஞ்சு வருஷம் கழிச்சு நடிக்கவா பாப்பா… இவனுங்க கூட இப்போதைக்கு சேராத… மணி சார், நாயகன் பாத்து ரசிச்சுருக்கேன், அஞ்சலி பாத்து பிரமிச்சிருக்கேன், அலைபாயுதே பாத்து உருகிருக்கேன், கண்ணத்தில் முத்தமித்தால் பாத்து சிலிர்த்திருக்கேன்… இப்டி சம்பாதிச்ச நல்ல பேர எல்லாம் கDULLல கரச்சிராதீங்க…. ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் எல்லை வரை ஓடினேன், அங்கே கடல் ஓடிக்கொண்டிருந்ததால் திரும்ப வந்து விட்டேன்… 

மொத்தத்துல கடல் - கதறல்  

கிஸ்ஸிங் மிஸ்ஸிங்

லொல்லு சொல்லு - 3

$
0
0
தொண்டைல இருக்கு ஆனா வெளிய வரமாட்டேங்குது மாதிரி , ரொம்ப நாளா எதாச்சும் எழுதணும்ன்னு தோணுது, ஆனா கரெக்டா எந்த போஸ்ட்டும் போட முடியல.. ஆரம்பத்துல வாரம் ஒரு போஸ்ட், அப்றோம் மாசம் ஒரு போஸ்ட், அப்றோம் 2 மாசத்துக்கு ஒரு போஸ்ட், இப்டியே போனா வருசத்துக்கு ஒரு போஸ்ட் தான் போடுவேன் போல.. எதாச்சும் பதிவு பண்ணனும்ன்னு login பண்ணி, Draftsல தூங்குற போஸ்ட்ஸ் பல.. சிவாஜி சொல்ற மாதிரி "வயசாயிரிசிலே" ஒரு காரணம். இன்னொன்னு  நான் பிஸியா இல்லனாலும் பிஸியா இருக்குற மாதிரி காட்டிட்டு இருக்கேன். முகபுத்தகம் இருக்கறதுனால ப்ளாக் பக்கம் வரவே மாட்டேங்றாங்க நம் மக்கள் எல்லாம். ஒரு வேள ஷகீலா, ரேஷ்மா , சன்னி லியோன் இவங்களால சேலம் டாக்டர் சொல்ற மாதிரி என் சிந்திக்கும் திறன் குறைஞ்சிட்டே (ஒழுங்க படிங்க - சிந்திக்கும் திறன் மட்டும்) வருதான்னு சந்தேகம்.. புரட்டிப்பார்த்தா நெறைய சினிமா விமர்சனமா இருக்கு.. இன்னும் எழுத நெறைய படங்கள் இருந்தாலும் மசாலா படங்கள் மாதிரி எனக்கே போர்.. கடந்த ஆறு மாசங்களாக என் வாழ்க்க எப்டி போகுதுன்னு ஒரு பதிவு போடலாம்ன்னு உக்காந்தேன்.. இதுக்கு மேல நீங்க படிக்கப் போகறது எல்லாம்  டிட் -பிட்ஸ்.

___________________________________



பாதி யூத்து மாதிரி தேசிபாபா, மல்லுவூட்ஸ் இதுக்கெல்லாம்  ஆசைப்பட்டு, கம்ப்யூட்டர் வாங்கி பொறியியல் சேர்ந்த கோஸ்தி தான் நானும். ‘முதல் வருசத்துலேயே தெரிஞ்சிது இதெல்லாம் எனக்கு செட் ஆகாது’ன்னு கவுதம் பீட்டர் மேனன் பட ஹீரோ மாதிரி சொன்னா செருப்பு வரும்ன்னு.. சிலதெல்லாம் படிக்கணும்ன்னு  படிச்சேன், சிலதெல்லாம் ரொம்ப ஆர்வத்தோட படிச்சேன்.. பக்கத்துல அஞ்சலி இருக்குற நேரத்துல நெஞ்சுவலி  வர மாதிரி, நாம ஆசையா படிக்கறதுல மட்டும் மார்க்கே வராது.. (இன்னிக்கு வரைக்கும் அதான் நடக்குது ) சம்பிரதாயத்துக்கு ஒரு ஐ.டி. கம்பெனில அஞ்சு பிகர் சம்பளம்.. (ஆனா பக்கத்துக்கு சீட்ல்ல ஒரு பிகரும்  இருக்காது, இருந்தாலும் அவ நமக்குன்னு இருக்காது.. ஸ்கூல்லேயே வித  விதச்சிருப்பாங்க. கோல்-கீப்பர் இருந்தாலும் கோல் அடிப்போம்லன்னு இருக்கலாமா? )

___________________________________



மாசம் கடக்க எனக்கு புடிக்காத விஷயத்த தான் செஞ்சுட்டு இருக்கேன்னு தோணுச்சு... க்ரியடிவ்வா பண்ண வாய்ப்பு கெடைக்கலையா, இல்ல என்னால இந்த துறைல க்ரியடிவ்வா யோசிக்க முடியலையான்னு எனக்குள்ள குழப்பம்.. நமீதா மாதிரி காசு கண்ண கொஞ்ச காலத்துக்கு மறச்சிட்டு இருந்துது.. மேல படிக்கலாம்ன்னா வாய் மேலேயே போடுவேன்னு குடும்பம்.. ஆனாலும் முடில , சரி ஐ.டிலேயே  கொஞ்சம் க்ரியடிவ்வா ஒரு நெலமைக்கு போகணும், அதுல மாஸ்டர்ஸ் பண்ணனும்ன்னு தேடுனேன்.. அதே ஆட்டு மந்த போல அமெரிக்கா வந்தேன் - சில தயக்கங்கள், பல தியாகங்கள், ரொம்ப தெளிவா ..

___________________________________



ஏன் இந்தியால இல்லையானா 'இருக்கு ஆனா இல்ல'. இளங்கலைல பிடிக்காத  சிலதெல்லாம் படிச்சு வேஸ்ட் பண்ண மாதிரி இருக்க வேண்டாம்ன்னு இங்கே வந்தேன் (சர்க்கியுட் பேப்பர்க்கே  ஷாக் கொடுத்தோம்ல) எப்பவுமே மனசுல ஓடிட்டே இருக்கும், 'புடிச்சத மட்டும் செய்'ன்னு, அதுனாலே வீட்ல வேல சொன்னா செய்யமாட்டேன்.. ஆனா இங்க வந்து நெறைய கத்துக்கிட்டேன் - படிப்பாகட்டும், சமையலாகட்டும், வாழ்க்கையாகட்டும்.. கொஞ்சம் மெட்சூரிட்டி வருது.. இன்னும் நெறைய கத்துப்பேன்னு நெனைக்கிறேன்..


___________________________________



வந்த புதுசுல வசூல் ராஜா கமல்ஹாசன் நெலம தான்.. அப்டியே பாஸ் பண்ண கையோட இங்க கெளம்பி வர பசங்கல்லா 'ஆன்ங், சொல்லுங்க பாஸ், இத்தன வயசுக்கு படிக்கிறீங்க? கிரேட்'ங்ற அளவுக்கு தான் பாத்துட்டு இருந்தாங்க. இத்தனைக்கும் மூணு வருஷம் தான் வித்தியாசம்.. வழக்கம் போல சில பொண்ணுங்க 'அண்ணா'ன்னு கூப்ட 'இன்னா'ன்னு காது கேக்காத மாதிரி அவாய்ட் பண்றது நடந்துட்டே இருக்கு.. ஏன் இந்த மாதிரி தப்பான எண்ணத்தோட என் கூட பழகுறாங்கன்னு தெரில.. இப்பொல்லா தெளிவா விசாரிச்சிட்டு தான் பழகறதே.. 'கமிட் ஆனா பொண்ணு கிட்ட எப்போர்ட் போடறதும் த்ரிஷா படத்த பார்த்துட்டு பாத்ரூம்க்கு ஓடறதும் ஒண்ணு தான் - ஒரு அவுட்புட்டும் வராது '

___________________________________



இளங்கலைல ஒபி அடிக்க நல்ல நண்பர்கள் கெடச்சாங்க.. Assignment, Quiz, Project, Homeworkன்னு நாலா பக்கமும் ராடு எத்துனாலும், அத ஏத்துக்க சில அறிவு ஜீவிஸ் இருந்தாங்க.. அவங்களோட புண்ணியத்துல பொலப்ப ஓட்டிட்டு இருந்தேன்.. முன்னமே சொன்ன மாதிரி, இங்கே எல்லாமே நாமளே பண்ண, பண்ணி கத்துக்க வேண்டியதா இருக்கு.. ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும், ஊசி ஏத்துன மாதிரி பழகிறிச்சு.. வீட்ல இருக்கும் போது 10.30 மணிக்கே தூங்கிருவேன்.. (நமக்கென்ன கேர்ள்-ப்ரெண்ட்டா, கடலையா) ஆனா இங்க 3 மணிக்கு ‘தூங்காத விழிகள் ரெண்டு’ பாட்டு ஓடிட்டு இருக்கும்.. நானே ஆசைப்பட்டு எடுத்த Courses, எனக்கு புடிச்சத செய்றேன்னு இருக்கும் போது ஒரு திருப்தி, சந்தோஷம், மனநிறைவு  எக்ஸட்ரா எச்சகல..

___________________________________



மீடியா மேல இருக்குற மோகம் குறையல.. ஷார்ட் பிலிம்ஸ், வீடியோஸ்ன்னு கொஞ்சம் பண்ணேன்.. இங்க அதெல்லாம் பண்ண முடியலையேன்னு நெனைக்கும் போது கொஞ்சம் வருத்தம்.. மூளைக்குள்ள உசேன் போல்ட் மாதிரி கதைகள் வேகமா ஓடிட்டே இருக்கு.. விஸ்காம் பண்ணிருந்தா என் வாழ்க்க மாறி இருக்குமா? தெரில.. ஆனா இங்க social-media courses சிலது பண்ணிட்டு இருக்கேன்.. த்ரிஷா இல்லன்னா திவ்யா..அதுல ஒரு Course ப்ளாக் related.. இது தான் திரும்ப என்ன ப்ளாக் எழுத தூண்டிருக்கு.. Creativea யோசிக்க நெறைய விஷயங்கள்.. வழக்கம் போல மார்க் மட்டும் ங்கே ன்னு  பல்ல காட்டி சிரிக்குது .. இன்னும் சில courses பிளான்ல  இருக்கு.. பாக்கலாம் வாழ்க்க என்ன எங்க கொண்டு செல்லுதுன்னு !! அது சாணிய தூக்கி எறிஞ்சாலும், சானியா மிர்ச்சாவ நெனச்சு அரவணச்சுப்பேன் :)

மூளய தான் மூட்ட கட்டு ஃபாலோ யுவர் ஹார்ட்டு-பீட்டு ரூட்டு


வருகைக்கு நன்றி!!

சூது கவ்வும் - வெல்கம் நளன்

$
0
0

என்னிக்காச்சும் தமிழ் படம் பாக்கும் போது கெட்டவன் ஜெயிக்கணும், நல்லவன் தோக்கணும்ன்னு நெனச்சிருப்போமா? கெட்டவங்கள எல்லாம் ரசிச்சு அவங்கள தூக்கி வச்சு கொண்டாடிருக்கோமா? ஆங்கிலத்துல 'Suspension of disbelief'ன்னு சொல்வாங்க - அதாவது ஷகிலா பாவட சைஸ்ல லாஜிக் ஓட்டை இருந்தாலும், படம் பாக்கும் போது ‘இதெல்லாம் எப்டி நடக்கும், சம ஓலு’ன்னு நாம நையாண்டி நக்கல் சவுண்ட் கொடுக்காம, கைதட்டி அந்த காட்சிகள ரசிப்போம்ல? படம் முடிஞ்சு வெளிய வந்தாலும், நாம ரசிச்ச காட்சிகளெல்லாம் மைண்ட்ல ஓடிட்டே இருக்க, நம்ப ஃப்ரெண்ட்ஸ்க்குள்ள சொல்லி குதூகலிப்போம்ல? இப்டி ஒரு வரைட்டியான ஃபுல் மீல்ஸ் தான் சூது கவ்வும்.



நாளைய இயக்குநரின் முதற்பகுதில எல்லாரையும் பெரிதும் ஈர்த்தவர் நளன் குமாரசாமி. தனக்கென ஒரு ஸ்டைல உருவாக்கி, காட்சியமைப்பு மற்றும் வசனங்கள் மூலமாக ‘கதயா, அத அது கெடக்கு கழுத’ன்னு பார்வையாளர்களை வசியப்படுத்தி விடுவார். அதுவும் அவரோட Ending , ‘என்னடா அவ்ளோதானா? முடிஞ்சு போச்சா?’ன்ங்கற மாதிரி இருக்கும். அரைகுறை கடத்தற்காரன், அவனுக்கு கெடச்ச மூணு கூட்டாளிகள், கடத்த தோதுவா அமைச்சர் பையன், இவங்கள பிடிக்க போலிஸ்ஸு - இப்டி நாலே வரில கதாபாத்திரங்கள் மூலமா படத்த விறுவிறுப்பா கொண்டுபோய் இருக்காரு. இது தான் படத்துக்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட்டே. ஜவ்வு மாதிரி  Character establish பண்றேன்னு இல்லாம, ஓரிரு காட்சிகளிலே இவன் இப்டி தான்னு ஆணி அடிச்ச மாதிரி காட்டிடுறாரு - குறிப்பா சைக்கோ இன்ஸ்பெக்டர், உத்தம அமைச்சர். அதே மாதிரி பன்ச் பேசுறேன், தத்துவம் சொல்றேன்னு வசனங்கள் இல்லாம, காட்சி மூலமாவே இல்ல சின்ன ஒன்-லைனர்ன்னு அதே கன்வே பண்ணிருக்குற டெக்னிக், அசத்தல்.


நெஞ்சுற நக்குற காட்சிகள் இல்ல, (இப்போ ஃபீல் பண்ற நேரமில்ல பாஸு டைமிங் காமெடி) காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்குறேன்னு நம்பள டயர்ட் ஆக்காம, டைமிங்ஙோட அடுத்து என்ன நடக்க போகுது, இந்த கேரக்டர் என்ன டிவிஸ்ட்ன்னு interestingஆ பல இடங்களில் நம்பள திக்குமுக்காட வைக்கிறார் நளன். ஒளிப்பதிவு, பாடல், பின்னணி இசை, எடிட்டிங்ன்னு எல்லா டிப்பார்ட்மெண்டிலும் குறையே வைக்காம நல்லா வேள வாங்கிருக்காரு. பாடல்கள் படத்துக்கு ஸ்பீட்-ப்ரேக்கரா இல்லாம, மாண்டேஜ் மூலமா, அதுவும் கடசி இரண்டு பாடங்கள் யோசிச்சு பார்த்தா ‘என்னடா சம்பந்தமே இல்லாம பாட்டு’ன்னு தோணவைக்காம கதை ஓட்டத்தோடு ரசிக்கும்படியா சேர்த்துருக்காரு. பின்னணி இசை ஒரு சாதாரண காட்சிய கூட elevate பண்ணிடுது. இது நடக்கும்ன்னு சில எடங்கள்ல நாம யூசிச்சாலும் பின்னணி இசையும், கேரக்டரோட டயலாக் டெலிவரியும் ஃப்ரெஷ்ஷா காட்டுது.

மணிரத்னம் படமா? ஷட்-அப்


படத்துல மைன்ஸ்ஸே இல்லையான்னா கதன்னு பெருசா இல்ல, ரெண்டாம் பாதி கொஞ்சம் lengthன்னு அடுக்கலாம்ன்னா ப்ளஸ் எல்லாம் அனகோண்டா பாம்பு மாதிரி மைனஸ்ஸ அசால்டா முழுங்கிடுது.. சஸ்பென்ஸ், காமெடி, பேன்டசின்னு ஒரு காமிக் புக் படிச்ச ஃபீல். சிம்பிள்ளா சொல்லணும்ன்னா ஹ-க்ளாஸ் ஹாஸ்பிடல் மாதிரி‘பழக்கப்பட்ட நோய், பட் ஃப்ரெஷ் + ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்’


சூது கவ்வும் - இறுதியில் நளன்னே வெல்லும்


வருகைக்கு நன்றி!!

தீயா வேல செய்யணும் குமாரு – நீ ரொம்ப சுமாரு

$
0
0
ஆண்டவன் நமக்கு அடையார் ஆனந்த பவன் அல்வா துண்ட கொடுக்காட்டியும், அரும்பாக்கம் ஆண்ட்டி செஞ்ச அதிரசத்த ஆச்சும் கொடுப்பான், அப்டி கொடுத்த சமந்தாங்கற அதிரசத்த கொத்திட்டு போன சித்தார்த் நடிப்புல, சுந்தர் சி இயக்கத்துல, நாளைய இயக்குநர்களின் ஸ்க்ரிப்ட் உதவியோட வந்துருக்குற படம் தான் ‘தீயா வேல செய்யணும் குமாரு’


ஒரு காமெடி படம் கொடுக்கற்து ரொம்ப கஷ்டம்ன்னு 1,24,563 பேரு சொல்லிருக்காங்க, அதுல நானும் ஒருத்தன். கேஷுவலா சிவா மனசுல சக்தி, சூது கவ்வும் மாதிரி படத்தயும் தந்துருக்கு தமிழ் சினிமா, அதே நேரம் சேட்டை, கண்ணா லட்டு திங்க ஆசயான்னு கோவம் வர மாதிரி காமெடியும் பண்ணி வச்சிருக்கு. எஸ்.ஆர்.எம் காலேஜ்ல நுழஞ்சாலே சூப்பர் ஃபிகரா இருக்கும்ன்னு லாஜிக் மாதிரியே சந்தானத்த போட்டாலே காமெடி படமா இருக்கும், கல்லாவும் கட்டலாம்ன்னு மனப்பால் குடிச்சு வாந்தி எடுத்தவங்களும் இருக்காங்க. தீ.வே.செ.கு படத்துல கதன்னு பெருசா ஒண்ணுமில்ல, ஆனா சந்தானத்த எப்டி வேல வாங்குன்னா க்ளிக் ஆகும்ன்னு சுந்த்ர் சி கரெக்டா ஆடியன்ஸ் பல்ஸ்ஸ தெரிஞ்சு வச்சுருக்காரு.


சித்தார்த்துக்கு பெருசா ஸ்கோப் இல்ல, சமந்தா கூட ரெண்டு சீன்ல வந்து எங்க வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டாரு. கதப்படி இவருக்கு பொண்ணுங்கனாலே ஆகாதாம், லவ் பண்ணவும் தெரியாதாம். சந்தானம் வரவரைக்கும் ஆர்.ஜே. பாலாஜி வாய்ஸ் ஓவர் கொடுக்குறேன்னு அவரோட ட்ரேட்மார்க் கவுண்டர்ஸ் கொடுத்து நாய்ஸ்- ஓவர் ஆக்கிட்டு இருந்தாரு. எஃப்.எம்ல அவர் ஸ்பீடா பேசுறது கேக்க ஜாலியா இருந்தாலும், படத்துல பாக்கும் போது ஷகிலா ஒடம்புல போர்த்துன ட்ரெஸ் மாதிரி ஒட்டவே இல்ல. இருந்தாலும் சில இடங்களில் சிக்லிக்கா மூட்டுனாரு. படத்தோட ஆல்-ரவுண்டரே சந்தானம் என்கின்ற ரவீந்திர ஜடேஜா. ஃபார்ம் அவுட் ஆன ஃபார்முலா வச்சு புகுந்து விளையாடிருக்காரு. ‘லூஸ் மோஷன் மாதிரி பின்னாடி போகணும்ன்னு ஆசப்படாத, யூரின் மாதிரி முன்னாடி போகணும் ஆசப்படு’ன்னு நெறய பட்டாசு காமெடி கொளுத்திருக்காரு. யூ ராக்கிட்ட.





ஹன்சிகா ரொம்ப டல்சிகா, ஒரே ஒரு பாட்டுல மட்டும் பம்பர் சீட் குலுக்கல் மாதிரி எங்கள மாதிரி வாலிப இள கு..ச்ச நெஞ்சங்கள சந்தோஷப்படுத்திருக்காங்க.. மனோபாலா, டெல்லி கணேஷ் ஒரு சீன் வந்தாலும் நச்ச்.. பாட்டெல்லாம் படு மொக்கயா எடுத்துருக்காங்க, எங்கேயும் எப்போதும் சத்யாவா இது? தனியா கேக்க சுமாரா இருந்தாலும், படத்தோட ஓட்டத்துல, எரிச்சல தான் தந்துச்சு, Wrong Placement. பின்னணி இசை நன்று.


ஓசோன் ஓட்ட மாதிரி பெரிய லாஜிக் ஓட்ட இருந்தாலும் (கணேஷ் கேரக்டர், ஒலக மகா காமெடி ஐ.டி. கம்பெனி), நல்ல டைம்-பாஸ் ஃபில்க்கா கொடுத்த சுந்தர்.சிக்கும் ஸ்கிரிப்ட்ல உதவியா இருந்த ஷார்ட் ஃபிலிம் டைரக்டர்களுக்கும் ஷொட்டு. மத்தபடி தூக்கி வச்சு கொண்டாடுற லெவல் காமெடி படம் இல்ல.

தீயா வேல செய்யணும் குமாரு – சந்தானம் இல்லாட்டி டமாரு



வருகைக்கு நன்றி!!

மரியான் விமர்சனம்

$
0
0
காதலால் ஒருவன் எவ்ளோ கஷ்டத்துல போய் மாட்டிக்கிறான், பிறவு அதே காதலோட சக்தியால அவன் எப்டி போராடி மீண்டு வராங்கறத சொல்ல ரெண்டு நாளைக்கு ஓடுற படமா வந்துருக்கறது தான் மரியான்.


தனுஷ் நல்லா நடிச்சிருக்காரு, பட்டய கெளப்பிருக்காருன்னு சொல்லி போர் அடிச்சிருச்சு. ஆனாலும் நடிப்புலயும், பாடி லாங்குவேஜ்லயும் படத்துக்கு படம் அவர் காட்ற வேறுப்பாட்ட பாராட்டாம இருக்க முடில. பார்வதிய சர்ச்ல பாக்குற சீன் ஆகட்டும், காதல் வந்த ஒடனே அவ நம்பள பாப்பாளான்னு ஏங்கறதாகட்டும், நண்பன் செத்த தூக்கத்துல பார்வதிய அடிக்க பொங்கறதாகட்டும், ஃபோன்ல தன்னோட காதலையும், இயலாமையும் ஒண்ணு சேர பேசுற இடமாகட்டும், க்ளைமாக்ஸ்ல தன்னோட தெய்வமான கடல பாத்து ஆத்தான்னு கத்தறதாகட்டும், கடசி காட்சில பார்வதிய அணச்சிகிட்டு ‘அழாத, நான் வந்துட்டேன்’ன்னு வசனம் இல்லாம முகபாவங்கள்லேயே காட்ற இடமாகட்டும் – யப்பா தனுஷ்ஷூ நீ அசுரன்யா.



படத்துல இருக்குற நல்ல சீன் எல்லாம் சொல்டேனே, இதுக்கு மேல படத்துல என்ன இருக்குன்னா கண்ணுக்கு குளிர்ச்சியா பனிமலராக பார்வதி. பூ படத்துல ‘ப்ப்ப்ப்ப்ப்ப்பா’ன்னு மூஞ்சில கொஞ்ச மேக்-அப்ப காணோம்ன்னு வந்த பார்வதி, இதுல அவ்ளோ அழகு. முந்தய படத்துலேயே நடிப்புல சோட போகாதவங்க, இதுல சொல்ல வேணுமா? நாலு வருஷம் மேல காத்திருந்து தமிழ்ல ஒரு சூப்பர் ரீ-எண்ட்ரி. படத்தோட காதல் காட்சிகள் க்ளிச்சேவா இருந்தாலும், பார்வதியோட கண்ணுல பொங்குற காதல் – அப்பப்பப்பா. வலுவில்லாத காதல் காட்சிகளுக்கு தனுஷ் – பார்வதி கெமிஷ்ட்ரி ஐ.சி.யூ Patientக்கு ஆக்சிஜன் மாதிரி.   



தனுஷ் – பார்வதி அட்டகாசமான Casting இருந்தும் உமா ரியாஷ், பனிமலர் அப்பா, பொம்பள பொறுக்கி மைனர்ன்னு இதர கதாபாத்திரங்கள் செலக்ஷன்ல கோட்ட விட்டுட்டாரு பரத் பாலா. பனிமலர் அப்பாவோட டப்பிங் கொடுரம். சூடான் வில்லன் கனக்கச்சிதம், ஆனா புகுந்து விளையாட Scope இல்ல. ரஹ்மானின் இசைல பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ஹிட்டு. எனக்கு பெர்சனலா இன்னும் கொஞ்ச நேரம் லீட், அது வந்த இடம் ரொம்ப பிடிச்சிது. எங்க போன ராசா முதற் Placement மோசம். பின்னணி இசைல சுமார் சுகுமார் ரஹ்மான்.


நெஞ்சே எழுன்னு ஆரம்பிக்கும் போதே
கொஞ்ச பேரு எழுந்து போயிட்டாங்களாமே



படத்தோட மிகப்பெரிய மைனஸ் எடிட்டிங். ஏகப்பட்ட ஜம்ப்ஸ், Continuity Misses. சிறப்பா ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள், அழகான ஃப்ரெம்ஸ் கூட ரெஜிஷ்டர் ஆகல.. ரெண்டாவது, இண்ட்ரெஷ்ட் இல்லாத திரைக்கதை. மரியான்னா சாவே இல்லாதவன்னு உணர்த்த தனுஷ் சாகுற மாதிரி சந்தர்ப்பங்கள் அமைந்தாலும், அவர் எப்டி அதுல இருந்து மீண்டு வரார்ங்கறத பாமரனுக்கும் புரியுற மாதிரி காட்டிருக்கலாம், உதாரணத்துக்கு பதுங்கு குழி காட்சி. 7 டாட் பால் நடுவுல சிக்ஸர் அடிக்கிற தோனி மாதிரி, ஒரு மோசமான சீன் பேட்ட்ரன் நடுவுல நல்ல சீன் வந்து உக்கார்ந்துக்கிது. படத்தோட வலுவே பார்வதி – தனுஷ் காதல் தான். ஆனா அதுவே ஏனோதானோன்னு ஸ்டார்ங்க்கா இல்லாம இருக்கற்தால தனுஷ் படுற கஷ்டத்துக்கு நம்பளால உச்ச் கொட்ட முடில. இந்த மாதிரி படங்களுக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸே ஹீரோ கூட நாமளும் பயணிச்சு, அவன் எப்டி தப்பிக்கிறான்னு ஒரு எதிர்ப்பார்ப்போட, அவனோட சோகத்துல நாமளும் சோலோ சாங் பாடி ‘Connect’ பண்ணிக்கிற Factor தான். மரியான்ல இது சுத்தமா மிஸ் ஆயிருச்சு. சுவாரசியமா வர வேண்டிய எஸ்கேப் சீன், டேய் சிக்கிரம் ஊர் போய் சேருடான்னு பொறுமைய சோதிக்கிற மாதிரி தனுஷ் உருண்டு பொறண்டு ஓடுறாரு. கடல் ஃபைட்ல எங்க ‘கிங் ஆஃப் இந்தியன் ஓசன்’ன்னு சிங்கம் - 2 ஹை-பிட்ச்ல கத்துவாரோன்னு பயம் இருந்தாலும், மணிரத்னம் சாருக்கு ட்ரிப்யூட்டா ‘கடல்டா’ன்னு சொல்லி அடிக்கிற டச் இருக்கே, என்னை போன்ற மணி சார் ஃபேன்ஸ்க்கு சக்கர பொங்கல் மாதிரி



ஒரு க்ரியேட்டரோட வெற்றி – Mindல Conceptualize பண்ண கதய, அழகா திரைக்கதையா Visualize பண்றது தான். அங்கங்க நல்ல சீன்ஸ் வச்ச இயக்குநர், திரைக்கதைக்கும் எடிட்டிங்க்கும் கொஞ்சம் மெனக்கெட்டுருந்தா தனுஷ், பார்வதி இவங்களோட அசுர உழைப்புக்கு கெடச்ச வெற்றியா இருந்துருக்கும். படம் முடியும் போது ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன’ன்னு பாட்டு ஓட ‘டேய் இதுவரைக்கும் இருந்ததே போதும், படத்த முடிங்கடான்னு கத்தாம இருக்க முடில



மரியான் – கிழிஞ்ச ஷு – சோல்லே இல்லை


வருகைக்கு நன்றி!!
   



பட்டத்து யானை - அட்டு யானை

$
0
0

விஷால்: பாலா கூட படம் பண்ணாலும் நம்பள கவுத்துட்டாரு, சும்மா ஒரு நிமிஷம் வந்த தீயா வேல செய்யணும் குமாரு கூட ஹிட்டடிக்குது, நம்மள ஹீரோவாவே ஏத்துக்க மாட்டாங்களா?

பூபதி: யார் பாஸ் சொன்னா? விஜய்க்கு அடுத்து தமிழ் சினிமால மிகப்பெரிய மாஸ் ஹீரோவே நீங்க தான். ரஜினி, விஜய்க்கு அடுத்து நீங்க அடிச்சா தான் மக்கள் நம்புவாங்கங்றேன்…

சந்தானம்: சும்மா இருந்த சோனாவ சொறிஞ்சு வுட்டு மூடு ஏத்துறானே?

விஷால்: அப்போ நாம படம் பண்ணலாம் பூபதி. எனக்காக மாஸா ஒரு கத வச்சிருக்கீங்களா?

பூபதி: இருக்கே, படத்த ஒப்பன் பண்ணா நீங்க ஒரு ஊருல இருந்து இன்னோரு ஊருக்கு வரீங்க..

சந்தானம்: அத தானேடா எல்லா படத்துலயும் இவன் பண்ணிட்டு இருக்கான்? நேர்மையான கவர்மென்ட் ஆப்பிசர்க்கு அடுத்து ஊருக்கு ஊர் போறற்து விஷால் மட்டும் தான்..

பூபதி: போன படத்துல எல்லாம் மதுரைல இருந்து சென்னை, பட்டுக்கோட்டைல இருந்து திருச்சின்னு தானே போனாரு. இப்போ மதுரைல இருந்து திருச்சிக்கு வராரு விஷால்

சந்தானம்: ஏன், பஸ் மாறி ஏறிட்டாரா? 

விஷால்: ஆரம்பமே அசத்தலா இருக்கு, மேல சொல்லுங்க..

பூபதி: வரும் போது தனியா வரல, ஃப்ரெண்ட்ஸோட வரீங்க

சந்தானம்: இது சண்டைக்கோழில வரல?

பூபதி: நல்லா காமெடி பண்றீங்களே பாஸ், பேசாம இவரயும் படத்துக்கு சேத்துக்கலாம், விஷால் சார், நீங்களும் உங்க ஃப்ரெண்ட்ஸ்ஸூம் சந்தானத்த பாக்க வரீங்க, அப்டியே ஒரு 40 மினிட்ஸ் காமெடி ட்ராக்

சந்தானம்: வாண்டட்டா மண்டைய கொடுத்து மொட்ட போட்டுக்கிட்டேனோ? நான் நல்லா காமெடி பண்றேனோ இல்லையோ நீங்க பண்றீங்கடா..

விஷால்: காமெடி படம் வேணாம் பூபதி, நடுவுல மத்தவன் பொண்டாட்டி மேல ஆச படுற வில்லன், ஏஞ்சலுக்கு தாவணி கட்டி விட்ட மாதிரி ஹீரோயின்னு மிக்ஸ் பண்ணுங்க..

பூபதி: பேஸா பண்ணிடுவோம்..

சந்தானம்: டேய், அவன் என்ன கல்யாண சமையலுக்கு உன்ன காண்ட்ராக்டரா எடுக்க வந்துருக்கான், பேஸா பண்ணுவோம், பாஸ்டா பண்ணுவோம்ன்னு

பூபதி: சூப்பர் சார், நீங்க கல்யாண காண்ட்ராக்டர், இவங்க உங்க அசிட்டண்ட்ஸ், ஊருல இருக்குற ஸ்கூல் படிக்கிற பொண்ண பாத்த உடனே காதல், அவ மேல வில்லனுக்கும் காதல்

சந்தானம்: இது தான் மலைக்கோட்டைல பாத்தோமே?

பூபதி: சரி, அப்போ வில்லன் தம்பிக்கு காதல்

சந்தானம்: டேய் டால்டா, அதுவும் மலைக்கோட்டை தான்டா..

பூபதி: சரி, அப்போ வில்லன் இருக்கான், அவன் அண்ணன் ஒரு காமெடி பீஸ், இந்த காமெடியனோட தம்பி காதலிக்கிறான், எப்படி இப்போ ட்ப்பரண்டா இருக்கா?

சந்தானம்: ஊரே பேசுற மாதிரி கத இருக்கு சார்ன்னு சொல்றவங்க மத்தில பேசுறத வச்சே கத எழுதுறவன இப்போ தான்டா பாக்குறேன், சரி எனக்கே போர் அடிக்குது, இண்டர்வல் விடு


அடுத்த படத்துல கட்ட விரல்லயே வில்லன நசுக்குறீங்க - கட்டத்து யானைன்னு

பூபதி: உடஞ்ச ப்ரிட்ஜ்ல சண்ட

சந்தானம்: அந்த ப்ரிட்ஜ்ஜ ஒடச்சதே விஷால் தானே?

பூபதி: ஒரு 20 பேர பொறட்டி எடுக்குறீங்க.

விஷால்: 20 வேணாம்ன்னே, ஒரு 30?

சந்தானம்: இவன் ஆயா மாதிரி கத சொன்னா, அவன் பாயா மாதிரி அதுக்கு மேல கேக்குறானே.. பரோட்டா மாஸ்டரா போக வேண்டியவன், அநேகமா இந்த படம் எடுத்து ரீலிஸ் பண்ண அப்றோம் அங்க தான் போவான் போல

பூபதி: அவங்கள அடிச்சிட்டு நீங்க ஏன் திருச்சிக்கு வந்தீங்கன்னு சொல்றீங்க?

விஷால்: ஏன்?

சந்தானம்: திருச்சி வரைக்கும் தான் காசு இருந்திச்சாம், கேக்குறான் பாரு.. மதுரைல ஏதாச்சும் இன்னொரு வில்லன அடிச்சிருப்ப

பூபதி: இல்ல, அங்க தான் ட்விஸ்ட்டு, இவர் மதுரல அடிச்சிட்டு வரல, கொலயே பண்ணிட்டு வந்துருக்காரு.. அதுவும் மதுர தெருவுல ஒண்ணுக்கு மூணா அவ்வொருத்தனயும் ஓட வுட்டு கொல பண்ணாரு. அதுக்கு காரணம்…

சந்தானம்: வேணாண்டா போதும், இதுக்கே என் பிஞ்சு மனசு குலுங்குதுடா

பூபதி: ஆமான் சார், ஒரு பிஞ்சு பாப்பாவ கொல பண்ணிடுறாங்க..

சந்தானம்: இதயெல்லாம் நாங்க பாட்ஷாலேயே பாத்துட்டோமேடா..

பூபதி: அது பாம்பே, இது திருச்சி

சந்தானம்: டேய் என்ன தான் டூ-பீஸ்ல இருந்து தாவணி கட்டுனாலும் நயன்தாரா நயன்தாரா தான்டா திருட்டு மூதேவி… சரி, அந்த செத்து போன மூணு பசங்கள்ல ஒருத்தனொட அப்பன் தானே இன்னொரு வில்லன்?

பூபதி: ஆமா சார், எப்டி கரெக்டா ட்விஸ்ட்க்கு ட்விஸ்ட்ட கண்டுபிடிச்சீங்க?

சந்தானம்: இந்த இத்து போன கதய சொல்ல நீ எடுக்குடா? முந்தாநாள் பொறந்த குழந்த கூட இவனோட முன்னாடி படத்த சொல்லுமேடா…

விஷால்: சார், கத சூப்பர்.. ப்ரொடியூசர் எப்பவோ ரெடி, ஒடனே சூட்டிங் ஆரம்பிச்சிடுறோம்..

சந்தானம்: டேய் டேய், செகண்ட்-ஆப் கேக்கலையாடா?

விஷால்: வழக்கம் போல அந்த பொண்ண காப்பாத்தி, இவங்கள அடிச்சு பொளக்க போறேன், எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா?

சந்தானம்: டேய் செல்லக்குட்டி, அது அப்டி இல்ல.. எவ்ளோ வாட்டி பண்ணிட்டோம், இந்த வாட்டியும் பண்ண மாட்டோமா?

தமிழ்சினிமால ரெண்டு ஹீரோங்க இருக்காங்க.. அவங்களுக்கு ரசிகர்களே இல்லனாலும், நமக்குன்னு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு, அவங்க இது மாதிரி பண்ண சொல்லி கேக்குறாங்க, அவங்களுக்கு புடிச்ச மாதிரி பண்றேன்னு தொழில் சுத்தமா தமிழ் சினிமால இருக்கற்து - பவர் ஸ்டார் அண்ட் விஷால்.. வழக்கம் போல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு விஷால் செலுத்தும் மற்றுமொரு காணிக்கை


பட்டத்து யானை – ஒடஞ்சி போன பானை


வருகைக்கு நன்றி

ராஜா ராணி - த்ரிஷா இல்லன்னா திவ்யா

$
0
0
ரொமான்ஸ் படம் எடுப்பது கத்தி மேல் நடக்குற மாதிரி, நமிதா உடம்புல இருக்குற புடவ மாதிரி - ரொம்ப ரிஸ்க்கு, எப்ப ச்லிப் ஆகும்ன்னே சொல்ல முடியாது. ஆக்‌ஷன் படம்ன்னா நம்பளால பண்ண முடியாதத ஹீரோ பண்ணும் போது பாத்து சிலிர்த்துக்கும் - ஆங்கிலத்துல (கக்)கூஸ்பம்புன்னு சொல்வாங்க. ஆனா லவ் படம்ன்னா நாம பண்ணத, நம்ப லைஃப்ல நடந்தத திரும்ப திரைல பாக்கும் போது சிலிர்த்துக்குமே - நல்ல லவ் படம் எடுக்குற டைரக்டர் எல்லாம் ரசனக்காரன்யா.. லவ் படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸே இசையும், காஸ்டிங்க்கும். ஏற்கனவே பாத்து பழக்கப்பட்ட கிளிச்சே காட்சிகள்னாலும், பிண்ணனி இசையும், ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரியும் ஒரு ஃப்ரெஷ்னஸ்ஸ கொண்டு வந்துடும். அப்டி சன் டி.வி காதல் செவ்வாய்ல இருந்து ரிதம், சூப்பர்ஹிட் வெள்ளில இருந்து மெளனராகம்ன்னு மிக்ஸ் பண்ணிருக்குற கலர்ஃபுல் காக்டெயில் தான் ராஜா ராணி.


ட்ரைலர்லேயே கதய ஓப்பனா சொல்லிட்டாங்க, லைஃப் ஆஃப்டர் லவ்ன்னு. ரெண்டு ட்ராக்ல எது என்ன ரொம்ப கவர்ந்துச்சுன்னா ஆர்யா - நஷ்ரியா ரொமான்ஸ் தான். சினிமாத்தனமான காதல் இருந்தாலும், அத Present பண்ண விதம் அருமை. கூட சந்தானத்தின் கூட்டணி, டைமிங்ல ரெண்டாம் பாதிய Audi கார்ல போற மாதிரி smooth and enjoyable ride. ஜெய் - நயந்தாரா matureda இருந்தாலும், ஜெய் அவரோட காரெக்டர்ர ஓவர்-டூ பண்ண மாதிரி ஃபீல். எங்கேயும் எப்போதும்ல இருந்த அந்த Innocence இதுல மிஸ்ஸிங். ஒரு வேள ரொம்ப எதிர்பார்த்ததால Disappoint ஆயிட்டேனோ? ஆர்யா முதற்பாதியில் பல இடங்களில் வழக்கம் போல ங்ங்ங்கேகேன்னு முழித்தபடி இருக்க, நயந்தாராவும் சத்யராஜ்ஜூம் செமயா ஸ்கோர் செஞ்சிருக்காங்க. இந்த மாதிரி படத்துல பொதுவா ஹீரோ-அப்பா இல்லாட்டி ஹீரோ-அம்மா அவங்களோட அன்ப மட்டுமே தூக்கி நிறுத்துற காட்சிகள் இருக்கும். இதுல ஒரு பொண்ணுக்கும் அப்பாக்கும் இருக்குற பாசத்த செயற்கைத்தனம் இல்லாம, நிறைவா தந்துருக்காரு அட்லீ. சத்யராஜ்ஜூம் ப்பா, மகளே, உன்னோட, சந்தோஷம்ன்னு யோகா செஞ்சிட்டே டயலாக் சொல்லாம நடிச்சிருக்கற்து ஆறுதல். ஜெய் அமெரிக்கா போயிட்டான்னு நயந்தாரா கலங்க ஆரம்பிக்குற எடத்துல சத்யராஜ்ஜூம் Syncல குலுங்கும் இடம் - Vintage. நயந்தாராவ இத்தன நாள் தமிழ் சினிமா என் மிஸ் பண்ணுச்சுன்னு அளவுக்கு Performance. ஜெய்யோடு இருக்கும் போது நக்கல், அடாவடி; ஆர்யாவோரு இருக்கும் போது சின்ன சந்தோஷம், ஏக்கம்ன்னு ரகளையா நடிச்சிருக்காங்க. என்ன க்ளிசரின் போட்டு அழும் போது கண்மையோட சேர்ந்து கருப்பு கலர்ல வர கண்ணீர் தான் ஒரே மைனஸ். அடுத்த குறும்புக்கார ஹீரோயின்னா கூப்டுங்க நஷ்ரியாவன்னு செம லைவ்லி கேரக்டர். சில லவ் சினிமாஸ்ல இருக்குற பெரிய மைனஸ் குறும்புக்கார ஹீரோயின்ன காட்டுறேன்னு அர லூசு கேரக்டர், இல்லன்னா சைக்கோ கேரக்டர்ன்னு Portray பண்ணிடுவாங்க. அப்டி இல்லாம நமக்கு புடிச்ச பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி சூப்பரோ சூப்பர். Brotherன்னு சொன்னாலும் நம்பள பொண்ணுங்க லவ் பண்ணுவாங்கன்னு ஒரு நம்பிக்கை ஊட்டும் டானிக் கேரக்டர்.


இந்த நாலு ஹீரோ - ஹீரோயின் செலக்‌ஷன்லேயே சிக்கர் தவான் மாதிரி ஒரு Dream Debutல ஹாஃப்-சென்சூரி அடிச்சிட்டாரு அட்லீ. இதுக்கு கூட பார்ட்னர்-ஷிப் போட்டு அட்லீய வழிநடத்திருக்காரு இசையமைப்பாளர் ஜீ.வி.ப்ரகாஷ்குமார். கல்யாண மூட்ல இருந்தாரோ என்னவோ, பிண்ணனி இசைல கட்டி போட்டுடுறாரு. அவர் இல்லாம கண்டிப்பா இந்த படம் Incompleteஆ இருந்துருக்குன்னு என் ஃபீல். சில காட்சிகளில் வவுத்துக்குள்ள லவ் பேர்ஸ்ட்டே பறக்க விட்டுடுறாரு.  ஓடே ஓடே பாடல் படமாக்கிய விதம் அருமை. கலர்ஃபுல் விஷுவல்ஸ் மூலம் போர் அடிக்காமல் நம்பள ஆக்ரமிச்சிடுறாரு ஒளிப்பதிவாளர், Well Done. வசனங்கள் பஞ்ச் பேசுறேன்னு லவ்வர்ஸ், பெண்கள தாக்கி இல்லாம யதார்த்தமா அமைஞ்சதும் சூப்பர்.

உங்கள எப்டிங்க கரெக்ட் பண்ற்து?


படத்துல மைனஸ்ன்னா சிறப்பா வந்துருக்க வேண்டிய இடங்கள் எல்லாம் ஒரே ஷார்ட்-ஃப்லிம் ஃபீல். ரெண்டு லவ் ட்ராக்கும் நல்லா பண்ணிருந்தாலும், End of the Dayல படம் பாத்துட்டு வரும் போது கொடுக்க வேண்டிய இம்பாக்ட்ட தரல. பஸ் பயணத்துல பாக்குற எதிர்த்த சீட்டு ஃபிகர் மாதிரி அந்த ஒரு மணி நேரம் மட்டும் ரசிக்குற மாதிரி இருந்துச்சு. ஆர்யாவும் நயந்தாராவும் அவங்களுக்குள்ள வர அந்த லவ்வ இன்னும் விரிவா காட்டிருக்கலாம், ஏனா படத்தோட உயிர்நாடியே அதான். மெளனராகம் படத்தோட வெற்றியே அங்கே தான்; வெறும் கார்த்திக் - ரேவதி காதல மட்டும் மையப்படுத்தாம மோகன் - ரேவதி எப்டி அவங்க அன்ப உணர்ராங்கன்னும் ரெண்டு Dimensionயும் சிறப்பா காட்டிருப்பாங்க. இதுல ஃப்ளாஸ்பேக்கே ரொம்ப நேரம் செலவிட்டதால, ரொம்ப அரக்க பறக்க படத்த முடிச்ச ஃபீல். அதுவும் ஏர்போர்ட் க்ளைமாக்ஸ் எல்லாம் த்ராபை.


எல்லா லவ் படமும் ஃபீல்-குட் படமா இருக்கற்தில்ல, அதுல கேரக்டர்ஸ் வாழ்ந்து காட்டணும். கொஞ்சம் கூட ஆபாசம், விரசம் இல்லாத குடும்பத்தோட ரசிக்குற படம். பட் என்ன தான் ஃபுல் மீல்ஸ் சாப்டாலும் ஒரு ‘ஏதோ குறையுதே’ன்னு தோணும்ல, அதே தான் இந்த படத்துலயும். எப்டி விண்ணைத்தாண்டி வருவாயா பாத்து தமிழ்நாட்டு தேவதாசுகள் யேசுதாஸ்ஸா மாறி ‘காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்’னு உணர்ச்சிவசப்பட்டு ஹிட் ஆக்குனாங்களோ, அதே மாதிரி இப்போ லவ் ஃபெயிலர் ஆகி கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழ்ற பாக்யராஜ்களுக்கும், சேரன்களுக்கும் ஏத்த படம். 


ராஜா சுமாரு, ராணி பேஜாரு

வருகைக்கு நன்றி

ஆரம்பம் - ரம் பம் ரம்பம்

$
0
0
முன்னாடியே சொன்ன மாதிரி ஒரு சுமாரான கமர்ஷியல் படம் கூட மூணு - நாலு நாடி நரம்பெல்லாம் முறுக்கேற வைக்குற சீன்ஸ் இருந்தாலே படம் எனக்கு புடிச்சிரும். துப்பாக்கில அதே 1445வது தங்கச்சிய தூக்கிட்டு போன வில்லன் கேங்க போடுற அதே 1445வது அண்ணன் சீன் தான். ஆனா அந்த சீனோட Lead, அதோட Execution, அதுக்கு அப்றோம் வர follow throughன்னு மூணு செக்மண்ட்டையும் கோர்வையா Construct பண்ணிருப்பாரு முருகதாஸ் - கூடவே தூக்கி நிருத்துற பிண்ணனி இசை. சிங்கம் முதற்பாதில மயில்வாகனம் - துரைசிங்கம் முதற்முதலா சந்திக்கிற சீன் கூட சொல்லலாம். அஜித்தின் ஆரம்பத்துல அதே மாதிரி ரெண்டு காட்சிகள் பெருசா வந்துருக்கலாம் - ஆனா ஈர்க்காத காட்சி அமைப்பு, கோவத்த கெளப்புற பிண்ணனி இசை அந்த காட்சிகள Least Impressiveஆக ஆக்கிடிச்ச்சு. கண்ணாடியை கழட்ட வச்ச மினிஸ்டர் பொண்ண, கொஞ்ச நேரத்துல Gun Pointல நிக்க வச்சு கண்ணாடிய திரும்ப மாட்ற சீன் ஹீரோயிசத்தின் உச்சகட்டம் (படையப்பா அப்றோம்). வாய் வரைக்கும் வந்த விசில் காத்து, அங்கே நம்ப யுவன் போட்ட கொடுரமான பிண்ணனி இசையாலும், அதுக்கு அப்றோம் வந்த சுமாரான சேசிங் சீன்னாலயும் பின்னாடியே போயிருச்சு. அதே மாதிரி தல கைய்ய புடிச்ச ஒடனே உட்ற லுக்கு. அங்கேயும் பம்பு செட்டுல ரேப்பு பண்ண மாதிரி ஒரு இசை.


பேரு தான் ஆரம்பம், ஆனா முத இருபது நிமிசம் எப்படா ஆரம்பிப்பீங்கன்னு இருந்துச்சி. அதுக்கப்றோம் வந்த முதற்பாதி காட்சிகள் கொஞ்சம் விறுவிறு வீரேந்திர சேவாக்கு, கொஞ்சம் 35-45 ஓவர்ல ஆடுற மந்தமான தோனி மாதிரி போனாலும், பெரிய குறை இல்லை. அதுக்கு அப்றோம் வர உயிரோட்டம் இல்லாத மயிராட்டாம் ஃப்ளாஸ்பேக், கதையின் உயிர்நாடியான புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட் மாதிரி பெரிய லாஜிக் ஓட்டைகளால களையிழந்து போகுது. போலீஸ் கிட்ட இருந்து தப்பிச்சு ஒடனே துபாய் போகறதெல்லாம் காதுல ராட்டினத்தயே சுத்துற மாதிரி. குறிப்பா கடசி அரை மணி நேரம் திராபை. கந்தசாமி பேங்க் ட்ரான்ஸ்ஃபர், தளபதி ஃப்ரெண்ட் சாங்கு, இந்தியன் தாத்தா லெக்சர்ன்னு நாசுக்கா விஷ்ணுவர்த்ன் உருவிருக்குற சீன்ஸ் இன்னும் நல்லா பண்ணிருக்கலாம் ரானா - அஜித் நட்புல இன்னும் கொஞ்சம் அழுத்தம் காமிச்சிருக்கலாம். இப்டி நெறய குறைகள் இருந்தாலும், அஜித் மங்காத்தா அப்றோம் கொஞ்சம் Interest காட்டி நடிச்சிருக்காரு, But மங்காத்தால இருந்த் அந்த Unpredictable Anti-hero இதுல மிஸ்ஸிங். தனி ஆளா கஷ்டப்பட்டு இந்த் படத்த தூக்கி நிறுத்த முயற்சி பண்ணிருக்காரு. நயந்தாரா, கிஷோர் தவிர்த்து மத்த காஸ்டிங் சொல்லிக்கிற மாதிரி இல்ல. ஆர்யா இன்னும் Improve பண்ணனும். 

’லிஃப்ட்’க்கு நன்றி விஷ்ணு

பயத்துக்கே பயம் காட்டுற படங்களா விஜய் தந்த நேரத்துல எப்டி சுமார் மூஞ்சி குமாரு மாதிரி வேலாயுதம் வந்து குஷிபடுத்துச்சோ, அது மாதிரி பில்லா - 2 அப்றோம் ஆரம்பம். என்ன வேலாயுதம் கொஞ்சம் லோ மேக்கிங். இதுல கொஞ்சம் ஸ்டைலிஷ் அண்ட் சூப்பரா இங்கிலிஷ் பேசுற கேப்டன் விஜயகாந்த்தாக நம்ப தல. ஆனா ஒண்ணு, இந்த ஸ்க்ரிப்ட வச்சு விஷ்ணுவர்தன் நல்லா பண்ணிருக்கலாம். ஆனா அவரோட வலுவில்லாத திரைக்கதை, கைவிட்ட யுவனின் பிண்ணனி இசை, பவர் கம்மியான பவர்ஸ்டார் வசனங்கள் (அதுவும் செகண்ட் ஹாஃப்ல ஆனா ஊன்னா சாவு சாவுன்னு தல பேசுறது) Strictly one time watch மூவி தான்.


ஆரம்பம் - அஜித் ஃபேன்ஸ்க்கு மட்டுமே இன்பம்


வருகைக்கு நன்றி

கார்த்தியும், நாலஞ்சு பெண்களும் : பகுதி-2

$
0
0
பகுதி ஒன்று படிக்க, சொடுக்குங்கள் இங்கே - பகுதி-1


ஆர்த்தியும், ஆனந்தும் பிசிக்ஸ் லேப்ல கெமிஸ்டரி வர்க்-அவுட் செய்து கொண்டிருக்க, மேரி-க்யுரி பூஜையில் ஐன்ஸ்டீன் நுழைந்த கதையா கார்த்திக் தெரியாமல் உள்ளே நுழைகிறான்..



கார்த்திக்: மச்சி.. ஸ்பெக்ட்ரோமீட்டர் Experiment Reading 1 ரூபா தலையன் கேக்குறான்டா.. எப்டி திருப்புனாலும் கலரே தெரிய மாட்டேங்குது..

ஆனந்த்: PRISM வச்சியாடா?

கார்த்திக்: டேய்.. கலாய்க்றியா? காலேஜ்லயும் எல்லாமே மொக்கையா இருக்காங்க.. இங்கேயும் கலர் இல்ல.. Spectrometerலயும் கலர் இல்ல.. ஹிஹிஹி..

ஆர்த்தியின் காதில் அது விழ, அவள் அவனை முறைக்கிறாள்..

கார்த்திக் ஆனந்தின் Record பார்த்து Copy அடிக்க, அவர்கள் கடலை தொடர்கிறார்கள்..

ஆனந்த்: ஹே.. நாளைக்கு அப்போ சர்ச்க்கு போவியா?

ஆர்த்தி: Ofcourse man.

கார்த்திக்: நீங்க christian?

ஆர்த்தி: ஆமா..

கார்த்திக்: ஆர்த்தின்னு பேர் இருக்கு..

ஆர்த்தி: அப்பா Christian அம்மா Hindu.. லவ் Marriage.. So, எம்மதமும் சம்மதம்..

கார்த்திக்: அப்போ உங்ககிட்ட கலர் கலரா நெறைய Scandals இருக்கும்ல?

ஆர்த்தி: பொறிக்கி.. Mind Your words. Anand, Is he your friend? Shit. Cheapa பேசுறான் பாரு..

அவள் அங்கிருந்து நகர்கிறாள்..

ஆனந்த்: டேய்.. லூஸ் கூ*.. ஏன்டா இப்டி இருக்க.. ஒரு பொண்ணு கிட்ட இப்டியா பேசுவ? உன்னால என்ன தப்ப நினைச்சிக்க போறா .

கார்த்திக்: மச்சி.. சாரிடா..  Christianல.. நெறைய Candles வச்சிருப்பாங்க.. அத தாண்டா கேக்க வந்தேன்.. நாக்கு சிலிப் ஆகி வார்த்தை Scandala மாறிடிச்சு..

ஆனந்த்: போடா பு**

அப்போது ஆர்த்தி அவள் நோட்டை எடுக்க வர, அதை கவனிக்காத கார்த்திக்

கார்த்திக்: மச்சி.. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத.. Spectrometerla கலர் பிடிக்க தெரிஞ்ச உனக்கு Lifela நல்ல கலரா பிடிக்க தெரியலையே..

திரும்பி பார்த்தால் ஆர்த்தி..

ஆர்த்தி: நீ என்ன பெரிய மன்மதனா? உன் மூஞ்ச பாரு.. ஆனந்த், This guy is disgusting, Lets go!

கார்த்திக்:  கல(ர்)வரம் கல(ர்)வரம்ன்னு இதுனால தான் சொல்றாங்களா? கர்த்தரே...



**********************

கார்த்தி தன்னோட நோக்கியா 1110 போன்ல விளையாடி கொண்டிருக்க..

மச்சி என்னடா புது ஃபோன்?

கார்த்திக்: இல்லடா.. பழசு தான்.. எங்க அப்பா புது ஃபோன் வாங்கி, அவரோட பழச எனக்கு தந்துட்டாரு..

திலிப்: ஹிஹி.. நல்ல அப்பாடா.. மச்சி, புது ஃபோன் கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ...

கார்த்திக்: ஃபோன் திருடிடுவாங்கன்னா? நான் Socksகுள்ள ஒளிச்சு வச்சிக்குவேன் மச்சி..

திலிப்: டேய்.. கருமாந்தரம் புடிச்சவனே.. காலேஜ் ஸ்டார்டிங் டைம்ல.. அவன் அவனுக்கு மனசுக்குள்ள பட்டாம்பூச்சி, க்ரஷ் எல்லாம் இப்போ தான் ஸ்டார்ட் ஆகும்.. இந்த பொண்ண புடிச்சிருக்கு, அந்த பொண்ண புடிச்சிருக்கு, அவ நம்பர் வாங்கணும்ன்னு உளறி தொலைக்காத..

கார்த்திக்: ஏன்டா அவகிட்ட போய் போட்டு கொடுப்பாங்களா?

திலிப்: அத செஞ்சாலும் பரவால.. இவனுங்க புதுசா சிம் கார்ட் வாங்கி, அந்த பொண்ணு பேருல மெசேஜ் பண்றாங்க...போன வாரம் கிருத்திக்காா பேருல்ல பண்ணாங்க, எனக்கு அவ மேல ஒரு இது இருக்குன்னு தெரிஞ்சு.. நானும் அவ தான்னு நினச்சு ஏமாந்துட்டேன்டா.. கடசில கிளாஸ்ல வந்து நான் தான் இதெல்லாம் பண்ணோம்னு அந்த ஜகா கேங் சொல்லிச்சு... செம கடி ஆகிட்டேன்.. உஷாரா இருந்துக்கோ..


அடுத்த நாள் இரவு - நேரம் இரவு 9.15..

கார்த்தி வழக்கம் போல அந்த ஒண்ணுத்துக்கும் உதவாத ஃபோன்ல விளையாடி கொண்டிருக்க..

பீப் பீப்..

1 மெசேஜ் Received

Hi..

Who is this? 

Kiruthika

கார்த்திக்: ஆகா.. வலைய விரிக்குறாங்க.. சிக்குன்னா சேதாரமே இல்லாம சின்னாபின்னம் ஆக்கிடுவாங்க...

ஹாய் டார்லிங்..

டார்லிங்கா?

கார்த்திக்: ஆமா.. என்ன அழகு எத்தனை அழகு.. நீங்க ரொம்ப சுமார் ஃபிகரா இருக்கீங்க..

லூசா நீ? மெசேஜ் தப்பா அனுப்புறியா? Are you trying to flirt?

கார்த்திக்: கோபப்படாதே.. முனிம்மா கோபப்படாதே..

த்தூ.. நீ லவ் Failure கேஸ் eh? அதான் உளறிட்டு இருக்க..

கார்த்திக்: ஆமா.. இவளுக்கு லவ் அப்டியே சக்சஸ் ஆகி தாஜ்மஹால் பக்கத்துல பில்டிங் கட்டி, சென்னைல நினைவு சிலை வச்சிருக்காங்க.. ச்சீ.. பே..

Wow.. Thats a joke.. LMAO..

கார்த்திக்: இஞ்சினியர் பொண்ணுங்க என்றாலே இஞ்சினியர் பொண்ணுங்க தான்.. மொக்க ஜோக் அடிச்சா சிரிக்கிடுங்க.. சுயமா யோசிச்சு நல்ல ஜோக் சொன்னா ரியாக்‌ஷன் கொடுக்கவே மாட்டேங்கிடுங்க..

போடா லூசு..

கார்த்திக்: ஆமா.. உன் மேல் நான் லூசா இருக்கேன்.. காதல் பைத்தியம்.. லூசு பெண்ணே.. லூசு பெண்ணே...

செருப்பு.. போடா கீழ்பாக், டுமாகோலி..

கார்த்திக்: திட்டு செல்லம் ஆச தீர திட்டு

போடா பிச்ச..

கார்த்திக்: ஆமாம்.. உன்னிடம் காதல் யாசிக்க வந்த நான் ஒரு பிச்சைகாரன் தான்..

 டேய்.. நா காலேஜ்ல கம்ப்ளைன் பண்ணுவேன்..

கார்த்திக்: நான் இன்னிக்கு நைட் காம்ப்ளான் பண்ணுவேன்.. வா செல்லம் ரெண்டு பெரும் குடிக்கலாம்..

த்தூ.. இப்போ போறியா இல்ல குச்சி எடுக்கவா?

கார்த்திக்: குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்.. ஹே ஹே

வேற

கார்த்திக்: வேற சாங் வேணுமா? உன்னை ஒன்று கேப்பேன் உண்மை சொல்ல வேண்டும்..

ஒரு பொண்ணு கிட்ட இப்டி கேவலமா நடந்துக்குற.. உனக்கு வெக்கமா இல்ல?

கார்த்திக்: இல்லையே.. என நீ பொண்ணே இல்லையே.. ஹி ஹி.. ஏன்டா / என்டீ இந்த பொழப்பு? வெக்கமே இல்லையா? ஒருத்தன் அழகா இருந்தா போதுமே.. ஒடனே பல் இளிச்சிட்டு மெசேஜ் பண்ண ஆரம்பிசிடுவீங்களே.. என்ன மாதிரி அழகான ஆண்களுக்கு பாதுகாப்பே இல்ல..

Will you please stop this nonsense? சத்யமா Nil Balance இருக்கு.. இல்லைன்னா போன் பண்ணி நாக்க புடுங்குற மாதிரி கேப்பேன் உன்ன..

கார்த்திக்: எப்ப எவன் கிடைப்பான் அலைறது.. ஆமா இவங்க அப்டியே புடிங்கிட்டாலும்... You cant pluck anything.. நாக்கையும் என்............ சரி விடு, அத என் வாயால சொல்லிக்கிட்டு..

Fuck off.. இதுக்கு மேல உங்கிட்ட பேசுனா செருப்பாலையே அடி என்ன..

கார்த்திக்: நாலு இங்கிலீஷ் படம் பார்த்து Fuck Offன்னு.. அடச்சீ.. பே... போய் மும்பைல ஆபரேஷன் பண்ணிக்கோ..



அடுத்த நாள், கார்த்தியை கிருத்திக்கா அடிக்கடி மொறைத்து கொண்டே பார்க்கிறாள்..

திலிப்: மச்சி.. என்னடா இப்டி பண்ணிட்ட?

கார்த்திக்: என்னடா?

திலிப்: கிருத்திக்கா..

கார்த்திக்: ஹஹாஹ்..முந்தாநேத்து நீ சொன்ன மாதிரியே பசங்க விளையாடுனாங்க மச்சி.. நார கலாய் கலாசிட்டேன்.. இனிமே போன் தொடவே அலறுவாங்க..

திலிப்: டேய்..

கார்த்திக்: என்னடா?

திலிப்: நேத்து உனக்கு மேசேஜ் பண்ணது கிருத்திக்கா தான்டா..

டமார்.. டமார்

கார்த்திக்: டேய்.. இது எப்போ?

திலிப்: நேத்து வர்க்‌ஷாப் லேப் Readings நீ தானே எடுத்த.. அத உன்கிட்ட இருந்து வாங்கிக்க உனக்கு மெசேஜ் பண்ணாடா.. பஸ்ல என்கிட்டே தான் நம்பர் வாங்குனா.. என் நம்பர் கூட கேக்கல மச்சி..


கார்த்திக்: இத ஏன்டா என்கிட்டே நேத்தே சொல்லல?

திலிப்: போன்ல சார்ஜ் இல்லடா..  காலைல கிருத்திக்கா வந்து என்ன கேவலமா பேசிட்டா.. இது தான் அவன் நம்பரா? இத தான் என்கிட்டே கொடுத்தியா? அவனெல்லாம் ஒரு மனுஷனா, நீ இதுல அவன் ஃப்ரெண்டு வேறன்னு..

கார்த்திக்: வளக்காப்புக்கு வர சொன்னா, குழந்த காது குத்துக்கு வந்தவன் மாதிரி சொல்றியேடா..

திலிப்: பாவம்டா நீ.. உன் நிலைமை எதிரிக்கு கூட வரக்கூடாது..

கார்த்திக்: உன்ன மாதிரி ஃப்ரெண்ட்ஸ் இல்லன்னா கண்டிப்பா வராது மச்சி.. நோக்கியா Connecting Peopleன்னு தப்பா வச்சிட்டாங்க போல.. எங்கப்பன அடிக்கணும்...





அசிகங்கள் முடிந்தது...


வருகைக்கு நன்றி!!

வீரம் - என்னத் த(ல) சொல்லுறது

$
0
0
விஜய் வேஷ்டி கட்டுனா எப்டி இருக்கும்? கோரமா இருக்கும். அதுவே அஜித் வேஷ்டி கட்டுனா எப்டி இருக்கும்? வீரமா இருக்கும். எத்தன பேர் வேஷ்டி கட்டுறான்னு முக்கியமில்ல எவன் வேஷ்டி கட்டுறான் தான் முக்கியம் என வழக்கம் போல அஜித் ரசிகர்கள் பல்லி முட்டைய டைனோசர் முட்டயாக தூக்கிவைச்சு கொண்டாடும் படம் தான் வீரம்.

தனது 41 படங்களில் விஜய் பேண்ட்-சட்ட போட்டு நடிச்ச அதே கதய தான் அஜித் ராம்ராஜ் வேஷ்டி-சட்ட போட்டு நடிச்சிருக்காரு. ஊருக்குள்ள ஒரு அப்பா அம்மா இல்லாத பாசக்கார ஹீரோ, தங்கச்சிக்கு பதிலா தம்பி - ஒண்ணில்ல நாலா. அப்றோம் கூடவே சுத்துறியே செவ்வாலன்னு காமெடியன். அண்ணனுக்கு கல்யாணம்ன்னா ஹீரோயின் இண்ட்ரோ. உடனே ரெண்டு பேரயும் சேத்து வைக்க 3 காமெடி, ஒரு பாட்டு. சேந்த ஒடனே இண்டர்வல் ட்விஸ்ட் வித் ‘வாழ்க்க, நான் தான்’ன்னு அஜித்தின் வழக்கமான வசனம். பிற்பாதி மட்டும் மொக்க விஜய் படமா இல்லாம ஹரி படம் ஸ்டைல்ல வீரம்ன்னா நல்லதுக்காக கத்திய தூக்கற்து இல்ல, நல்லதுக்காக கத்திய போடுறதுன்னு செண்டிமெண்ட், காரி துப்புற வில்லன் ஃப்ளாஸ்ஃபேக், திரும்ப வீரம்ன்னா நல்லதுக்காக கத்திய போடுறது இல்ல, அந்த நல்லதுக்காக நல்லது நல்லா இருக்கணும்ன்னு கத்திய தூக்குறது, அணுகுண்டு வெடிச்சாலும், மூஞ்சில ஆரஞ்சு பழ ஒட்டிகிட்டு வர வில்லன், க்ளைமாக்ஸ் ஃபைட்டுன்னு ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ப்ப்ப்ப்ப்ப்ப்பா சுபம்.

டைரக்டர் கட்ன்னு சொன்னா ஏன்டா என் மூஞ்சில பூரான் வுட்டீங்க

படத்துல சிறப்பாக வந்த காட்சிகள்ன்னா அஜித் ஏன் டீ குடிக்கிறாருன்னு ஒரு ஃப்ளாஸ்பேக். அத கேட்ட ஒடனே அசல்ல எமனுக்கு டீ கொடுத்த தலயா இப்டின்னு கண்ணு குளமாயிறுச்சு. பரதேசி பாத்துட்டு எப்டி டீ குடிக்க கூடாதுன்னு தோணிச்சோ, அது மாதிரி ஒரு 15 டீ ஒடனே குடிக்கணும் தல உன் பேர சொல்லின்னு ஃபீலிங்க்ஸ். காதல் காட்சிகளில் ரெஃப்ரெஷிங் அஜித். எல்லாரும் லவ் பண்றாங்கன்னு Peer-Pressureல பேருக்குனு காதலிக்கற இந்த உலகத்துல கோப்புங்க்ற பேருக்காக காதலிக்கற தலயோட லவ்-ட்ராக் ஜஸ்ட் தல ப்ளோயிங்க்கு.. பிற்பாதில ஷேவ் பண்ணி தல பொண்ணு கேக்க போகும் போது, தமண்ணாவோட பாட்டி பேரும் கோப்புன்ன ஒடனே, டை அடிக்காத தல ஒரு வேள பாட்டிய பொண்ணு கேக்க போறாரோ, பாட்டிய கரெக்ட் பண்ணிடுவாரோன்னு உள்ளுக்குள்ள ஜெர்க் இருந்தாலும், அந்த பாட்டி-தல காதலையும் நாசுக்கா காமிச்ச நாசா விஞ்ஞானி சிவா ஹாட்ஸ்-ஆப்டா கண்ணா. சிங்காரவேலன் வடிவேலு மாதிரி இங்கருக்குற எல்லா இன்ஸ்ட்ருமண்ட்டயும் தப்பு தப்பா வாசிப்பான்னு தனக்கு தெரிஞ்ச அஞ்சு ட்யூனயும் ஒவ்வோரு படத்துலயும் தப்பு தப்பா வாசிச்சே புது சாங்க் உருவாக்குறான்யா டி.எஸ்.பி. வேலாயுதம் டி.வி.டி கிடைக்காத காரணத்தால், அதுல் குல்கர்னிக்கு சம்பளம் மட்டும் தந்து வேஷ்ட் பண்ணிட்டாங்க (நல்லவேள இன்னொரு வில்லனோட க்ளிப்ஸ் சிறுத்தைல இருந்தே உருவிட்டாரு சிவா). ஒலகத்துலேயே முதற்தடவ தூக்கு தண்டனைக்கு போலிஸ் வேன்ல கூட்டிட்டு போறற்த இந்த படத்துல பாக்கலாம். பெட்ரோல் பங்க்ல வெடிச்சாலும், கைலயும் மூஞ்சிலயும் தோல லைட்டா உருச்சிட்டு அடி பட்டுறுச்சாம்லா - India's Most Funniest Videos. 


லாஜிக் கருமாந்திரம்லா பாத்து விமர்சனம் பண்லாம்ன்னா கருமம் விஜய் ஃபேன்னா போயிட்டேன்ல. ஆனா அஜித் ரசிகர்கள் மாதிரி மாசத்துக்கு மனசாட்சிய அடகு வைக்காம, ஒரு கமர்சியல் சினிமா ரசிகனா பாத்தா - ஒரு படத்துக்கு என்ன வேணுமோ, தனக்கு என்ன வருமோ, அஜித்துக்கு எப்டி மாஸ் வச்சா ரசிகர்கள் மட்டுமில்லாம பொதுஜனம்லா ரசிப்பாங்களோ - அதயெல்லாம் கரெக்டா புரிஞ்சி சிவா இயக்கிருக்காரு. அஜித்த ரசிக்கவே கூடாதுன்னு மைண்ட்-செட்ல போய் உக்காந்தாலும் அந்த டெண்டர் எடுக்குற சீன் இருக்கே - மாஸீன் உச்சக்கட்டம் 6 பாலும் சிக்ஸ்ரா பொளந்துருக்காரு தல. அப்றோம் காமெடி (சந்தானம் சில இடங்களில் மட்டுமே கிச்சு கிச்சு) லவ் மொக்கன்னு விஜய் ரசிகனா என்ன திருப்டி படுத்துனாலும், திரும்பவும் 6 பாலும் ஃபவுண்ட்ரியா விளாசுற ஊஞ்சல் சீன். படத்தோட உண்மையான பலமே இப்டி ஃபுல்லா மாஸ் மாஸ்ன்னு 5 நிமிசத்துக்கு மூக்குல மசாலா தூவாம, சாகவாசமா ரொம்ப பில்ட்-அப் கொடுக்காம கரெக்ட்டான எடத்துல செட் பண்ணிருக்காரு சிவா - Neat Package. அஜித் பத்தி ஏற்கனவே ரசிகர்களே எக்ஸ்ட்ரா அடிசினல் ஷீட் வாங்கி சொல்லிட்டதால, நா நோ-கமெண்ட்ஸ். தம்பிங்க வழக்கம் போல சந்தானம், தம்பி ராமையா, காமெடி வில்லன்ஸ மட்டுமே அடிச்சி, பெரிய தலங்கள அஜித் அடிக்கும் போது அண்ண்ண்ண்ணான்னு ஃபீலிங்க்ல அனகோண்டாவே வாயில போற அளவுக்கு வாய பொளக்க, வசனம் மூலமா அஜித்துக்கு மாஸ் ஏத்துறதுக்குன்னே யூஸ் ஆகிருக்காங்க - பட் குறை ஒன்றுமில்லை. தமண்ணா கொஞ்சம் எக்ஸ்ட்ரா செளிப்போட ரீ-எண்ட்ரி தந்துருக்காங்க. அஜித் மாஸ் சீன்ஸ் தவிர்த்து மத்த எடத்துல எல்லாம் இசை - இரைச்சல். ஒளிப்பதிவு, வசனம் எல்லாம் தூள். சின்ன சின்ன விஷயங்கள்ல கூட நாசுக்கா மாஸ ஏத்துன சிவாக்கு வாழ்த்துக்கள் - குறிப்பா முடி பறக்கற்து, வீபுதி தெறிக்கற்து, சண்ட முடிஞ்ச ஒடனே லைட்டா ரத்தத்த காட்றதுன்னு. 


வீரம் -ரோகித் ஷர்மா இன்னிங்க்ஸ் மாதிரி தாராளமா ஒன்ஸ் பாக்கலாம்

வருகைக்கு நன்றி

அம்மா போல காதலி

$
0
0
அது ஏன்?

அது ஏன் நெரய பசங்களோட கேர்ள்-ஃப்ரெண்ட்ஸ் அவனோட அம்மா மாதிரியே நடந்துக்குறாங்க?
  • ஃபோன் பண்ணி எடுக்கலன்னா விடாம ஃபோன் பண்ணிட்டே இருக்கற்து, அட்டெண்ட் பண்ணா எங்க இருக்க, எவனோட இருக்கன்னு கேக்கற்து?
  • வெளிய சாப்ட போறேன்னு சொன்னாதான் ‘இல்ல நான் சமைக்கிறேன்’னு சொல்லி புடிக்காத டிஸ்ஸா செய்யற்து. அது ஓக்கேன்னு சொன்னா ‘ஒழுங்கா உண்மைய சொல்லு’ன்னு மெரட்டுறது. சரி, உண்மையா இருப்போம்ன்னு ‘கேவலமா இருக்கு’ன்னு சொன்னா ’ம்ம்ம்.. உனக்குல்லா இவ்ளோ செய்யற்தே பெருசு’ன்னு மூஞ்ச தூக்கி வச்சிக்கற்து.
  • பசங்களுக்கு ஒரு டாப்பிக் பேசுனா புடிக்காதுன்னா அதயே பேசிட்டு இருக்கற்து. ‘ஏய் இங்க கேளேன், நேத்து என்னாச்சி தெரியுமா, பக்கத்து வீட்டுல..’ன்னு வாரமலர் நடுபக்கம் கிசுகிசுவ எல்லாம் நாம கேக்கணும்ன்னு எதிர்ப்பார்க்கற்து.


  • நாம ஏதாச்சும் ஒரு சிந்தனைல இருந்தா, ‘என்னாச்சி, ஏன் டல்லா இருக்க? சொல்லு என்ன பிரச்சன, ஏன் என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேங்கிற’ன்னு இல்லாத ஒரு பிரச்சனாவ உருவாக்கி அவன சிநேகாக்கு கட்டி வச்ச கதயா. நமக்கே நம்ம மேல ஒரு சந்தேகம் ‘ஒரு வேல பிரச்சன இருக்கோ’ன்னு.
  • ஏதாச்சும் சண்ட வந்தா, பேசாம மூஞ்ச தூக்கி வச்சிக்கற்து. பசங்களும் பேசாம வுட்டுட்டா வாய் ஓயாம நம்பள கொற சொல்லிட்டே இருக்கற்து - ‘வாய தொறந்து பேசுறானா பாரு. தப்பு பண்ணவன் எப்டி பேசுவான்’ன்னு. சரி பேசலாம்ன்னு போனா M சைஸ்ல இருக்குற பிரச்சனைய XXL சைஸ்க்கு பெருசாக்கி இன்னும் ரெண்டு மணி நேரம் சண்ட போடுறது. அப்பாடா சமாதானம் ஆயாச்சுன்னு இருந்தா, மூணு மாசம் முன்னாடி நாமளே மறந்த ஒரு சின்ன விஷயத்த தூசி தட்டி, பார்ட்-2 ஸ்டார்ட் பண்றது
  • நமக்கு புடிச்ச ஹீரோயின் அவங்களுக்கு புடிக்காம இருக்கற்து. குறிப்பா நம்ம கண்ணுக்கு அழகா தெரியுற மத்த பொண்ணுங்க எல்லாம் அவங்க கண்ணுக்கு அட்டா தெரியற்து.

இது Damn Co-incidenceஆ இல்ல பசங்க இயல்பாவே அவங்க அம்மாவோட குணாதிசயங்களோட இருக்குற பொண்ணுக்கு Attract ஆகுறாங்களா? சரி, இப்டி எழுதுறன்னா நீ யார லவ் பண்றன்னு கேக்கலாம். ஹீ ஹீ. ஹார்ட்-அட்டாக் வந்தா தான் ஹார்ட்-ஸ்பெஷலிஸ்ட் ஆக முடியுமா என்ன?

எல்லாம் கேள்வி ஞானம் தான் :)

வருகைக்கு நன்றி!!

மான் கராத்தே - படம் பார்த்து விமர்சனம் சொல்

$
0
0
1. அப்பாடா டிக்கெட் கெடச்சாச்சு, தட்றோம் தூக்குறோம் 8-) சிவகார்த்திகேயன்டா.. நாலாவது ஹிட்டா


2. முதற்பாதி நல்லா தானே போயிட்டுருக்கு


3. ரெண்டாவது பாதி தொடங்குன கொஞ்ச நேரத்துலேயே


4. நடுவுல ஃப்ரெண்ட்டு ஒருத்தன் ஃபோன் பண்ணி, ‘மச்சான் படம் எப்டிடா இருக்கு இது வரைக்கும்’ன்னு கேக்றான்


5. ஆஹா, வசமா சிக்கிட்டோமோ? படத்த முடியிப்பாய்ங்களா, மாட்டாய்ங்களா? ஃபைட்டு வேற போடுறானே..


6. க்ளைமாக்ஸ் வந்தாச்சு - ஆப்பரேட்டர் கோடான கோடி நன்றி


7. சிவகார்த்திகேயன் ஒன் மேன் ஷோ, அனிருத் இசை, ஒளிப்பதிவு தவிர்த்து மத்ததெல்லாமே




8. ஒன்ஸ்-மோர் பாக்கலாமா ப்ரோ?


9. அவ்ளோதானா விமர்சனம்? டியீட்டேய்ல்லா சொல்லுங்களேன்?


மான் கராத்தே - ரொம்பவே சுமார் மூஞ்சி அண்ணாத்தே



வருகைக்கு நன்றி


கதை திரைக்கதை இயக்கம் - ஐ.பி.எல்

$
0
0
உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்னா என்னது?

அதாவது 6 மேட்ச்சு ஜெயிச்ச இருமாப்புல ஐ திங்க் டிஃப்பரண்ட்ன்னு 2 மார்க் கொஸ்டீனுக்கு 16 மார்க் வாங்க ஆசப்பட்டு கத எழுதி முட்ட வாங்குன கதயா கடசி கட்டத்துல கதற கதற ரேப் ஆகி வலிக்கலையேன்னு இருக்குற ராஜஸ்தான் ராயல்ஸ் ஓர் எடுத்துக்காட்டு


5 மேட்சு தோல்வி, உள்ளூர் ஓணான ஊமக்குத்து குத்துன மெதப்புல டாட்டா பை பைன்னு மும்பை இந்தியன்ஸ்ஸ புளிப்பு காட்டி, கடசில அவங்க கூட மோத போறோன்ன ஒடனே, ‘அய்யய்யோ.. தோச மாத்ரி ரெண்டு வாட்டி பொறட்டி போட்டாச்சு, அடுத்து நமக்கு ஆப்பு வச்சிருவாங்களோ’ன்னு பயம் இருந்தாலும் ‘வாடா வாடா, இன்னும் திருப்பி கொடுக்கணும்ன்னு’ன்னு ஹீரோ கிட்ட அடி வாங்க போறோன்னு தெரிஞ்சும் ரேப் காட்சிக்கு ரெடி ஆகுற வில்லன் அடியாள் மாதிரி இருக்குற சென்னை சூப்பர் கிங்க்ஸ்ஓர் எடுத்துக்காட்டு

நாமக்கல் அடுத்து அதிகமா முட்ட உற்பத்தி செய்யுற காப்டன வச்சிட்டு அம்பியா இருந்த டீம திடீர்ன்னு ‘ஏன்டா என்ன அடிச்ச, இந்தா வாங்கிக்கோ’ன்னு எல்லா டீமுக்கும் ஷாக்கிங்கா திருப்பி கொடுத்தாலும் ‘அய்யோ ஒரு சிங்கத்து கிட்ட இருந்து தப்பிச்சு இன்னொன்னு கிட்டெ மாட்டிக்கிட்டோமே’ன்னு லைட்டா பீதில இருக்குற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ஓர் உதாரணம்.



ஆக்சன்ல காசு இருந்தும், எனக்கும் பல்லி முட்டாய், தேன் முட்டாய் தான் வேணும்ன்னு உலகத்தரம் வாய்ந்த அசோக்கு திண்டா, வருண் ஆரோன்னு இவங்கள எடுத்து 130 அடிச்சா கூட டிஃப்பண்ட் பண்ணுவோம்லனு நெஞ்ச நிமிர்த்திட்டு வந்து அங்கேயே அடி வாங்கி ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆன கீப் ட்ரையிங், கீப் ஆன் ட்ரையிங்ன்னு இருக்குற ராயல் சேலஞ்சர் பெங்களூருஓர் எடுத்துக்காட்டு

கோவிலுக்கு வந்தோமா, சாமி கும்டோமா, சுண்டல் சாப்டோமா, வூட்டுக்கு போய் வாயுவ வுட்டோமான்னு கடமைக்குன்னு விளையாட வந்து ஆல் ஏரியால எக்கி எக்கி அடி வாங்குனாலும் ‘அய் வலிக்கலையே வலிக்கலையே’ன்னு இருக்குற டெல்லி டேர்டெவில்ஸ்ஓர் உதாரணம்.

வீரப்பன், ஓசாமா அடுத்து அதிகமான தலைமறைவு வாழ்க்கய அவங்க ரசிகர்கள வாழவச்சிட்டு, ‘எவ்ளோ செலவானலும் பரவால டாக்டர், ப்ளீஸ் காப்பத்திருங்க’ன்னு பெரிய பணமாற்றத்த நிகழ்த்தி, 4-5ன்னு இருந்த ஹார்ட்-பீட்ட 80-90ன்னு ஏற வச்சு ‘நான் மீண்டும் வருவேன்’ன்னு மம்மி பட வில்லன் மாதிரி வந்தாலும், ஸ்கிரிப்ட் சேஞ்ச்ல அப்பட்டமா மாட்டிக்கிட்ட அப்றோம் ‘அய்யய்யோ, இதயே சி.எஸ்.கே செய்யும் போது ஃபிக்ஸிங், தோனி சிக்ஸ் அடிச்சா சீனி மாமாடான்னு சொல்லி குஜால்டியா இருந்தோமே, இப்ப என்ன சொல்லி தப்பிக்கறது’ன்னு ப்ளான் பண்ணி கடசில ‘ஹே பாரு, சச்சின் உத்தமி கவுதமி, அவர்கூட டென்ஸன்ல இருந்தாரு.. இத போய் ஃபிக்ஸிங் சொல்றியே’ன்னு தம் கட்டி ‘பாரு, ட்ராவிட் கூட கோவமானாரு, அவர் போய் பண்ணுவாரா’ன்னு கூட ஸப்பொர்ட்க்கு ஆள் சேத்து விஜய் நடிச்சா மொக்கன்னு சொல்லி அதே ஸ்கிரிப்ல அஜித் நடிச்சா ராக்கிங்யா, பிச்சிட்டயா, உன் ரசிகன்யான்னு வெளி வர ஸீலிப்பர் செல்ஸ் மாதிரி இருக்குற மும்பை இந்தியன்ஸ்ஓர் உதாரணம்.

அப்போ மீதி ரெண்டு? அட போப்பா அதான் எல்லாமேன்னு ஸ்கிர்ப்ட்ன்னு ஆயிர்ச்சே.. அம்பானி நாமம் வாழ்க !!

வருகைக்கு நன்றி !

அயலும் நிஜனும் தம்மில்

$
0
0
எது நல்ல படம்? போரடிக்காம போச்சுன்னா நல்ல படம். கொடுத்த காசுக்கு ஒர்த்தா இருந்தா நல்ல படம். ஒரு ஃபீல் குட்டா இருந்தா நல்ல படம். இந்த மாதிரி ஒரு மனுஷன நம்ம லைப்ல இருந்துருக்கலாமோன்னு ஃபீல் பண்ண வச்சா நல்ல படம். நெஞ்ச கணக்க வைக்குற மாதிரி இருந்தா நல்ல படம். படம் முடிஞ்சும் நம்மள தூங்கவிடாம, சீன்ஸ்லா கண்ணுலேயே இன்னும் இருந்தா நல்ல படம். இது எல்லாம் ஒரு படத்துலேயே இருந்தா? - அது உண்மையிலே அற்புதமான படம் - அப்ப அயலும் நிஜனும் தம்மில் ஒரு அற்புதமான படம்.


தமிழ் சினிமாவுல க்ளிச்சேவா வர காட்சி - உயிருக்கு போராடிட்டு இருக்குற ஒரு சின்ன கதாபாத்திரம், டாக்டர் வராரு, கண்ணாடிய கெளட்டிட்டே ‘சாரி, நாங்க எவ்ளவோ ட்ரை பண்ணோம். பட்..’இதுக்கு பின்னாடி இருக்குற ஒரு 2 மணி நேர கதய இயக்குநர் லால் ஜோஸ் கொடுத்துருக்காரு. பட், டாக்டர் ஹீரோ ப்ரித்வி கண்ணாடிய கெளட்டல, டயலாக்கும் சொல்லல.. இப்டி படம் முழுசா தேவையில்லாத வசனங்கள், ஆரஞ்சு பழம் மாதிரி நெஞ்ச புழியுறேன் எமோசனல் சீன்ஸ்ன்னு இல்லாம இசை, அமைதி, முகபாவனை வச்சே நமக்கு புரிய வைக்கிறாரு இயக்குநர். டாக்டர்ன்னா நமக்குன்னு இருக்குற ஒரு இமேஜ் - பணம் புடுங்குறவரு, காச வச்சா தான் ஆப்பரேஷன் பண்ணுவேன்னு அடாவடி பண்றவரு. ஆனா இந்த படத்துல அப்டி டாக்டர தவறா சித்தரிக்காம, எல்லா கதாபாத்திரங்களும் நல்லவங்களாவே நடமாட விட்டுருக்குறது மிகப்பெரிய ப்ளஸ் - படம் பாக்கும் போதே அவ்ளோ ஒரு பாசிட்டிவ் வைப். காலேஜ் செகண்ட் இயர்ல ஒடம்பு சரியில்லாம சீரியஸ்ஸான நெலமைல ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ, பிரதாப் போத்தன் மாதிரி ஒரு டாக்டர் தான் என்ன காப்பாத்தினாரு, காசு முக்கியம்ன்னு பாக்காம. இன்னி வரைக்கும் நான் ஒடம்பு சரியில்லன்னு அவர பாக்க போனா என்கிட்ட கன்சல்டிங் ஃபீஸ் வாங்கற்தில்ல ‘ஆல்ரெடி நான் நெறய வாங்கிட்டேனே கார்த்தி’ன்னு. இப்டி நாம வாழ்ந்து பழக்கப்பட்ட நல்ல கேரக்டர்ஸ் எல்லாம் திரைல பாக்கும் போது ஒரு ஈர்ப்பு கெடைக்குமே - அப்டியான படம்.

தொண்டய அடைக்குற ஷாட். ரெண்டு நிமிஷம் Pause பண்ணி.... ப்ளிச்ச்ச்


ஒரு ஃபெயில்லான ஆப்பரேஷனால் காணாமல் போன ப்ரித்வி, அப்டியே நான்-லீனியர் நரெஷன்ல அவரோட கல்லூரி, காதல் வாழ்க்கை - அவருக்கும் ப்ரதாப் போத்தனுக்கும் இடையே இருக்கும் ரோல்-மாடல் தாண்டிய உறவு என்று பயணிக்கும் இன்னொரு கதை - ப்ரித்வி எங்கே? அவரின் ஃப்ளாஸ்பேக் காதல் கைகூடியதா? இப்டி ரெண்டு காலகட்ட த்ரில்லரில் Parallela பயணிக்கிற திரைக்கதை. ப்ரித்விராஜ் எவ்வளவு அற்புதமான நடிகன். நம்ம தமிழ்சினிமாவுல தான் அவர டம்மி டப்பாசா ஆக்கிட்டோம். படம் முழுக்க தன்னோட இயல்பான நடிப்பால கவர்ந்து இழுத்துட்டாரு. தன் காதலியோடு நடக்கவிருக்கும் ரகசிய திருமணத்திற்கு தடங்கல் ஆரம்பிப்பதிலிருந்து  ஒரு 15 நிமிஷம் அவரின் நடிப்பு - டாப் க்ளாஸ். அழுகை கூட அவ்ளோ இயல்பா வருதுய்யா இவருக்கு. கலாபவன் மணிக்கும் அவருக்கும் இருக்கும் என்ன கைய்ய புடிச்சி இழுத்தியா தகராறால் ஒருகணம் அவர் கல் நெஞ்சகாரனாக ஆகும் இடமாகட்டும், மணியின் பெண்ணை ஸ்கூல்ல பார்த்து ஃபீல் பண்றதாகட்டும் எங்குமே ப்ரித்வியின் நடிப்பு சோடை போகவில்லை. இது நான் பார்க்கும் ப்ரித்வியின் மூண்றாவது படம் - இனிமேலாச்சும் பெரிய இயக்குநர் படத்துல ஓரமா ஒரு செகண்ட் ரோல் கெடச்சாலே வரம்ன்னு நெனச்சு தமிழ் சினிமா வுட்டு ஓரமா போயிறாம நல்ல கதயா தேர்ந்தெடுத்து நடிங்க பாஸ் - காவியத்தலைவனுக்கு வெயிட்டிங்.

லூசு கேரக்டர்ல பாத்து பழக்கப்பட்ட ப்ரதாப் போத்தன் இதுல செம லவ்வபள் காட்-ஃபாதர் ரோல். ப்ரித்வியிடம் சீனியர் டாக்டராக பழகாமல், அன்பால் திருத்தும் இடத்தில் எல்லாம் செமயா ஸ்கோர் பண்ணிருக்காரு. நரேன், ரம்யா நம்பீசன், தோமச்சன் இப்டி எல்லா கதாபாத்திரங்களும் தேவயில்லாத ஆணியா இல்லாம படத்த நகர்த்தி செல்வதற்கு உறுதுணையாக இருக்கின்றனர். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கூடுதல் பலம். படம் முடிஞ்ச ஒடனே யூ-ட்யூப்ல பாட்ட திரும்ப கேக்கணும்ன்னு இருந்துச்சு. க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் அவசரமா முடிச்ச மாதிரி ஒரு உணர்வு இருந்தாலும், படம் முடிய கூடாதுன்னு நம்ம உள்ளுணர்வு எதிர்பார்த்ததால இது குறையா தெரிஞ்சிச்சோ?

Flawless படம்ன்னு சொல்ல முடியாது. ஆனா அற்புதமான நடிப்பு, மேக்கிங், ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இதுக்காகவே அயலும் நிஜனும் தம்மில் கண்டிப்பா பாக்க வேண்டிய படம் - டோண்ட் மிஸ்

அயலும் நிஜனும் தம்மில் - படம் பாக்க லைன்ல போய் நில்

வருகைக்கு நன்றி !!

Viewing all 46 articles
Browse latest View live